search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boat ride"

    • மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு குழாம் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் விடுமுறையின் போது குடும்பத்துடன் முட்டுக்காடு படகு குழாமுக்கு வந்து படகு சவாரி செய்வது வழக்கம்.

    குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் முட்டுக்காடு படகு குழாமில் உள்ள மோட்டார் படகுகள், கால்களால் இயக்கக்கூடிய மிதி படகுகள், நீரில் பாய்ந்து செல்லக்கூடிய மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சவாரி செய்து மகிழ்வார்கள்.

    இந் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மிச்சாங் புயல் மழையின் காரணமாக பருவநிலையில் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இதனால் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் முட்டுக்காடு முகத்துவார பகுதி தற்போது நீர் வற்றி ஆங்காங்கே மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இங்கு தற்போது மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து முட்டுக்காடு படகு குழாமில் படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மிச்சாங் புயல் போன்ற இயற்கை சீற்றத்தின் காரணமாகபருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு முட்டுக்காடு முகத்துவாரத்தில் தண்ணீர் வற்றி உள்ளது. ஓரிரு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கலாம். இதன் காரணமாக மோட்டார் படகுகளை இயக்க முடியவில்லை. பொதுமக்களின் வசதிக்காக மிதி படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் ஒரு சிலர் மட்டுமே அந்த மிதி படகுகளை பயன்படுத்தி சவாரி சென்றனர். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • குன்னூரில் தொடர்மழை எதிரொலி
    • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    தொடர் மழை காரண மாக மலைப்பா தையில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் சுற்று லாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தற்போது தவிர்க்க வேண்டு மென மாவட்ட நிர்வாகம் அறிவு றுத்தி உள்ளது.

    இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தற்போது கூடலூர் மார்க்க மாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக வருகி றார்கள். இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு ள்ள மினி படகு இல்லத்தில் படகு சவாரி செய்வதற்காக ஆர்வத்துடன் சென்றனர்.

    ஆனால் மழை காரணமாக அங்குள்ள ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்க இயலாமல் திரும்பி சென்றனர்.

    • கூடுதல் படகுகள் இயக்கப்படுமா?
    • சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், 100 பேர் நின்றாலும், சரியாத கையில் பலமான படகு தளம் அமைக்க உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு ஏராளமானோர் வருகின்றனர்.

     படகுகள் மூலம் பயணித்து பேரடைஸ் தீவுக்கு சென்று கடலில் விளையாடி மகிழ்வதை சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். கோடை விடுமுறை என்பதால் கடந்த மாதம் முழுவதுமே புதுவைக்கு குடும்பம், குடும்பமாக வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது.

    ஆனால், பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதல் படகுகள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பேரடைஸ் தீவில் படகு நிறுத்தும் இடம் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமடையவில்லை.

    இதையடுத்து பார்வையிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், 100 பேர் நின்றாலும், சரியாத கையில் பலமான படகு தளம் அமைக்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து படகுகளை சரிவர இயக்காமல், தனியார் படகு குழாமிற்கு ஆதரவாக ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுந்தது. இதனால் மீண்டும் அமைச்சர் லட்சுமிநாராயணன் படகு குழாமில் திடீர் ஆய்வு மேற்கொண்டு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். படகுகளை சீரமைத்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கோடை விடுமுறையான  என 2 நாட்களில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து படகு சவாரி மூலம் ரூ.16 லட்சம் வருமானம் வந்துள்ளது.

    போதிய படகுகள் இல்லாமல், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் இல்லாத நிலையிலும் ரூ.16 லட்சம் 2 நாளில் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது.

    கோடை விடுமுறை முடிந்தாலும் வார விடுமுறை, பண்டிகை நாட்களில் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிவர். எனவே அரசு கூடுதல் படகுகளை இயக்கவும், சுற்றுலா பயணிகள் காத்திருக்காமல் பயணம் செய்யவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
    • மார்ச் மாதத்துக்குள்முடிக்க இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    கோவை

    கோவை குறிச்சி குளத்தில்படகு சவாரி இயக் குவதற்கான வசதிகள் உள்ளதா என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.

    கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி, குமாரசாமி, செல்வம்பதி, கிருஷ்ணாம்பதி மற்றும் குறிச்சி குளங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில் மேம் பாட்டு பணிகள் நடந்து வருகின்றன,

    குறிச்சி குளத்தில் சைக்கிள் டிராக், 20 அடி உயர திருவள்ளுவர் சிலை, அலுமினியத்தால் ஆன ஜல்லிக்கட்டு சிலை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஒயிலாட்டம் சிலை, குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்படுகின்றன. இந்த பணிகளை, 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள்முடிக்க இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    வருவாய் ஈட்டும் வகையில், வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரிய களத் தில் இயக்குவதுபோல், குறிச்சி குளத்திலும் படகு சவாரி இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட் டுள்ளது.

    இந்தநிலையில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்று லாத்துறை மேலாண் இயக்குனர் சந்திப் நந்துாரி ஆகியோர் குறிச்சி குளத்ததில் ஆய்வு செய்தனர். அப்போது குறிச்சி குளத்தின் வரைபடத்தை மாநகராட்சி கமிஷனர் பிதாப் காண்பித்து என்னென்ன பணிகள் செய்யப்படுகின்றன என்பது குறித்து விளக்கினார். அப்போது, படகு சவாரி இயக்குவதற் கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வது குறித்து, சுற்றுலா துறையினருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

    • பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள், சாலைகள் ஆகியவற்றை சீரமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
    • அனைத்து கோரிக்கை–களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவோம் என ஒன்றியகுழு தலைவர், ஆணையர் ஆகியோர் உறுதி அளித்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமை வகித்தார்.வட்டாரவளர்ச்சி அலுவலர் வெ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் ஒன்றியகுழு துணை தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வழக்கறிஞர் அருள்நம்பி, சாகுல்ஹமீது, செய்யது முகமது, சுதாகர், பாமா, அமுதா, அருந்ததி, ராஜலட்சுமி ஆகியோரும், அதிமுகவை சேர்ந்த சிவ.மதிவாணன் (ஓபிஎஸ்அணி), மீனவராஜன், கருப்பையன், கவிதா, உமா (அதிமுக எடப்பாடி அணியை சார்ந்தவர்கள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தங்கள் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள், சாலைகள் ஆகியவற்றை சீரமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர். அனைத்து கோரிக்கை–களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவோம் என ஒன்றியகுழு தலைவர், ஆணையர் ஆகியோர் உறுதி அளித்தனர்.

    மனோரா சுற்றுலா தலத்தில் கூடுதலாக ஒரு படகு இயக்கப்படும் எனவும், மேலும் ஒரு கழிப்பறை கட்டப்படும் எனவும் தெரிவித்தனர். கூட்டத்தில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சு.சடையப்பன் (கி.ஊ) நன்றி கூறினார்.

    • படகு சவாரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
    • தண்ணீரில் நடந்து செல்லும் வகையில் மிதவை நடைபாதை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    கோவை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளக்கரைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

    இதில் உக்கடம்- சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள வாலாங்குளத்தின் கரைப்ப குதியில் நடைபாதை, சிறார்களுக்கான விளையா ட்டு உபகர ணங்கள், இருக்கைகள், தண்ணீரில் நடந்து செல்லும் வகையில் மிதவை நடைபாதை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் மாநகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த வாலாங்குளத்தில் பொழுது போக்கு பயன்பாட்டுக்காக படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினருடன் இணைந்து ரூ.45 லட்சம் மதிப்பில் படகு இல்லம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான படகுகளும் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இந்த படகு இல்லத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (24-ந் ேததி) திறந்து வைக்கிறார். ஈச்சனாரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தபடியே இந்த படகு இல்லத்தை திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்து மாநகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    வாலாங்குளம் படகு இல்லத்தில் பெடல் படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் என மொத்தம் 20 படகுகள் இயக்கப்பட உள்ளன. பெடல் படகில் 2 பேர் செல்லலாம். துடுப்பு படகில் ஓட்டுபவர் உள்பட 4 பேர் செல்லலாம். மோட்டார் படகில் ஒரே சமயத்தில் 8 பேர் செல்லலாம்.

    30 நிமிடத்துக்கு பெடல் படகுக்கு ரூ.300, துடு ப்பு படகுக்கு ரூ.350, மோட்டார் படகுக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தில் தற்காலிகமாக 20 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது என்றனர்.   

    கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மு.க.ஸ்டாலின் அவருடைய மனைவியுடன் படகு சவாரி செய்தார். #MKStalin
    கொடைக்கானல்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அங்கு பிரசாரத்தை முடித்து கொண்டு மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக கடந்த 8-ந் தேதி நள்ளிரவு கொடைக்கானலுக்கு வந்தார். அவருடன் மனைவி துர்காவும் வந்திருந்தார்.

    அவரை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். ஏரிச்சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர் தங்கியுள்ளார். இதை தொடர்ந்து நேற்று மதியம் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் நட்சத்திர ஏரிக்கு வந்தார். அங்கு அவர் மனைவியுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.

    நட்சத்திர ஏரி பகுதியில் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க. வினர் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து கொண்டனர். 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அவர் இன்று (வெள்ளிக்கிழமை) மதுரைக்கு புறப்பட்டு செல்வதாக கூறப்படுகிறது.  #MKStalin
    கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம் நீடித்ததால், விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி:

    சென்னையில் வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக நேற்று மாலை கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.

    கன்னியாகுமரி கடலில் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்ததோடு, பயங்கர சீற்றத்துடனும் காணப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மாலையிலேயே விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    திருவள்ளுவர் சிலையை பார்க்க அழைத்து செல்லப்பட்ட பயணிகளும் அவசர, அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

    இதுபோல நேற்று காலையிலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் பயங்கர சீற்றம் காணப்பட்டது. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்தை ரத்து செய்தது.

    இன்றும் அங்கு கடல் சீற்றம் நீடித்தது. இதனால் 2-வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் குகன், பொதிகை, விவேகானந்தா படகுகள் கரையில் ஓய்வெடுத்தன.

    கடல் சீற்றம் காரணமாக இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர், கோவளம், கீழ மணக்குடி, மேல மணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் அவர்களின் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    கட்டுமரம், வள்ளத்தில் கடலுக்கு செல்வோரும் இன்று பணிக்கு செல்லவில்லை. அலைகளின் சீற்றத்தை கண்டு அவர்கள் கட்டுமரங்களை கரையில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். விசைபடகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    இதுபோல கடற்கரை பகுதி முழுவதும் பயங்கர சூறைக்காற்றும் வீசியது. சாலைகளில் நடந்து செல்லும் பயணிகள் முகத்தை மூடியபடி சென்றனர்.

    இன்று அதிகாலையில் சூரியோதயம் பார்க்க சென்ற பயணிகள் அதன்பின்பு கடலில் குளிக்க சென்றனர். அவர்களை பாதுகாப்பு கருதி சுற்றுலா போலீசார் அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர்.

    கன்னியாகுமரியில் இன்று காலை வழக்கத்துக்கு மாறாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாபயணிகள் செல்ல வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் 3 படகுகளை இயக்கி வருகிறது.

    தினமும் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இன்று காலை வழக்கத்துக்கு மாறாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. மேலும் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் படகு போக்குவரத்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் படகுகள் இயக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர்.

    இதனால் படகில் செல்ல காத்திருந்த ஏராளமான சுற்றுலாபயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சென்னை அருகே நடுக்கடலில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் கன்னியாகுமரி வரை நீடித்து கடல் சீற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.


    கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக 3வது நாளாக படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படகு சவாரிக்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நடந்து வருகிறது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் குவிந்து வருகிறார்கள்.

    அவர்கள் காலையில் சூரிய உதயம், மாலையில் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்து செல்கிறார்கள். மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி கடலில் ஏற்படும் மாற்றம் காரணமாக படகு போக்குவரத்தை சீராக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றும், அதற்கு முந்திய நாளும் கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் படகு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இன்று காலை கடல் சீற்றம் சற்று தணிந்ததை தொடர்ந்து 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. 10 மணி அளவில் கடல் அலையில் மாற்றம் ஏற்பட்டு சீற்றமாக இருந்தது. இதனால் படகு போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. படகு சவாரிக்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


    கன்னியாகுமரியில் சூறாவளி காற்றால் படகில் பயணம் செய்ய இன்று காலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறுகிறது.

    நேற்று காலை வழக்கம்போல 8 மணிக்கு சுற்றுலாபயணிகளை ஏற்றிக்கொண்டு படகு போக்குவரத்து நடந்தது. இந்தநிலையில் காலை 10 மணி அளவில் திடீரென கடலில் மாற்றங்கள் ஏற்றப்பட்டது. சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இதனால் படகு போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

    அதன்பிறகு காலநிலையில் சகஜநிலை திரும்பியதை தொடர்ந்து பகல் 2.45 மணிக்கு மீண்டும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை நடந்தது.

    இந்தநிலையில் இன்று காலை முதலே கன்னியாகுமரியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறாவளி காற்றும் வீசியதால் 10 அடி முதல் 15 அடி உயரம் வரை அலைகள் எழுந்தது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    படகு துறையின் நுழைவுவாயிலும் பூட்டப்பட்டிருந்தது. படகு இயங்காதது தொடர்பான அறிவிப்பு பலகையும் தொங்கவிடப்பட்டிருந்தது. படகில் பயணம் செய்ய இன்று காலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இன்று காலை சூரிய உதயத்தை காண அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் முக்கடலில் புனித நீராடி விட்டு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை 16 கண் பாலம் பகுதியில் பாறைகள் தெரிய தொடங்கின. #Hogenakkal #Cauvery
    பென்னாகரம்:

    கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்த கனமழையால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து குறைந்து நேற்று வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே ஒகேனக்கல்லுக்கு வந்தது.

    இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து சின்னாறு வழியாக மணல் திட்டு வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இதனால் 15 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் உற்சாகத்துடன் பரிசல் சவாரி செய்தனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதன் காரணமாக அணையின் உபரிநீர் 16 கண் பாலம் வழியாக திறந்து விடப்பட்டது.

    நீர்வரத்து குறைந்ததால் நேற்று முன்தினம் இரவு அணையில் இருந்து உபரிநீர் திறப்பது அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் 16 கண் பாலம் பகுதியில் உள்ள பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. கடந்த 2 வாரத்தில் மட்டும் மேட்டூர் அணையில் இருந்து 110 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Hogenakkal #Cauvery

    ×