search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறிச்சி குளத்தில் படகு சவாரி
    X

    குறிச்சி குளத்தில் படகு சவாரி

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
    • மார்ச் மாதத்துக்குள்முடிக்க இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    கோவை

    கோவை குறிச்சி குளத்தில்படகு சவாரி இயக் குவதற்கான வசதிகள் உள்ளதா என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.

    கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி, குமாரசாமி, செல்வம்பதி, கிருஷ்ணாம்பதி மற்றும் குறிச்சி குளங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில் மேம் பாட்டு பணிகள் நடந்து வருகின்றன,

    குறிச்சி குளத்தில் சைக்கிள் டிராக், 20 அடி உயர திருவள்ளுவர் சிலை, அலுமினியத்தால் ஆன ஜல்லிக்கட்டு சிலை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஒயிலாட்டம் சிலை, குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்படுகின்றன. இந்த பணிகளை, 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள்முடிக்க இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    வருவாய் ஈட்டும் வகையில், வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரிய களத் தில் இயக்குவதுபோல், குறிச்சி குளத்திலும் படகு சவாரி இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட் டுள்ளது.

    இந்தநிலையில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்று லாத்துறை மேலாண் இயக்குனர் சந்திப் நந்துாரி ஆகியோர் குறிச்சி குளத்ததில் ஆய்வு செய்தனர். அப்போது குறிச்சி குளத்தின் வரைபடத்தை மாநகராட்சி கமிஷனர் பிதாப் காண்பித்து என்னென்ன பணிகள் செய்யப்படுகின்றன என்பது குறித்து விளக்கினார். அப்போது, படகு சவாரி இயக்குவதற் கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வது குறித்து, சுற்றுலா துறையினருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×