search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "valangulam"

    • மக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
    • நேரு ஸ்டேடியம் அருகே மாரத்தான் போட்டியும் நடக்கிறது.

    கோவை

    கோவையில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தனியார் தன்னார்வ அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும் கோவையின் வரலாறு, கலாசாரம் ஆகியவற்றை போற்றும் வகையில் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 15-வது முறையாக கோவை விழா நிகழ்ச்சி நாளை (4-ந் தேதி) தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை (8-ந் தேதி) வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக லேசர் ஷோ சுங்கம் வாலாங்குளத்தின் கரைப்பகுதியில் நேற்று முதல் மாலை நேரத்தில் காட்சிப் படுத்தப்படுகிறது.

    இதனை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இந்த லேசர் ஷோவை அதிகளவிலான மக்கள் குடும்பத்தினருடன் வந்து புகைப்படங்கள், வீடியோ எடுத்து பார்த்து ரசித்தனர்.

    வரும் 8-ந் தேதி வரை லேசர் ஒளிக்காட்சி நிகழ்ச்சி நடக்கிறது. இதனை தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் பீளமேட்டில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டி நடக்கிறது.

    மேலும், அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஒருமை பயணம் என்ற பெயரில், பல்வேறு மதம் சார்ந்த இடங்களுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இறுதியாக போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் (5-ந்தேதி) ரேஸ்கோர்சில் இருந்து சரவணம்பட்டி வரை பழங்கால கார்களின் அணிவகுப்பு ஊர்வலமும், சுங்கம் வாலாங்குளம் கரையில் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை உணவு, இசை, கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    சனிக்கிழமை (7-ந் தேதி) ஆர்ட் ஸ்ட்ரீட் என்ற பெயரில் உள்ளூர் ஓவியர்களின் வரைபடக் கண்காட்சி, கலந்துரையாடல் நிகழ்வு ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு கொடிசியா அரங்கில் செட்டிநாடு திருவிழா நிகழ்ச்சியும், தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் கண்காட்சியும் நடக்கிறது.இறுதி நாளான ஞயிற்றுக்கிழமை (8-ந் தேதி) கோவை நேரு ஸ்டேடியம் அருகே மாரத்தான் போட்டியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துள்ளனர்.   

    • படகு சவாரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
    • தண்ணீரில் நடந்து செல்லும் வகையில் மிதவை நடைபாதை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    கோவை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளக்கரைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

    இதில் உக்கடம்- சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள வாலாங்குளத்தின் கரைப்ப குதியில் நடைபாதை, சிறார்களுக்கான விளையா ட்டு உபகர ணங்கள், இருக்கைகள், தண்ணீரில் நடந்து செல்லும் வகையில் மிதவை நடைபாதை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் மாநகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த வாலாங்குளத்தில் பொழுது போக்கு பயன்பாட்டுக்காக படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினருடன் இணைந்து ரூ.45 லட்சம் மதிப்பில் படகு இல்லம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான படகுகளும் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இந்த படகு இல்லத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (24-ந் ேததி) திறந்து வைக்கிறார். ஈச்சனாரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தபடியே இந்த படகு இல்லத்தை திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்து மாநகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    வாலாங்குளம் படகு இல்லத்தில் பெடல் படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் என மொத்தம் 20 படகுகள் இயக்கப்பட உள்ளன. பெடல் படகில் 2 பேர் செல்லலாம். துடுப்பு படகில் ஓட்டுபவர் உள்பட 4 பேர் செல்லலாம். மோட்டார் படகில் ஒரே சமயத்தில் 8 பேர் செல்லலாம்.

    30 நிமிடத்துக்கு பெடல் படகுக்கு ரூ.300, துடு ப்பு படகுக்கு ரூ.350, மோட்டார் படகுக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தில் தற்காலிகமாக 20 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது என்றனர்.   

    ×