என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதீப் ஜான்"

    • தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்கும்.
    • சென்னையில் இன்று பகலில் வெயில் அடித்தாலும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை தொடர்ந்து 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெரிய மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்கும். பின்னர் படிப்படியாகக் குறையும். கடந்த 24 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லையின் பிற உள் பகுதிகளில் நண்பகல் அல்லது மாலை வரை மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் இன்று பகலில் வெயில் அடித்தாலும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். 

    • சென்னை மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் இன்று முதல் திடீரென மழை பெய்யும்.
    • நாளை முதல் 18-ந்தேதி வரை காலை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும்.

    தமிழகத்தில் வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்தாலும் மழை பெய்து இதமான சூழ்நிலையை தந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் ஏற்கனவே பெய்து வரும் மழையால் தீபாவளியை கொண்டாட முடியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில், தீபாவளி அன்றும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த ஒருவாரமாக உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.

    சென்னை மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் இன்று முதல் திடீரென மழை பெய்யும். நாளை முதல் 18-ந்தேதி வரை காலை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும். 19 மற்றும் 20-ந்தேதிகளில் தமிழகத்தில் மிதமான மழை விட்டுவிட்டு பெய்யும். தீபாவளி அன்று கண்டிப்பாக மழை இருக்கும்.

    தூத்துக்குடி முதல் சென்னை வரை கடலோர மாவட்ட மக்கள் வெளியே செல்லும் போது குடை அல்லது ரெயின்கோட் எடுத்துச் செல்வது அவசியம் என்றார். 

    • மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைகளுக்கு பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    • சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைய ஆரம்பித்து விடும்.

    சென்னை :

    தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் மேற்கு கடற்கரை அல்லது தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழை முதல் அதிக மழை பெய்யும்.

    அதன்படி, நாளை முதல் ஜூன் 3 வரை 10 நாட்களுக்கு கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு (கோயம்புத்தூர் - வால்பாறை, நீலகிரி - கூடலூர், கன்னியாகுமரி) பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை. சில இடங்களில் 24 மணி நேரத்தில் சில தினங்களுக்கு 200 மிமீ (அதிக மழை) மழை பெய்யக்கூடும்.



    பொதுவாக இந்த பருவமழை அதிகரிப்பு ஜூன் மாதத்தில் ஏற்படும். ஆனால் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருக்கும்.

    இது விடுமுறை காலம் என்பதால், குறிப்பாக அதிக மழை பெய்த பிறகு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைகளுக்கு பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இடுக்கி, குடகு, வயநாடு, நீலகிரியில் உள்ள கூடலூர் - அவலாஞ்சி பகுதி, வால்பாறை, சிக்மகளூர் மலைகள், கர்நாடக கடலோரப் பகுதிகள், உடுப்பி, ஷிமோகா மலைகள், உத்தர கன்னடம், வடக்கு கடற்கரை கேரளா போன்ற இடங்கள் அதிக ஆபத்தில் உள்ளன.

    கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை ஆகியவை பயணிக்க பாதுகாப்பானவை.

    மேற்கு கடற்கரை / மலைத்தொடர்களில் பருவமழை ஆரம்பித்த உடன் சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைய ஆரம்பித்து விடும்.

    பெங்களூருவில் மேற்குப் பக்கத்திலிருந்து மேகங்களுடன் பருவமழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

    • அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது.
    • கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வந்தது. அதேநேரம், சில இடங்களில் கோடை மழையும் காணப்பட்டது.

    இந்த சூழலில், கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் எனும் 'கத்திரி' வெயில் தொடங்கியது. பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில், தமிழகத்தில் வெயில் உக்கிரமாக காணப்படும். ஆனால், இந்த ஆண்டோ, அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இனி வரும் நாட்களிலும் தமிழகத்தில் மழை பொழிவுக்கே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.

    கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • இனிமேல் கோடை இல்லாத மாதத்தை அனுபவியுங்கள்.

    சென்னை :

    தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

    கோடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டிற்கு மிகவும் தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெப்ப அலை இருக்காது.

    மேலும் கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளிளை தொடர்ந்து இந்த மே மாதத்தில் சென்னை 40 செல்சியஸை ஒரு நாள் கூட தாண்டவில்லை.

    கிழக்கு மேற்கு வளி மண்டலத்தின் ஒரு பகுதியாக இந்த பரந்த சுழற்சி இம்மாத இறுதியில் அல்லது ஜூன் 1 ஆம் வாரத்தில் உருவாகிறது. இப்போது முதல் முறையாக மே மாத நடுப்பகுதியில் நான் இதைக் காண்கிறேன். பொதுவாக, இந்த வளிமண்டலம் முடிவடையும்போது குறைந்த காற்றழுத்ததை ஏற்படுத்தும். எனவே அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டிலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (மாத இறுதியில்) இருக்கும். அரபிக் கடலில் ஒன்று அடுத்த 10 நாட்களில் ஒரு சூறாவளி புயலாக உருவாக வாய்ப்புள்ளது.

    அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இந்த சுழற்சி இன்னும் நெருக்கமாகி, கிழக்கு திசையில் இருந்து தமிழக வடக்கு கடலோரம் மற்றும் கடற்கரைகளில் வீசும். இதனால் வரும் நாட்களில் மிகவும் மழை பெய்யும். இன்றும் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

    கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பாண்டி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்காலின் டெல்டா பகுதிகள், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு போன்ற இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இனிமேல் கோடை இல்லாத மாதத்தை அனுபவியுங்கள். அதாவது 10 செல்சியஸ் வெப்பநிலையில் நடுங்கும் என்று அர்த்தமல்ல. மே மாத காலநிலையைக் கருத்தில் கொண்டு இது இயல்பை விட குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 



    • தமிழ்நாட்டில் ஓரிரு இடங்கள் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 37-38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தாண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே வருகிற 13-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழலும், இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை 5 சதவீதம் கூடுதலாக பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குவதால் வெயிலின் தாக்கம் குறையும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது.

    தமிழ்நாட்டில் ஓரிரு இடங்கள் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 37-38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் வானிலை குறித்து துல்லியமாக கணிப்புகளை கூறுபவராக அறியப்படுபவர் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
    • நாளை முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வெதர் மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழகத்தில் வானிலை குறித்து துல்லியமாக கணிப்புகளை கூறுபவராக அறியப்படுபவர் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான். இவர் தமிழகத்தின் வெதர் மேன் என்றே மக்கள் மத்தியில் அழைக்கப்படுகிறார். முந்தய காலங்களில் மழை, வெள்ளம் குறித்த இவரின் கணிப்புகள் அப்படியே நடந்துள்ளது. வானிலை தொடர்பான தகவல்களுக்கு வானிலை மையத்தின் அறிக்கைக்கு அடுத்தபடியாக இவரின் அறிக்கையையும் கருத்தில் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    அதன்படி நாளை முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வெதர் மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சென்னையில் மழை பெய்யும், நாளை (மே 16) வியாழக்கிழமை ரெயின் கோட் எடுத்துட்டு போக மறந்துராதீங்க என்று தெரிவித்துள்ளார்.

    சென்னை வானிலை மைய அறிக்கைபடி நாளை (மே 16) தமிழகத்தில் அநேக இடங்களில் மற்றும் மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் , சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக இன்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    • கோடை மழை கனமழையாக பெய்து வருகிறது.
    • குறைந்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை கனமழையாக பெய்து வருகிறது.

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிக பட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கி டையே இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிக மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்ச ரிக்கையும் விடுத்துள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தையொட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் வருகிற 21-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத் தில் மேலும் மழை பெய்யுமா? என்பது தெரிய வரும்.

    இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வங்க கடலில் உருவாகும் குறைந்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி ஹாட் ஸ்பாட்டில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.

    இந்த மழை வருகிற 24-ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்தான் வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த வார மும் மழை நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் ஜூன் மாதம் வழக்கமாக பொழியும் மழையை விட 5 மடங்கு அதிக மழை இந்த ஜூனில் பெய்துள்ளது.
    • சென்னையில் இந்த ஜூன் மாதம் மட்டும் 10 நாட்கள் நல்ல மழை பெய்துள்ளது.

    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.

    நேற்று மாலையில் இருந்தே குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இரவு பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த காற்றுடன் மழையின் வேகம் அதிகரித்தது.

    நேற்று இரவு 11 மணி தாண்டியும் பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.

    இந்நிலையில் சென்னையில் இன்று இரவும் நல்ல மழை பெய்யும் என தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

    3வது நாளாக இன்று இரவும் சென்னையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் ஜூன் மாதம் வழக்கமாக பொழியும் மழையை விட 5 மடங்கு அதிக மழை இந்த மாதம் பெய்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் இதுவரை மட்டும் 10 நாட்கள் நல்ல மழை பெய்துள்ளது.

    சென்னையில் ஜூன் சராசரி மழை அளவு 6 செ.மீ தான். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதுவரை 30 செ.மீ. மழை பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
    • தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைத் தவிர மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    மேலும், தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைத் தவிர மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும் எனவும் சுதந்திர தினத்திற்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் எனவும் கூறியுள்ளார்.

    • சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும்.
    • 40 செ.மீ மழை பெய்தால் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம்.

    வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் நாளை 'சிவப்பு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று கனமழையும் நாளை மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 8 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் அது கனமழையாக மாறியது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

    இந்நிலையில் சென்னையில் மழைநீர் தேங்குவதற்கு காரணம் என்ன என்று வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "சென்னையில் பெய்யும் மொத்த மழையும் எண்ணூர், நேப்பியார், அடையாறு, ஒக்கியம் வழியாக கோவளம் ஆகிய 4 வழிகளில் மட்டுமே வெளியேறுகிறது. சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும். 20 செ.மீ மழை பெய்தால் சென்னையில் ஒரு நாள் நீர் தேங்கும். 30 செ.மீ மழை பெய்தால் சென்னையின் பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும்.

    40 செ.மீ மழை பெய்தால் சென்னையில் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம். மழைநீர் வடிகால் என்பது சாலைக்காக போடப்படுவது. 40 செ.மீ அளவுக்கு பெய்யும் மழைக்காக வடிகால் அமைக்க முடியாது. நம் பகுதியின் சூழலை புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
    • தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது அதற்கு அடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

    இதனால், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் முதல் சூடுபிடிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

    ×