search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் புயல் உருவாக வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
    X

    தமிழகத்தில் புயல் உருவாக வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

    • கோடை மழை கனமழையாக பெய்து வருகிறது.
    • குறைந்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை கனமழையாக பெய்து வருகிறது.

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிக பட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கி டையே இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிக மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்ச ரிக்கையும் விடுத்துள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தையொட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் வருகிற 21-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத் தில் மேலும் மழை பெய்யுமா? என்பது தெரிய வரும்.

    இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வங்க கடலில் உருவாகும் குறைந்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி ஹாட் ஸ்பாட்டில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.

    இந்த மழை வருகிற 24-ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்தான் வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த வார மும் மழை நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×