search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southern Districts"

    • மழை காலத்தில் பரவக்கூடிய டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் தோறும் தனித்தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
    • 5 பேர் கொண்ட மருத்துவர் குழு தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக இன்று நெல்லைக்கு வந்துள்ளனர்.

    நெல்லை:

    மழை காலத்தில் பரவக்கூடிய டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் தோறும் தனித்தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த குழுவினர் அந்தந்த மாவட்டங்களில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி 5 பேர் கொண்ட மருத்துவர் குழு தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக இன்று நெல்லைக்கு வந்துள்ளனர். இந்தக் குழுவினர் நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இந்த குழுவில் மருத்துவர்கள் வடிவேலன், சேகர், நிர்மல்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு தனித்தனியாக பிரிந்து மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறது.

    தென்மாவட்டங்களில் மழை காலங்களில் அதிக காய்ச்சல் ஏற்படும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து இந்த குழு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பகுதியில் ஆய்வு மேற் கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதனை மையமாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என நெல்லை மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.
    • இந்த காலத்தில் மின்விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் குப்புராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

    நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த காலத்தில் மின்விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    காற்றுக்காலங்களில் மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்த வேண்டாம். மின்கம்பிகள், சர்வீஸ் வயர்கள் அறுந்து விழுந்தால் அதன் அருகே செல்ல வேண்டாம்.

    உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பலத்த காற்று காரணமாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக சென்று அதனை அப்புறப்படுத்தக் கூடாது. பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் மின்சார வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மின்கம்பத்திற்கு போடப்பட்டு உள்ள ஸ்டே ஒயர்களில் கால்நடைகளை கட்டவோ, கால்நடைகளுக்கான கிடை அமைக்கவோ கூடாது. மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்தக்கூடாது. கொடிகள் கட்டி துணிகள் காயப்போடக்கூடாது. இது விபத்தை ஏற்படுத்தும். மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.

    மின்நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின்விபத்துகளை தவிர்க்க அனைத்து மின் இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவியை (ஆர்.சி.சி.பி.) பொருத்த வேண்டும். விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். மீறினால் காவல்துறை மூலம் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் மின்தடை தொடர்பான புகார்களுக்கும் மின்கட்டமைப்புகளில் உள்ள பழுதுகள், இயற்கை இடர்பாடுகளின்போது அவசர உதவிக்கும், மின்வினியோகம் சம்பந்தமான அனைத்து விதமான சேவைகளுக்கும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தினை 94987 94987 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்த விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி மின்விபத்துகளை தவிர்க்க முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும், பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. #IndiaMeteorologicalDepartment #HeavyRainfall
    சென்னை:

    சென்னையை நோக்கி கடந்த வாரம் வந்த பெய்ட்டி புயல் ஆந்திரா பக்கம் சென்று விட்டதால் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மழை இல்லை. கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது.

    தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது.

    இதுபோல் அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி பரவி உள்ளது.



    இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும், பரவலாக மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஒரு சில நேரங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IndiaMeteorologicalDepartment #HeavyRainfall
    தமிழகத்தின் தென்மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRain
    சென்னை:

    அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதில் சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRain
    கன்னியாகுமரி அருகே மேல் அடுக்கு சுழற்சிகாரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    கன்னியாகுமரி அருகே மேல் அடுக்கு சுழற்சிகாரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கோடை மழை பெய்துவருகிறது.

    இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

    கன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகி இருக்கிறது. மேலும் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும், மேற்கில் இருந்து வீசும் காற்றும் தமிழகத்தின் வழியாக செல்கிறது. இந்த இரு காரணங்களால் தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்யும்.

    தென் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். பெய்வது கோடை மழையாகும்.

    இவ்வாறு வானிலை அதிகாரி தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    சிவகங்கை 8 செ.மீ., பேச்சிப்பாறை 5 செ.மீ., திருப்பூர், கீரனூர், பெரியாறு தலா 4 செ.மீ., தாராபுரம், திண்டுக்கல், தாளவாடி, போடிநாயக்கனூர் தலா 3 செ.மீ., அம்பாசமுத்திரம், பீளமேடு, வால்பாறை, கழுகுமலை, வத்திராயிருப்பு, மாரண்டஹள்ளி, கூடலூர், கொடைக்கானல், நடுவட்டம் தலா 2 செ.மீ., தளி, குழித்துறை, சேரன்மகாதேவி, குளச்சல், கூடலூர் பஜார், சிவகிரி, பூதப்பாண்டி, தேன்கனிக்கோட்டை, கமுதி, தேவலா, நாமக்கல், பரமத்திவேலூர், அன்னூர், சின்னக்கள்ளார், பேரையூர், சேந்தமங்கலம், விளாத்திக்குளம் தலா 1 செ.மீ.மழை பெய்துள்ளது. 
    கேரளா அருகே மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் கோடை காலம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துவருகிறது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது.

    வானிலை மாற்றம் குறித்து சென்னையில் உள்ள வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

    கேரளாவையொட்டிய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. மேலும் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் தமிழகத்தின் வழியாக செல்கிறது. இந்த இரு காரணங்களால் மழை பெய்துவருகிறது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.

    அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    கடந்த மார்ச் மாதம் முதல் இன்று (நேற்று) வரை தமிழகத்தில் 85 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆனால் 77 மி.மீ. மழைதான் இயல்பாக பெய்யவேண்டும். அதாவது 8 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது.

    இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    கோவிலங்குளம் 12 செ.மீ., மணியாச்சி 11 செ.மீ., சிட்டம்பட்டி 10 செ.மீ., மேலூர் 9 செ.மீ., மேட்டுப்பட்டி 7 செ.மீ., வால்பாறை, திருப்புவனம், துவாக்குடி, தாளவாடி, திருமங்கலம் தலா 5 செ.மீ., பாலக்கோடு, கேத்தி தலா 4 செ.மீ., பெருந்துறை, காங்கேயம், சாத்தூர், திருப்பத்தூர், பெரியநாயக்கன்பாளையம் தலா 3 செ.மீ. மற்றும் 3 செ.மீ.க்கு குறைவாக 45 இடங்களில் மழை பெய்துள்ளது. 
    ×