search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்மாவட்டங்களில் காற்று காலத்தில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? - மின்வாரிய அதிகாரி விளக்கம்
    X

    தென்மாவட்டங்களில் காற்று காலத்தில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? - மின்வாரிய அதிகாரி விளக்கம்

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.
    • இந்த காலத்தில் மின்விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் குப்புராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

    நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த காலத்தில் மின்விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    காற்றுக்காலங்களில் மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்த வேண்டாம். மின்கம்பிகள், சர்வீஸ் வயர்கள் அறுந்து விழுந்தால் அதன் அருகே செல்ல வேண்டாம்.

    உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பலத்த காற்று காரணமாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக சென்று அதனை அப்புறப்படுத்தக் கூடாது. பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் மின்சார வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மின்கம்பத்திற்கு போடப்பட்டு உள்ள ஸ்டே ஒயர்களில் கால்நடைகளை கட்டவோ, கால்நடைகளுக்கான கிடை அமைக்கவோ கூடாது. மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்தக்கூடாது. கொடிகள் கட்டி துணிகள் காயப்போடக்கூடாது. இது விபத்தை ஏற்படுத்தும். மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.

    மின்நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின்விபத்துகளை தவிர்க்க அனைத்து மின் இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவியை (ஆர்.சி.சி.பி.) பொருத்த வேண்டும். விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். மீறினால் காவல்துறை மூலம் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் மின்தடை தொடர்பான புகார்களுக்கும் மின்கட்டமைப்புகளில் உள்ள பழுதுகள், இயற்கை இடர்பாடுகளின்போது அவசர உதவிக்கும், மின்வினியோகம் சம்பந்தமான அனைத்து விதமான சேவைகளுக்கும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தினை 94987 94987 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்த விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி மின்விபத்துகளை தவிர்க்க முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×