search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electrical accidents"

    • வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
    • ஈரக்கையால் அல்லது வெறும் காலுடன் மின்சாரம் சார்ந்த எதையும் தொடக்கூடாது.

    உடுமலை: 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் தென்பட்டால், பொதுமக்கள் அருகில் செல்லக்கூடாது. மின் கம்பி தண்ணீரில் கிடந்தால் அந்த இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். மேலும் இதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின் சாதனங்கள் மழை நீரில் மூழ்கினால், உடனடியாக மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். ஈரக்கையால் அல்லது வெறும் காலுடன் மின்சாரம் சார்ந்த எதையும் தொடக்கூடாது. மின்னல் மற்றும் இடியின் போது டி.வி., கம்ப்யூட்டர், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. இடி, மின்னலின் போது மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோகக்கம்பி வேலிகள், திறந்த நிலையிலுள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் நிற்ககூடாது. சார்ட் சர்க்யூட் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை இயக்கும் போது உலர்ந்த, ரப்பர் பாய்களின் மீது நிற்க வேண்டும். துணிகளை உலர வைக்க மின் இழுவை கம்பிகள் மற்றும் மின்கம்பங்களை தாங்கிகளாக பயன்படுத்த கூடாது. மேலும் மின் விபத்துக்கள் குறித்து 'மின்னகம்' 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.
    • இந்த காலத்தில் மின்விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் குப்புராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

    நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த காலத்தில் மின்விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    காற்றுக்காலங்களில் மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்த வேண்டாம். மின்கம்பிகள், சர்வீஸ் வயர்கள் அறுந்து விழுந்தால் அதன் அருகே செல்ல வேண்டாம்.

    உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பலத்த காற்று காரணமாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக சென்று அதனை அப்புறப்படுத்தக் கூடாது. பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் மின்சார வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மின்கம்பத்திற்கு போடப்பட்டு உள்ள ஸ்டே ஒயர்களில் கால்நடைகளை கட்டவோ, கால்நடைகளுக்கான கிடை அமைக்கவோ கூடாது. மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்தக்கூடாது. கொடிகள் கட்டி துணிகள் காயப்போடக்கூடாது. இது விபத்தை ஏற்படுத்தும். மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.

    மின்நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின்விபத்துகளை தவிர்க்க அனைத்து மின் இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவியை (ஆர்.சி.சி.பி.) பொருத்த வேண்டும். விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். மீறினால் காவல்துறை மூலம் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் மின்தடை தொடர்பான புகார்களுக்கும் மின்கட்டமைப்புகளில் உள்ள பழுதுகள், இயற்கை இடர்பாடுகளின்போது அவசர உதவிக்கும், மின்வினியோகம் சம்பந்தமான அனைத்து விதமான சேவைகளுக்கும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தினை 94987 94987 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்த விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி மின்விபத்துகளை தவிர்க்க முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்க வேண்டாம்.
    • மின் கம்பிகள், மின் சாதனங்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தால், உடனடியாக மின்சாரத்தை நிறுத்த வேண்டும்.

    பல்லடம் :

    தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், மின்சார விபத்துக்களை தடுப்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.ஜவகர் செய்தியாளரிடம் கூறியதாவது: -

    பொதுமக்கள் இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்க வேண்டாம். கான்கிரீட் கூரையிலான கட்டடங்களிலோ, உலோகத்தால் மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் பாதுகாப்பாக இருக்கலாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை பார்த்தால், அவற்றை மிதிக்கவோ,தாண்டவோ செய்யாமல்,அங்கிருந்து உடனடியாக வெளியேறி, மின் வாரியத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பிகள், மின் சாதனங்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தால், உடனடியாக மின்சாரத்தை நிறுத்த வேண்டும்.

    ஈரக்கையாலும், வெறுங்காலுடனும், மின்சாரம் சார்ந்த எதையும் தொடக்கூடாது. மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள வயர் அல்லது மின் கம்பத்தின் மீது கயிறு கட்டி, துணி காய வைக்கவும், மின்கம்பங்களை, பந்தல்களாகவும், விளம்பர பலகைகள் அமைக்கவும் கூடாது. மின்மாற்றி, மின்கம்பம், மின்பகிர்வு பெட்டி மற்றும் ஸ்டே ஒயர்கள் அருகில், செல்லக்கூடாது. வீடுகளில், குளியலறை மற்றும் கழிப்பறையில், ஈரமான இடங்களில், மின் சுவிட்சுகளை பொருத்த கூடாது.

    இடி, மின்னலின் போது குடிசை வீட்டில், மரத்தின் அடியில், பேருந்து நிறுத்த நிழற்கூரையின் கீழ் நிற்கக்கூடாது. ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற, வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய, மூன்று பின் கொண்ட "சாக்கெட்" பிளக்குகள் மூலமாக மட்டுமே, மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

    வீடுகளில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில் மின் கசிவு தடுப்பான் பொருத்தினால், மின்கசிவால் உண்டாகும் விபத்தை தவிர்க்கலாம். உடைந்துபோன சுவிட்ச் மற்றும் பிளக்குகளை, உடனே மாற்ற வேண்டும். பழுதான மின்சார சாதனங்களை, உபயோகப்படுத்த வேண்டாம்.வீட்டில், எர்த் பைப் போடுவதுடன், அதை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில், சரியாக பராமரிக்கவும், சுவிட்சுகள் மற்றும் பிளக்குகளை, குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.சுவற்றின் உள்பகுதியில், மின்சாரம் எடுத்துச்செல்லும் ஒயர்களுடன் கூடிய, பி.வி.சி., பைப்புகள், பதிக்கப்பட்டிருந்தால், அப்பகுதிகளில், ஆணி அடிப்பதை தவிர்க்கவும்.

    மின்சார தீ விபத்திற்கேற்ற தீயணைப்பான்களை மட்டுமே, மின்சாதனங்களில், தீ விபத்து உண்டாகும் போது பயன்படுத்த வேண்டும்.உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயன பொடி அல்லது கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களை பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை தண்ணீர் கொண்டு அணைக்கக்கூடாது.மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக மெயின் சுவிட்சை நிறுத்தி விட வேண்டும். மின்கம்பங்கள் சேதம், மழை காலங்களில் மின் கம்பிகள் அறுந்து கிடந்தால், 'மின்னகம்' மொபைல் எண் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாதையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அருகில் சென்று தொடக்கூடாது.
    • திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள்.

    திருப்பூர் :

    பருவமழை பெய்ய தொடங்கி இருப்பதால் மின் விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டுமென மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து திருப்பூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாதையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அருகில் சென்று தொடக்கூடாது.மின் கம்பி அறுந்தாலோ, கம்பி ஆபத்தான நிலையில் இருந்தாலோ அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்*ன்டை.

    மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய பணியாளர் மூலமாக மட்டுமே சரி செய்து கொள்ள வேண்டும். வெளியாட்களை கொண்டு மின்கம்பத்தில் வேலை செய்ய கூடாது. கால்நடைகளை மின்கம்பம் அல்லது இழுவை கம்பிகளில் கட்டி வைக்கக்கூடாது. இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் நிற்கக்கூடாது.மின்கம்பி, மரங்கள், உலோக கம்பி வேலி இல்லாத தாழ்வான பகுதியில் இருக்க வேண்டும்.

    மிக உயரமான வாகனங்களை மின் கம்பி குறுக்கே செல்லும் பாதையில் இயக்குவதை தவிர்க்க வேண்டும்.பண்ணைகள், வயல்களில் மின் வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றம். அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே வயரிங் செய்ய வேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய, 3பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலம் மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

    மின் கசிவு தடுப்பானை(இ.எல்.சி.பி.,), மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்க்கலாம். சுவிட்ச்கள், பிளக்குகள் போன்றவற்றை எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

    மின் கம்பத்துக்காக போடப்பட்ட, ஸ்டே கம்பி மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்துவதை தவிர்க்க வேண்டும். குளியல் அறை, கழிப்பறை மற்றும் ஈரமான இடங்களில் சுவிட்ச் பொருத்தக்கூடாது. மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீ விபத்து மின்சாரத்தால் ஏற்பட்டிருந்தால் உடனடியாக மெயின் சுவிட்ச்சை நிறுத்திவிட வேண்டும்.

    இடி அல்லது மின்னலின் போது, டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி மற்றும் செல்போன் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது. மேலும் திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள். ஜன்னல், இரும்பு கதவு ஆகியவற்றை தொடக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின்பாபு கூறுகையில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும். தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.பேரிடர்கால மின்தடை தகவல்களுக்கும், புகார்களுக்கும், 94987 94987 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

    ×