என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்தாண்டு மே மாதம் வெயிலின் தாக்கம் பெரியளவில் இருக்காது - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
    X

    இந்தாண்டு மே மாதம் வெயிலின் தாக்கம் பெரியளவில் இருக்காது - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

    • தமிழ்நாட்டில் ஓரிரு இடங்கள் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 37-38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தாண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே வருகிற 13-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழலும், இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை 5 சதவீதம் கூடுதலாக பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குவதால் வெயிலின் தாக்கம் குறையும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது.

    தமிழ்நாட்டில் ஓரிரு இடங்கள் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 37-38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×