#DMK திருச்சி தி.மு.க. மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி, கிரேவி

வெளியூர்களில் இருந்து வருகை தரும் தொண்டர்களின் பசி போக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. உணவுப் பொட்டலங்களுடன் குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.
#DMK திருச்சி தி.மு.க. மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி, கிரேவி
Published on

திருச்சி சமயபுரம் அருகே சிறுகனூரில் நடைபெறும் தி.மு.க.வின் 12-வது மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள். மாநாடு சரியாக பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

வெளி மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், வேன், கார்களில் மாநாட்டுத் திடலில் குவிந்தனர். இதனால் முன்னேற்பாடாக வெளியூர்களில் இருந்து வருகை தரும் தொண்டர்களின் பசி போக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு ஆலோசனையின் படி 4 இடங்களில் 2 லட்சம் பேருக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் கிரேவி ஆகியவை காலையிலிருந்து மாநாட்டு திடல் உணவுக்கூடத்தில் தயார் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

பின்னர் அந்த உணவுகளை முறையாக பொட்டலமாக மடித்து மாநாட்டு திடலுக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு உணவு கூடங்களில் தொண்டர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. மேலும் உணவுப் பொட்டலங்களுடன் குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன. இதனால் வெளியூர் தொண்டர்கள் பசியாறி மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com