search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
    X

     ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

    ஏற்காட்டில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

      ஏற்காடு:

      சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தவள்ளி அண்ணாதுரை தலைமையில் அலுவலகத்தில் நடைபெற்றது.

      ஒப்புதல்

      இக்கூட்டத்தில் ஒன்றியத்திற்கு உட்பட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படது. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலக செலவீனங்களுக்கான ஒப்புதல் பெறப்பட்டது.

      கூட்டத்தில் வட்டார கல்வி அதிகாரி ஏற்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடங்கள் சில பழுதடைந்து காணப்படுவதாகவும், அதை சரிசெய்து கொடுக்குமாறும் கோரிக்கை வைத்தார்.

      தொடர்ந்து உறுப்பினர்கள் ஏற்காட்டில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாகவும், இனிவரும் நாட்களில் அந்த பிரச்சினை வராமல் பார்த்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர்.

      வரவு- செலவு கணக்கு

      தொடர்ந்து வரவு , செலவு அறிக்கையை கணக்காளர் செந்தில் வாசித்தார். இதையடுத்து ஒன்றிய குழு தலைவர் சாந்தவள்ளி அண்ணாதுரை உறுப்பினர்களின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

      இக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் அன்புராஜ், மேலாளர் கென்னடி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோகிலா, சின்னவெள்ளை, கலைவாணி, வருதாயி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

      முடிவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சேகர் நன்றி தெரிவித்தார்.

      Next Story
      ×