என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேளாண் அறிவியல் மையத்தில் கண்காட்சி
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்
- அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்
வேலூர்:
விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பாராம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று காலை நடைபெற்றது.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு ஸ்டீபன் ஜெயக்குமார் திட்ட விளக்க உரையாற்றினார். உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.
இதில் வேளாண் அறிவியல் நிலைய தலைவரும் பேராசிரியருமான திருமுருகன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story






