என் மலர்
நீங்கள் தேடியது "குன்னூர் பழக்கண்காட்சி"
- மலர் கண்காட்சி, காய்கறி, பழங்கள் கண்காட்சி, நாய் கண்காட்சி என பல கண்காட்சிகள் இடம் பெறும்.
- நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
குன்னூர்:
சுற்றுலாதலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுற்றுலாபயணிகள் வருகை தந்தாலும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவதற்காக நீலகிரியில் குவியும் சுற்றுலாபயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மலர் கண்காட்சி, காய்கறி, பழங்கள் கண்காட்சி, நாய் கண்காட்சி என பல கண்காட்சிகள் இடம் பெறும்.
இந்த ஆண்டு மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கடந்த 11 நாட்களாக நடந்து வந்த மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு நடத்தப்பட்டு மலர்கண்காட்சி நிறைவடைந்தது.
பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இன்று மாலை வரை கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
அதைத்தொடர்ந்து ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக சிம்ஸ் பூங்காவில் இன்று கடைசி நாள் நடைபெற இருந்த பழக்கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இன்று மாலை நடைபெற இருந்த பரிசளிப்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது. பரிசளிப்பு விழா மற்றொரு நாளில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- நாளை தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை 3 நாட்கள் இந்த கண்காட்சியானது நடைபெற உள்ளது.
- அனைத்து வகையான பழங்களும் சிறப்பு அரங்குகள் மூலம் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு, இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்த தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழாக்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சிகள் தொடங்கி முடிவடைந்துள்ளன. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது.
கோடைவிழாவின் ஒரு பகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்கண்காட்சி நடக்க உள்ளது. பழ கண்காட்சி நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை 3 நாட்கள் இந்த கண்காட்சியானது நடைபெற உள்ளது.
கண்காட்சி தொடங்க உள்ளதை அடுத்து அதற்கான ஏற்பாடுகளில் பூங்கா நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு சிம்ஸ் பூங்கா உருவாகி 151-வது ஆண்டு என்பதால் வரக்கூடிய சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பூங்கா நுழைவாயில் முன்பு 30 வகையான பழங்களை கொண்டு அலங்கார நுழைவாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில், சுற்றுலா தலங்களில் உள்ள காட்சிகளை பழங்கள் மூலம் தத்ரூபமாக வடிவமைத்து காட்சிப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
பூங்கா நுழைவாயில் உள்ளே சுமார் ஐந்து டன் எடையில் ஆன பழங்களை கொண்டு சுற்றுலா பகுதியில் உள்ள ரம்மியமான காட்சிகளை நினைவூட்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டக்கலை பண்ணைகளில் விளைவிக்கப்படும் அனைத்து வகையான பழங்களும் சிறப்பு அரங்குகள் மூலம் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது.
3 நாள் நடைபெற உள்ள பழக்கண்காட்சி நாளை துவங்க உள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுதவிர பூங்காவில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்கு நடவு செய்யப்பட்ட 3 லட்சம் மலர் செடிகள் அனைத்தும் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. 3 நாள் நடைபெற உள்ள பழ கண்காட்சியில் சுற்றுலா பயணிகள் நாவில் உமிழ் நீர் சுரக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட வகையிலான பழ வகைகள் இடம்பெற உள்ளதால், கூடுதலாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என தோட்டக்கலைத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
+2
- ஆண்டுதோறும் நீலகிரியில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
- பழக்கண்காட்சிக்காக தயாரான 2 அரை லட்சம் மலர் நாற்றுகள் தற்போது பூங்காவில் பூத்து குலுங்குகின்றன.
குன்னூர்:
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இதனையொட்டி ஆண்டுதோறும் நீலகிரியில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி, மலர் கண்காட்சி மற்றும் பல கண்காட்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ரோஜா, வாசனை திரவியம் மற்றும் மலர் கண்காட்சி, படகு போட்டிகளும் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கோடை விழாவின் நிறைவாக இன்று குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
பழக்கண்காட்சிக்காக தயாரான 2 அரை லட்சம் மலர் நாற்றுகள் தற்போது பூங்காவில் பூத்து குலுங்குகின்றன. மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
பழக்கண்காட்சியில் சிறப்பம்சமாக 1.2 டன் அன்னாசி பழங்களை கொண்டு பிரம்மாண்ட அன்னாசிபழம் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர திராட்சை பழங்களை கொண்டு மலபார் அணில் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பல வகையான பழங்களை கொண்டு பழக்கூடை, ஆரஞ்சு பழங்களை கொண்டு பிரமிடு, மாதுளை பழங்களை கொண்டு மண்புழு உருவம், ஊட்டி 200-யை குறிக்கும் வகையில் பல்வேறு வகையான பழங்களை கொண்டு ஊட்டி 200 உருவமும் வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர குழந்தைகளை கவரும் வகையில் பழங்களை கொண்டு பொம்மை மற்றும் விலங்கு, பறவைகளின் உருவங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இவை அனைத்து சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர்கள் பழ கண்காட்சியை பார்வையிட்டு, பழங்களால் ஆன உருவங்கள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
கண்காட்சியில் கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தோட்டக்கலைத்துறையினர் சார்பில் 25 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அமைந்துள்ள அரங்குகளையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக குன்னூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக அங்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






