என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குன்னூரில் மலைபயிர்கள் கண்காட்சி: முந்திரி பருப்பில் உருவான ஆடு-மாடு, கோழி உருவங்கள்
    X

    குன்னூரில் மலைபயிர்கள் கண்காட்சி: முந்திரி பருப்பில் உருவான ஆடு-மாடு, கோழி உருவங்கள்

    • கோடை விழாவின் இறுதி நிகழ்வாக இன்று முதல் முறையாக காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி தொடங்கியது.
    • பூங்காவில் ஏற்கனவே நடவு செய்யப்பட்டுள்ள 2 லட்சம் மலர் செடிகள் பூத்துக் குலுங்கி வருகிறது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந்தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, மலர் கண்காட்சி, பழ கண்காட்சி நடந்து முடிந்துள்ளது. கோடை விழாவின் இறுதி நிகழ்வாக இன்று முதல் முறையாக காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி தொடங்கியது.

    மலைபயிர்கள் கண்காட்சியை முன்னிட்டு இளநீர், நுங்கு, பாக்கு உள்ளிட்டவற்றை கொண்டு பூங்காவின் நுழைவு வாயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நுங்கு, இளநீர், பனைமர ஓலைகளை கொண்டு மலைகிராம குடிசை, பனை ஓலைகளில் சேவல், கோழி உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர முந்திரி பருப்பை பயன்படுத்தி ஆடு, மாடு மற்றும் மாட்டு வண்டி, விவசாயி தென்னை மரம் ஏறுவது போன்ற உருவம், ஏர் கலப்பை, ஆட்டு உரல் உள்ளிட்டவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாக்கு, தேயிலை போன்றவற்றை கொண்டும் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    பூங்காவில் ஏற்கனவே நடவு செய்யப்பட்டுள்ள 2 லட்சம் மலர் செடிகள் பூத்துக் குலுங்கி வருகிறது. இன்று தொடங்கிய கண்காட்சியானது வருகிற 1-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து விட்டது. தற்போது மழை ஓரளவு குறைந்து விட்டதால் இன்று தொடங்கும் மலைபயிர்கள் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×