என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jackpot"
- ஐக்கிய அரபு அமரீகத்தை சாராத முதல் வெற்றியாளர் நடராஜன்.
- கல்வி கற்கும் போது எனக்கு பலர் உதவி செய்திருக்கின்றனர்.
ஆம்பூரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் மகேஷ் குமார் நடராஜன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜாக்பாட் வென்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5.5 லட்சம் தொகை வழங்கப்பட இருக்கிறது.
49 வயதான நடராஜன் எமிரேட்ஸ் டிராவின் ஃபாஸ்ட் 5 பம்ப்பர் பரிசை வென்று இருக்கிறார். இதில் அவருக்கு ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் DH (மாதம் ரூ. 5.6 லட்சம்) தொகை 25 ஆண்டுகளுக்கு பரிசு தொகையாக வழங்கப்பட இருக்கிறது. ஐக்கிய அரபு அமரீகத்தை சாராத முதல் வெற்றியாளர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
"வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்தித்து இருக்கிறேன். நான் கல்வி கற்கும் போது எனக்கு பலர் உதவி செய்திருக்கின்றனர். தற்போது சமூகத்திற்கு எனது பங்களிப்பை வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. சமூகத்தில் தேவையானோருக்கு என் சார்பில் நிச்சயம் உதவிகளை செய்வேன்," என்று பம்ப்பர் பரிசை வென்ற நடராஜன் தெரிவித்து உள்ளார்.
"இது மிகவும் நம்ப முடியாத தருணம். இது என் வாழ்நாளில் மிகவும் மறக்க முடியாத நாளாக மாறி இருக்கிறது. பரிசு தொகையை எனது மகள்களின் கல்வியில் முதலீடு செய்யவும், குடும்பத்தாரின் எதிர்காலத்தை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 300 டாலர் பரிசாக கிடைத்தது. அதன் பின் தற்போது அவர் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த லாட்டரி டிக்கெட் எண்ணை சரிபார்த்த போது அவருக்கு பரிசு விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அந்த எண் 18 ஆண்டுகளுக்கு முன் பரிசு விழுந்த அதே எண் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு 4 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்தது. அந்த பரிசுத்தொகையில் பாதியை தனது வீட்டிற்கும், மீதி பணத்தை சேமித்து வைக்க போவதாகவும் தெரிவித்தார்.
அதிர்ஷ்டம் ஒரு மனிதரின் வாழ்வில் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் இவருக்கு 18 ஆண்டுகளுக்கு பின் அதே எண்ணில் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #Lotterytickets #jackpot
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்