என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து: வானதி சீனிவாசன்
- 2026-ல் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன். நான் பா.ஜ.க. ஆட்சி என்றுதான் சொல்வேன்- அண்ணாமலை.
- தேசிய தலைமை எடுக்கும் முடிவே இங்கு நடக்கும்.
தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அண்ணாமலை "2026-ல் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன். நான் பா.ஜ.க. ஆட்சி என்றுதான் சொல்வேன். தேர்தலின் போது கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து பேசி எவ்வளவு இடங்களில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்வார்கள். என்னை பொறுத்தவரை 2026-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்றுதான் சொல்வேன்.
நான் பா.ஜ.கவின் தொண்டன். உயிர் உள்ளவரை இந்த கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மற்ற கட்சி வளர்ப்பதற்காக நான் இல்லை. கட்சி எடுக்கும் முடிவுக்கு தொண்டனாக நான் கட்டுப்படுவேன். எங்கு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமோ அங்கு வாயை மூடிக்கொண்டு இருக்கிறேன். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில 2026-ல் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன். நான் பா.ஜ.க. ஆட்சி என்றுதான் சொல்வேன் என அண்ணாமலை கூறியது அவரது கருத்து என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் கூறுகையில் "அண்ணாமலை சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து. தேசிய தலைமை எடுக்கும் முடிவே இங்கு நடக்கும். கட்சியின் நிலைப்பாடு எதுவோ, அதன்படியே செயல்படுவோம்" என்றார்.






