search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரில்லா வேடத்தில் குரங்குகள் விரட்டியடிப்பு
    X

    கொரில்லா வேடத்தில் குரங்குகள் விரட்டியடிப்பு

    • பெரிய கொரில்லா வருவதாக நினைத்து குரங்குகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றன.
    • பல குரங்குகள் ஊரைவிட்டே ஓடிவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கோத்தக்குடேம் மாவட்டத்தில் உள்ள மொரம்பள்ளி பஞ்சார் என்ற கிராமத்தில் அதிக அளவில் குரங்குகள் உள்ளன.

    இங்குள்ள விவசாயிகள் பயிரிடும் பருத்தி நெல், காய்கறிகளை குரங்குகள் கூட்டம் நாசம் செய்கிறது.

    மேலும் வீடுகளுக்குள் புகுந்து அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்கின்றன. கிராம மக்களை அச்சுறுத்தி வரும் குரங்கு தொல்லையை ஒழிக்க அங்குள்ள ஊராட்சி நிர்வாகம் புதிய முறை ஒன்றை கையாண்டு வருகிறது. ஊராட்சியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கொரில்லா உடை வாங்கப்பட்டுள்ளது.

    இதனை அணிந்து கொரில்லா வேடத்தில் வரும் ஊழியர்கள் குரங்குகள் இருக்கும் பகுதிக்கு செல்கின்றனர்.

    பெரிய கொரில்லா வருவதாக நினைத்து குரங்குகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றன. தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கொரில்லா வேடத்தில் ஊழியர்கள் குரங்குகளை விரட்டியடித்து வருகின்றனர்.

    இதனால் தற்போது இந்த கிராமத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் குரங்குகள் தொல்லை குறைந்துள்ளது. பல குரங்குகள் ஊரைவிட்டே ஓடிவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    Next Story
    ×