search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eagles"

    • பறவைகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • கிரிபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வந்து உள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விலங்குகள் பரிமாற்றத்தின் படி நாட்டில் உள்ள மற்ற பூங்காவிற்கு தேவையான விலங்குகள், பறவைகளை கொடுத்து அங்கிருந்து விலங்குகளை பெறுவது வழக்கம்.

    அதன்படி உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள், பறவைகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள். ஒரு ஜோடி இமாலயன் கிரிபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வந்து உள்ளன.


    இந்த அனுமன் குரங்குள் மற்ற குரங்குகளை விட வித்தியாசமான முக அமைப்பை கொண்டது. அதன் வாய் பகுதி சற்று சிகப்பு நிறமாக இருக்கும். புதிதாக வந்து உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளின் உடல்நிலையை பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து தனிமைப்படுத்தி தனித்தனியாக அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தும் கால அவகாசம் முடிந்ததும் பூங்காவில் பொது மக்களின் பார்வைக்கு விடப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே விலங்குகள் பரிமாற்றத்தின் படி வண்டலூர் பூங்காவில் இருந்து கான்பூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி கட்ட உடல் மலைப் பாம்புகள், இரண்டு ஜோடி சருகு மான்கள், 3 நெருப்புக்கோழிகள், ஒரு ஜோடி பச்சை உடும்புகள் மற்றும் ஒரு ஆண் சாம்பல் ஓநாய் ஆகிய விலங்குகள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கூடு கட்டும் பருவத்தை வரவேற்கும் விதமாக பொங்கல் வைக்கப்பட்டது.
    • உலக பாறு கழுகுகள் தினம் கொண்டாடப்பட்டது.

    ஊட்டி,

    மசினகுடி, சீகூர் வனப்பகுதியில் கழுகுகள் பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கழுகுகள் தினம் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், மசினகுடி கோட்ட துணை இயக்குநர் அருண்குமார் உத்தரவின்படி, மசினகுடியில் உலக பாறு கழுகுகள் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு மசினகுடி வனச்சரகர் பாலாஜி தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், நீலகிரி மாவட்ட மருந்து விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். சீகூர் வனச்சரகத்தில் உள்ள ஜகலிக்கடவு பகுதியில் உலக பாறு கழுகுகள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாறு கழுகுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பாறு கழுகுகள் கூடு கட்டும் பருவத்தை வரவேற்கும் விதமாக பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்களுக்கு படம் வரைதல் மற்றும் பரமபதம் விளையாட்டு மூலம் பாறு கழுகுகள் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

    ×