search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child sold"

    • பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி தத்தெடுப்பு ஆவணங்களை உருவாக்கி குழந்தைகளை விற்றுள்ளனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5.5 லட்சம் ரொக்கமும், ஆவணங்களும் மீட்கப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் அதையொட்டிய நகரங்களில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை நடைபெறுவதாக சி.பி.ஐ. கவனத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். அப்போது சிலர் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லியில் ரோகிணி மற்றும் கேசவ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக பெண்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட 7 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்களது பெயர் சோனிபட்டை சேர்ந்த நீரஜ், டெல்லி பஸ்சிம் விஹாரை சேர்ந்த இந்து பவார், படேல் நகரை சேர்ந்த அஸ்லம், கன்னையா நகரை சேர்ந்த பூஜா காஷ்யப், மாளவியா நகரை சேர்ந்த அஞ்சலி, கவிதா மற்றும் ரிது ஆகும். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    இந்த கும்பல், குழந்தை இல்லாத தம்பதிகளை சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். பிறந்த பச்சிளம் குழந்தைகளை தத்துக்கொடுப்பு என்ற பெயரில் முறையாக வழங்குவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி பலரும் இந்த கும்பலிடம் பணத்தைக் கொடுத்துள்ளனர். இதன்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் பெறப்பட்டு உள்ளது.

    பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி தத்தெடுப்பு ஆவணங்களை உருவாக்கி குழந்தைகளை விற்றுள்ளனர். இந்த குழந்தைகள் பெற்றோரிடமும், பாதுகாவலர்களிடமும் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 10 குழந்தைகளை இந்த கும்பல் விற்றுள்ளதாக தெரிகிறது.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5.5 லட்சம் ரொக்கமும், ஆவணங்களும் மீட்கப்பட்டு உள்ளன.

    மேலும் இந்த சோதனையின்போது 2 பச்சிளம் குழந்தைகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

    இதுபோன்ற சட்டவிரோத குழந்தை விற்பனை செய்யும் தொழில் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியிருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக கொல்லிமலையில் வீடு வீடாக சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். #ChildKidnap
    கொல்லிமலை:

    குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கொல்லிமலையில் உள்ள சுகாதார நிலையங்களை ஆய்வு செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழு தொடர்ந்து சுகாதார நிலையங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்தது.

    இந்த நிலையில் கொல்லிமலையில் அதிக அளவில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட புகார் எழுந்ததையடுத்து, ஆய்வு குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க மாவட்ட சுகாதார துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, ஏற்கனவே செயல்பட்டு வந்த 3 குழுக்களை நிறுத்திவிட்டு, ஆய்வை தீவிரப்படுத்துகின்ற வகையில், புதியதாக 16 குழுக்களை அமைத்து இன்று மற்றும் நாளை (30-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.

    இதில் ஒவ்வொரு குழுவிலும் தலா அரசு டாக்டர்-1, சுகாதார மேற்பார்வையாளர்-1, ஆய்வாளர்-1, பகுதி சுகாதார நர்சு-1, சமுதாய சுகாதார நர்சு-1, கிராம சுகாதார நர்சு-1, பயிற்சி பள்ளி நர்சு-1 என 7 பேர் வீதம் இடம் பெற்றுள்ளனர்.

    இன்று காலை 6 மணி முதல் இவர்கள் கொல்லிமலையில் உள்ள 16 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் தங்களது ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளனர்.

    ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் தலா ஒவ்வொரு குழுவாக சென்று தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இங்கு பிறப்பு சான்றிதழ் பதிவேடு, ஊழியர்களின் வருகை பதிவேடு, கர்ப்பிணி பெண்களின் வருகை பதிவேடு, கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்த விபரம் பதிவேடு, குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி பதிவேடு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பதிவேடுகளில் இருக்கும் தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று குழந்தைகள் குறித்து பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அரியூர் நாடு, வளப்பூர் நாடு, செம்மேடு, சோளக்காடு, மேக்னிக்காடு உள்பட பல கிராமங்களில் வீடு வீடாக சென்று சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் விபரம் குறித்தும் கணக்கெடுத்து வருகின்றனர்.

    அப்போது அதிகாரிகள் பெற்றோர்களிடம் எப்போது குழந்தை பிறந்தது?, தனியார் மருத்துவமனையா? அல்லது அரசு மருத்துவமனையில் பிறந்ததா?, எத்தனை குழந்தை உள்ளது?, இந்த குழந்தை இப்போது எங்கு இருக்கிறார்கள்? எங்கு படிக்கிறார்கள்? என பல்வேறு கேள்விகள் கேட்டனர். அவர்கள் கூறிய தகவல்களை அதிகாரிகள் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

    இந்த ஆய்வு பணி நாளை (30-ந்தேதி) முடிவடைந்ததும், இது குறித்த முழுமையான ஆய்வு அறிக்கை சென்னையில் உள்ள தலைமை சுகாதார துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே கொல்லிமலை பவர்காடு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த டிரைவர் முருகேசன் என்பவர் குழந்தை விற்பனை விவகாரத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ChildKidnap
    ×