என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டின் மேற்கூரை சேதம்"

    • பெயர் சூட்டும் நிகழ்வில் வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்தது
    • உயிரிழந்த குழந்தையின் தாயார் ராதா மகேஸ்வரி மருத்துவமனையில் அனுமதி

    தூத்துக்குடி அருகே குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வில் வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்ததில், விழாவுக்கு வந்த எதிர்வீட்டைச் சேர்ந்த பெண்ணின் 11 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தையின் தாயார் ராதா மகேஸ்வரிக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் நடந்த இந்த துயரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • இடி தாக்கியதில், சோலார் உருளைகள் வெடித்து சிதறியது தெரியவந்தது.
    • அவரைகுடும்பத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தினர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே பழைய மத்திகிரி பகுதியில் உள்ள பொதிகை நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் யேசுபாண்டியன். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் சூர்யா, சினேகா என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஓசூர் பகுதியில் சூறாவளி காற்று இடி மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது, மத்திகிரி பகுதியில் பயங்கர சத்தம் காணப்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டதில், யேசுபாண்டியன் வீட்டின் மேல் தளத்தில் உள்ள உருளை சோலார் வாட்டர் ஹீட்டரில் இடி தாக்கியது தெரியவந்தது.

    இடி தாக்கியதில், சோலார் உருளைகள் வெடித்து சிதறியது தெரியவந்தது. மேலும், வீட்டின் மேல் தளத்தில் ஓட்டை விழுந்து முதல் மாடியில் தனது அறையில் இருந்த பட்டதாரி சினேகா (22) மீது சிமெண்ட் கல் விழுந்து படுகாயமடைந்தார்.

    உடனடியாக, அவரைகுடும்பத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தினர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    ×