என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெண்களுக்கு ரூ.1000 கொடுத்தால் சரியாகிவிடுமா? பிச்சைக்காசு..!- சவுமியா அன்புமணி ஆதங்கம்
- ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார்.
- தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்கி இருக்கிறார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார்.
அவரை தொடர்ந்து, அவரது மனைவி டாக்டர் சவுமியா அன்புமணி, 'தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு கிடைக்காமல் இருக்கும் 10 முக்கிய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கும், தமிழ்நாட்டில் பெண்களின் நிலையை உயர்த்திடுவதற்கும் விழிப்புணர்வு பிரசார பயணமாக சவுமியா அன்புமணியின் சுற்றுப்பயணம் இருக்கும் என பா.ம.க. சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சவுமியா அன்புமணி தலைமை தாங்கி காஞ்சீபுரம் மாவட்டம் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர் மஹாலில் இன்று காலை தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
அங்கு மேடையில்சவுமியா அன்புமணி பேசியதாவது:-
அழகு பெண்களே.. சிங்கப் பெண்களே.. உங்கள் அனைவருக்கும் வணக்கம். காஞ்சிபுரம் மண்ணில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணத்தை தொடங்கி இருக்கிறோம்.
காஞ்சிபுரத்திற்கு நான் எத்தனை முறை வந்திருப்பேன் என்கிற கணக்கே இல்லை. காஞ்சி காமாச்சி அம்மனை எத்தனை முறை தரிசித்திருக்கிறேன். அத்திவரதர் வைபவம்.
இப்படிப்பட்ட பெருமைகளையும், அருமைகளையும் கொண்ட காஞ்சி மாநகரத்தில் "சிங்கப்பெண்ணே.. எழுந்து வா.." என்று மகளிர் உரிமை மட்டு பயணத்தை தொடங்கியிருக்கிறோம்.
நிம்மதியான, கடன் சுமையின்றி வாழும் வாழ்க்கை தான் நம்முடைய உரிமை. அது கொடுப்பது அரசின் கடமை.
பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை இலவசம், மருத்துவம் இலவசம், விவசாயிகளுக்கு அனைத்தும் இலவசமாக தருவது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே.
பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றம் வேண்டும்.
இங்கு மேடையில் அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் மதுக்கடையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக சிறைச் சென்றவர்கள்.
உங்களுக்கு ஒரு பிச்சனை என்றால் இவர்கள் தான் கொடி பிடித்து நிற்பார்கள். இவர்கள் தான் உங்களுடைய ரியல் ஹீரோ. திரையில் தேடாதீர்கள். அவர்கள் உங்களுக்காக ஓடோடி வரமாட்டார்கள். அவர்களுக்குதான் உங்களுடைய ஆதரவுகளை மனதார தரவேண்டும்.
பெண்களுக்கு ரூ.1000 கொடுத்தால் சரியாகிவிடுமா? யாருடைய பணம் அது. டாஸ்மாக்கில் கொடுத்த பணம் தான் பெண்களுக்கு வந்து சேருகிறது. அது மீண்டும் எங்கு செல்லும் டாஸ்மாகிற்கு தான் செல்லும். 1000 ரூ கொடுத்தவுடன் மனசுமாறி ஓட்டு போட்டுவிடுகிறார்கள்.
பெண்களாகிய நீங்கள் ஒரு நாளுக்கு 1000 ரூ சம்பாதிக்க வேண்டும். அதற்கான வேலை வாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்கி கொடுக்க வேண்டும்.
யாராவது ரூ.500, ரூ.1000 என பிச்சைப்போட்டால் வாங்கிக்கொள்வதா ? அது அசிங்கம் இல்லையா? ஓட்டு வாங்க உல்களை ஏமாற்றக் கொடுக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






