என் மலர்
நீங்கள் தேடியது "பான் இந்தியா திரைப்படங்கள்"
- கதைசொல்லலில் சரிவு அங்குதான் தொடங்குகிறது.
- இந்தித் திரைப்படத் துறையில் பணி கலாச்சாரம் பிடிக்காததால் பாலிவுட்டை விட்டு வெளியேறுவதாக அவர் அறிவித்தார்.
பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் பான் இந்தியா படங்கள் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்தித் திரைப்படத் துறையில் பணி கலாச்சாரம் பிடிக்காததால் பாலிவுட்டை விட்டு வெளியேறுவதாக அவர் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்தார்.
அப்போது பான் இந்தியா படங்கள் குறித்து பேசிய அனுராக் காஷ்யப், "என் கருத்துப்படி, பான்-இந்தியா ஒரு மிகப்பெரிய மோசடி. ஒரு படத்தை உருவாக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும். பலர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அந்தப் படத்தைச் சார்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கை முறையும் அதைப் பொறுத்தது. ஒரு படத்திற்காகச் செலவிடப்படும் பணம் முழுவதும் படத்தைத் தயாரிப்பதற்குச் செல்வதில்லை.
அப்படிச் செய்தாலும், அது பெரும்பாலும் மிகப்பெரிய, யதார்த்தமற்ற செட்களில் செலவிடப்படுகிறது. இதில் எந்த அர்த்தமும் இல்லை. இதுபோன்ற படங்களில் 1 சதவீதம் மட்டுமே வெற்றி பெறுகிறது" என்று கூறினார்.
மேலும் வெற்றிபெற்ற படங்களைப் பின்பற்றும் போக்கு குறித்து பேசிய அவர், 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' வெற்றிக்குப் பிறகு, எல்லோரும் தேசபக்தி படங்களைத் தயாரிக்கத் தொடங்கினர்.
'பாகுபலி'க்குப் பிறகு, எல்லோரும் பிரபாஸையோ அல்லது வேறு யாரையாவது வைத்து பெரிய படங்களைத் தயாரிக்க விரும்பினர். 'கேஜிஎஃப்' வெற்றி பெற்றபோது, எல்லோரும் அதைப் பின்பற்ற விரும்பினர். கதைசொல்லலில் சரிவு அங்குதான் தொடங்குகிறது" என்று தெரிவித்தார்.
- இந்தி ரசிகர்கள் தென்னிந்திய படங்களையும் விரும்ப தொடங்கி உள்ளனர்
- நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்க இயக்குனர்கள் முயல்கின்றனர்
தென்னிந்திய மாநிலங்களில் இருந்து நாடு முழுவதும் வெளியிடப்படும் திரைப்படங்கள் பெரும் வசூலை அள்ளி குவிக்கின்றன. புஷ்பா, கேஜிஎஃப்-2, காந்தாரா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் இதற்கு உதாரணங்கள்.
தற்போதைய இயக்குனர்களும், முன்னணி தென்னிந்திய கதாநாயகர்களும் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தங்கள் படங்கள் உருவாக வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முன்னணி நடிகரை தங்கள் திரைப்படங்களில் ஒரு வேடத்தில் இடம்பெற செய்து நாடு முழுவதும் உள்ள பல மாநில ரசிகர்களையும் ஈர்க்க தொடங்கி உள்ளனர்.
இவ்வருடம் வெளியாகப் போகும் 7 தென்னிந்திய திரைப்படங்கள், பாலிவுட்டில் பெரும் வசூலை குவிக்கப் போவதாக திரைப்பட வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.
அந்த திரைப்படங்கள் பின்வருமாறு:
1. கல்கி 2898 ஏ.டி. - பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம். பிரபாஸ் மற்றும் தீபிகா ஆகியோருடன் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

2. புஷ்பா 2, தி ரூல் - அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் இப்படம், முதல் பாகத்தை விட சிறப்பாக உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3. காந்தாரா, சேப்டர் 1 - காந்தாரா முதல் பாகத்தை விட பெரும் வெற்றி பெறும் முனைப்பில், ரிஷப் ஷெட்டி இப்படத்திற்காக உழைத்து வருகிறார்.

4. தேவரா பாகம் 1 - ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு ஜுனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு தரும் இவ்வருட பரிசு. இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தெலுங்கு திரையுலகில் நுழைகிறார்.

5. கேம் சேஞ்சர் - முன்னணி தெலுங்கு ஹீரோவான ராம்சரணும், தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் ஷங்கரும் இணைந்துள்ள படம். அரசியல் நெடி அதிகம் உள்ள இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

6. இந்தியன் 2 - 1996ல் நாடு முழுவதும் சக்கைபோடு போட்ட கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். சேனாபதியாக மீண்டும் மிரட்ட வருகிறார் கமல்.

7. கங்குவா - நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் ஹீரோ சூர்யா நாயகனாக நடிக்கும் படம். இதுவரை இல்லாத சாதனையாக 38 மொழிகளில் உருவாகிறது.

இப்படங்கள் ரசிகர்களிடம் எவ்வளவு தூரம் வரவேற்பை பெறும் என்பது வரும் மாதங்களில் தெரிந்து விடும்.






