என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாராயணமூர்த்தி"

    • நாராயணமூர்த்தி இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை பம்மலில் உள்ள அவரது வீட்டில் நடைபெறுகிறது.
    • நாராயணமூர்த்தி உடலுக்கு திரை உலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.

    கடந்த 2001-ம் ஆண்டு பிரபுதேவா, கவுசல்யா, காயத்ரி ஜெயராம் நடிப்பில் வெளியான 'மனதை திருடி விட்டாய்' படத்தை இயக்கியவர் ஆர்.டி.நாராயண மூர்த்தி (வயது 59). இந்த படத்தில் இடம் பெற்ற பிரபுதேவா, வடிவேலு, விவேக் காமெடி காட்சிகள் இன்று வரை ரசிக்கும்படியாக உள்ளது.

    அடுத்ததாக ஒரு பொண்ணு, ஒரு பையன் படத்தை நாராயணமூர்த்தி இயக்கி இருந்தார். தொடர்ந்து சன் டி.வி.யில் வெளிவந்த நந்தினி, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், அன்பே வா, மருமகளே வா போன்ற சின்னத்திரை தொடர்களையும் அவர் இயக்கி உள்ளார். இயக்குனர் நாராயணமூர்த்திக்கு கடந்த வாரம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வார காலமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.30 மணியளவில் இயக்குனர் நாராயண மூர்த்தி காலமானார்.

    அவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், லோகேஷ்வரன் என்ற மகனும் உள்ளனர். மகன் லண்டனில் பணிபுரிந்து வருகிறார். அவர் சென்னை திரும்பியதும் நாராயணமூர்த்தி இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை பம்மலில் உள்ள அவரது வீட்டில் நடைபெறுகிறது. அவரது உடலுக்கு திரை உலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.

    • உங்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியை அனுபவித்து இருக்கமாட்டீர்கள்.
    • 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் ‘லிப்ட்’ கேட்டே பயணித்துக்கொண்டு இருந்தேன்.

    நியூயார்க்:

    ஐ.நா.வில் இந்திய தூதரகம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல தொழிலதிபரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'உங்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியை அனுபவித்து இருக்கமாட்டீர்கள். ஆனால் நான் அனுபவித்து இருக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் 'லிப்ட்' கேட்டே பயணித்துக்கொண்டு இருந்தேன். அப்போது பல்கேரியாவுக்கும் இன்றைய செர்பியாவுக்கும் இடையே உள்ள நிஷ் என்ற பகுதியில் 120 மணி நேரம் (5 நாட்கள்) பட்டினி கிடந்தேன்' என்று தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் நிபுணர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×