என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    யார்ரா அந்த பையன்… நான்தான் அந்தப் பையன் – விமர்சனம்
    X

    யார்ரா அந்த பையன்… நான்தான் அந்தப் பையன் – விமர்சனம்

    • குடும்ப உறவுகள், காதல் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பால்ராஜ்.
    • முக்கோண உறவுகளை மையமாக கொண்டு நகர்கிறது இந்த கதை.

    கார் மெக்கானிக்காக வேலை செய்யும் பால்ராஜ், தனது மனைவி காயத்ரி ரேமாவுடன் வாழ்ந்தாலும் அவர்களது இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் உருவாகிறது. இந்த நிலையில், குடிகார கணவனை இழந்த சுவேதா ஸ்ரீயுடன் பால்ராஜ்க்கு ரகசிய காதல் உருவாகிறது.

    ஒருபுறம் இந்த காதல் வளர்ந்துக் கொண்டிருக்க, மறுபுறம் சுவேதா மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவி மரியாவுக்கும் மோகம் ஏற்படுகிறது. இதனால் மூன்று பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

    இறுதியில் இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கார் மெக்கானிக்காகவும், குடும்ப வாழ்க்கையில் குழப்பத்துடன் இருக்கும் மனிதராகவும் நாயகன் பால்ராஜ் இயல்பான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். மனைவியுடன் ஏற்பட்ட விரிசல், அதனால் ஏற்பட்ட மன வேதனை, மறுபக்கம் புதிய காதலால் கிடைக்கும் ஆறுதல் ஆகிய உணர்வுகளை அவர் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

    காயத்ரி ரேமா, கணவன் மீது கோபம் கொண்ட மனைவியாக தனது எதிர்ப்பை கண்களின் மூலம் வெளிப்படுத்தும் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். சுவேதா ஸ்ரீ, வாழ்க்கையில் ஏமாற்றங்களை சந்தித்த பெண்ணாகவும், புதிய வாழ்க்கையை தொடங்க விரும்பும் மனிதராகவும் கதைக்கு தேவையான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி மரியா தனது அனுபவமிக்க வில்லன் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

    இயக்கம்

    குடும்ப உறவுகள், காதல் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பால்ராஜ். முக்கோண உறவுகளை மையமாக கொண்டு நகரும் இந்த கதையில், திரைக்கதையில் இன்னும் வலுவான தருணங்கள் இருந்திருந்தால் படம் மேலும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

    ஒளிப்பதிவு இசை

    உதயன் ஒளிப்பதிவு மற்றும் விஜய் பிரபு இசை கதைக்கு தேவையான அளவில் மட்டுமே அமைந்துள்ளது.

    Next Story
    ×