என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷிவாத்மிகா"

    • சிவாத்மிகா, தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.
    • யதார்த்த கதைகளில் நடித்துவிட்டேன்.

    'இதுதாண்டா போலீஸ்' படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த டாக்டர் ராஜசேகர் -ஜீவிதாவின் இளைய மகள் ஷிவாத்மிகாவும் நடிகை ஆவார். தமிழில் 'பாம்', 'ஆரோமலே' படங்களில் நடித்துள்ள சிவாத்மிகா, தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷிவாத்மிகாவிடம், 'என்ன மாதிரியான கதைகளில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கும் போது, "யதார்த்த கதைகளில் நடித்துவிட்டேன். எனக்கு ஆக்ஷன் கதா பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. எனது தந்தையை போல ஆக்ஷனில் கலக்க விரும்புகிறேன். அதேவேளை காதல் நிரம்பி வழியும் படங்களிலும் நடிக்க துடிக்கிறேன். நல்ல கதைகள் அமையும் என்று நம்புகிறேன்" என்றார்.

    • இந்த படத்தின் மூலம் பெரிய நடிகருடன் வேலை செய்ய இருக்கிறேன்.
    • அநீதி படத்திற்கு பிறகு கிடைத்த ஆதரவுக்கு நன்றி.

    GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படப்புகழ் விஷால் வெங்கட் இந்த படத்தை இயக்குகிறார். வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிராமாவாக உருவாகும் இந்த திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள சிறப்பான பூஜையுடன் இனிதே துவங்கியது.

     

    பூஜையை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது, ''இந்த படத்தில், மிகச் சுவாரஸ்யம் காத்திருக்கிறது. நாசர் மாதிரி பெரிய நடிகருடன் வேலை செய்யப் போகிறேன். இமான் சாரின் ரசிகன் நான். அவர் இசையமைக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள்."

    "விஷால் வெங்கட் மதுரைக்கு வந்து கதை சொன்னார். 3 மணி நேரம் சொன்னார். அப்போதே ஓகே சொல்லிவிட்டேன். அவரை நம்பி முழுமையாக என்னை ஒப்படைத்து விட்டேன். அநீதி படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். தயாரிப்பாளர்களுக்கு இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி,'' என்று தெரிவித்தார்.

    ×