விஜய்க்கு பிடித்த உணவு இதுதான்... தினமும் மதியம் அதையே சாப்பிடுவார்- மமிதா பைஜூ சொன்ன சீக்ரெட்

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விஜய்க்கு பிடித்த உணவு இதுதான்... தினமும் மதியம் அதையே சாப்பிடுவார்- மமிதா பைஜூ சொன்ன சீக்ரெட்
Published on

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் விஜயின் கடைசி படம் என கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இப்படம் ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் இதுவரை வெளியாகாமல் உள்ளது.

'ஜன நாயகன்' படத்தில் பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் நரேன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என்.கே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தில் நடித்துள்ள மமிதா பைஜு, விஜயுடன் பணிபுரிந்த அனுபவத்தை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். மமிதா பைஜு கூறியதாவது:- விஜய் சார் படப்பிடிப்பு தளத்திற்கு மிகவும் சரியான நேரத்தில் வருபவர். மிகவும் நிதானமான இயல்புடையவராக இருந்தாலும், அவர் மிகவும் இனிமையானவர். நாம் அவரிடம் சிறிய சிறிய விஷயங்களைச் சொன்னாலும், அவர் அவற்றை நினைவில் வைத்திருப்பார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் அவரைச் சந்தித்தாலும், அவர் திடீரென்று என்னிடம் அதைப் பற்றிக் கேட்பார்.

அவருக்குப் பிடித்த உணவுகள் பற்றியும் நான் தெரிந்துக்கொண்டேன். அவர் எப்போதும் மதிய உணவாக சால்மன் (மீன்) சாப்பிடுவார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நான் எப்போதும் அவரிடம், "சார், நீங்கள் சால்மன் (மீன்) சாப்பிட்டீர்களா?" என்று கேட்பேன், அவர் ஒவ்வொரு முறையும் புன்னகையுடன் கூறுவார்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com