search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assembly constituencies"

    • தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்றத் தொகுதிக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.

    தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதி, 25 பாராளுமன்ற தொகு திகளுக்கு வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் கடந்த 18-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

    வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

    தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்றத் தொகுதிக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மல்காஜ்கிரி தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 114 பேர் மனுதாக்கல் செய்தனர்.

    அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்தால் இந்த தொகுதியில் 8 வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்

    குறைந்தபட்சமாக அடிலாபாத் தொகுதியில் 23 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    இதேபோல் ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிக ளுக்கு மொத்தம் 5460 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 25 பாராளுமன்ற தொகுதி களுக்கு 965 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.

    இன்று மனுதாக்கல் பரிசீலனை செய்யப்பட்டு விதிமுறைகளை பின்பற்றாத வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட உள்ளன.

    வருகிற 29-ந் தேதிக்குள் வேட்பு மனு வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    • 3 மண்டலங்களிலும் துணை கமிஷனராக செயல்பட்டு வருகிற அதிகாரிகள் இந்த பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தபால் ஓட்டுகள் பற்றிய விவரங்களை சேகரித்து வழங்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ஏற்கனவே 3 பேர் நியமிக்கப்பட்டனர். 3 மண்டலங்களிலும் துணை கமிஷனராக செயல்பட்டு வருகிற அதிகாரிகள் இந்த பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் 16 சட்டமன்ற தொகுதிகள் அடிப்படையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

    16 உதவி தேர்தல் அதிகாரிகள் பெயர் விவரம் மற்றும் தொடர்பு கொள்ளும் எண்களுடன் தொகுதி வாரியாக விவரம் வருமாறு:-

    ஆர்.கே.நகர் தொகுதி

    எஸ்.வாசுகி, இணை இயக்குனர் ஆதி திராவிட நலத்துறை. செல்-73388 01243

    அனுஷ்யாதேவி, மாவட்ட வருவாய் அதிகாரி, சென்னை. செல்-94450 00901.

    வி.முத்துசாமி, இணை கமிஷனர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, செல்-90951 54565

    மகாலட்சுமி, பொது மேலாளர், தமிழ்நாடு சர்க்கரை கழகம், செல்-80155 02885.

    எஸ்.தனலிங்கம், பொது மேலாளர், டான்சிட்கோ, செல்-94450 06554.

    எம்.கலைச்செல்வி, பொது மேலாளர், மாநில தொழில்கள் முன்னேற்ற கழகம், செல்-96778 51335.

    குழந்தைசாமி, செட்டில் மெண்ட் அதிகாரி, சர்வே மற்றும் செட்டில்மெண்ட், செல்-99449 14120.

    பி.மணிவண்ணன், கூடுதல் இயக்குநர், ஊரக சுகா தார மருத்துவ சேவை, செல்-73581 44619.

    வி.சங்கர நாராயணன், பொது மேலாளர், தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன், செல்-94865 91402.

    என்.ராகவேந்திரன், பொது மேலாளர், டாம்கால், செல்-90477 99947.

    செந்தில்குமார், பொது மேலாளர், அரசு கேபிள் நிறுவனம், செல்-82704 89470.

    ஆர்.பன்னீர்செல்வம், சீனியர் மண்டல மேலாளர், டாஸ்மாக், செல்-96293 28933.

    துர்காதேவி, செயலாளர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், செல்-94450 74956.

    சரவணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி, செல்-94451 90740.

    விஜயலட்சுமி, பொது மேலாளர், தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழகம். செல்-70100 34495.

    கவிதா, பொது மேலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், செல்-99629 55626.

    85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், தபால் ஓட்டுகள் பற்றிய விவரங்களை சேகரித்து வழங்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஒடிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் ஹின்ஜிலி, பிஜெப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். #NaveenPatnaik #Odishaassemblypolls
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 147 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் ஆட்சியை மீண்டும் பிடிக்க முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் ஹின்ஜிலி, பிஜெப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #NaveenPatnaik #Odishaassemblypolls
    தெலுங்கானா மாநில சட்டசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், 105 தொகுதிகளுக்கான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் வேட்பாளர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று அறிவித்தார். #Telangana #ChandrashekarRao #TRSCandidates
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சி காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்தார். அதன்படி இன்று அமைச்சரவையை கூட்டி சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டது.



    இதையடுத்து ஆளுநர் நரசிம்மனை சந்தித்த சந்திரசேகர ராவ், சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரை கடிதத்தை வழங்கினார். இந்த பரிந்துரையை ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டார். அதேசமயம், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடருமாறு முதல்வர் சந்திரசேகராவிடம் கேட்டுக்கொண்டார். ஆளுநர் விடுத்த கோரிக்கையை சந்திரசேகர ராவ் ஏற்றுக்கொண்டார்.

    இதற்கிடையே சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய சந்திரசேகர ராவ், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று  வெளியிட்டுள்ளார். மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் 105 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க முடிவு செய்துள்ளார்.

    புதிதாக உதயமான தெலுங்கானாவில் 2014-ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலில மொத்தம் உள்ள 119 இடங்களில் சந்திரசேகரராவின் கட்சி 90 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது. #Telangana #ChandrashekarRao #TRSCandidates
    ×