என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ்நாடு தான் எனது வீடு... 8 கோடி மக்களும் என் சொந்தம் - த.வெ.க. தலைவர் விஜய்
    X

    தமிழ்நாடு தான் எனது வீடு... 8 கோடி மக்களும் என் சொந்தம் - த.வெ.க. தலைவர் விஜய்

    • நம்மை ஏளனமாக மற்றவர்கள் நினைக்கும் நேரத்தில் தோன்றுவது தான் கரேஜ்.
    • நம்மை தாழ்த்தும்போது தான் உத்வேகம் வரும்.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை சேலம் வந்தார்.

    சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் காலை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு விஜய் வந்தார். அங்கிருந்து கார் மூலமாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து காரில் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு வந்த அவருக்கு வழி நெடுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மக்கள் சந்திப்பு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜயை கண்டதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:

    * நம்மை ஏளனமாக மற்றவர்கள் நினைக்கும் நேரத்தில் தோன்றுவது தான் கரேஜ்.

    * தைரியம் தான் அனைத்திற்கும் அடிப்படை.

    * நம்மை தாழ்த்தும்போது தான் உத்வேகம் வரும்.

    * எந்த விஷயத்தில் நம்மை கிண்டல், கேலியாக பேசுகிறார்களோ அதை வெற்றியாக மாற்றிக்காட்டுவோம்.

    * என்னை சீண்டிப்பார்ப்பவர்களுக்கு ஒன்று கூறுகிறேன், என் தாய் நாடாக தமிழ்நாடு தான் எனது வீடு.

    * விஜய் பனையூரை விட்டு வெளியே வா என அழைப்பவர்களுக்கு என் வீடு எங்கே இருக்கிறது என்றாவது தெரியுமா?

    * என் வீடான தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களும் என் சொந்தம், தமிழ்நாட்டின் முதல் படை வீரன் நான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×