என் மலர்
நீங்கள் தேடியது "Salem சேலம்"
- அனுபவம் இல்லாதவர்களால் ஆட்சி செய்ய முடியுமா? என அழுகிறார்கள்.
- அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்து கொம்பு முளைத்தவர்களை தவிர வேறு யார் இங்கு இருக்கிறார்கள்?
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜயை கண்டதும் தொண்டர்கள உற்சாகமாக முழக்கம் எழுப்பினர்.
கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-
மற்ற கட்சியினர் தரும் பணத்தை வாங்கிக்கொண்ட அவர்களின் செவிகளில் விசிலை ஊதி அனுப்புங்கள். பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கும் கலாச்சாரம் மாற வேண்டும், பணத்தை கொடுத்தால் ஏமாறுவீர்களா?
வண்டி வண்டியாக கொண்டுவந்து பணத்தை கொட்டுவார்கள், பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் எல்லாம் உங்கள் பணம் தான்.
எங்கள் ஓட்டு எங்கள் உரிமை எங்களை யாரும் விலைக்கு வாங்க உரிமையில்லை, எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான்.
எந்த கட்சியையும் அழிக்க, ஒழிக்க நான் அரசியலுக்கு வரவில்லை. வெறுப்பு அரசியல் செய்ய நான் வரவில்லை. மக்களுக்கு என் நன்றி கடனை செலுத்தவே அரசியலுக்கு வந்தேன்.
அனுபவம் இல்லாதவர்களால் ஆட்சி செய்ய முடியுமா? என அழுகிறார்கள். மக்களே உங்களையே கேட்கிறேன் அனுபவம் என்று கூறுகிறார்களா, அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்தை தாண்டி என்ன செய்தார்கள்?
அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்து கொம்பு முளைத்தவர்களை தவிர வேறு யார் இங்கு இருக்கிறார்கள்?
அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் அடுத்தவர்கள் முகவரியில் அரசியல் வாதிகளாக இருக்கும் அனைவருக்கும் ஒரு சவால்.
என்னைப்போல் சொந்தமாக ஒரு கட்சியை ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்க உங்களுக்கு தில், திராணி இருக்கிறதா?
75 வருடம், 50 வருடம் என அரசியல் கட்சி நடத்தி வருபவர்களை மீறி களத்தில் தனியாக நின்று தவெக மக்கள் சக்தியாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சேலம் சுகவனேசுவரர் சுவாமி கோவி லில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடைப்பெற உள்ளது.
- தேர்த்திருவிழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. இதனைத் தொடர்ந்து 29-ந்தேதி சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைப்பெற உள்ளது.
சேலம்:
பிரசித்தி பெற்ற சேலம் சுகவனேசுவரர் சுவாமி கோவி லில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடைப்பெற உள்ளது. தேர்த்திருவிழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. இதனைத் தொடர்ந்து 29-ந்தேதி சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைப்பெற உள்ளது. 25-ந் தேதி முதல் ஜூன் மாதம் 2-ந் தேதி வரை தினமும் காலை மற்றும் மாலை சாமி புறப்பாடு நடைப்பெறும். மேலும் மாலை வேளையில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே அனைத்து பக்கதர்களும், பொதுமக்களும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று இறைவன் அருள் பெற வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா மற்றும் அறங்காவலர்கள் கேட்டுக்கொண்டனர்.






