search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur Exporters Association"

    • ரூ.1 கோடி திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.
    • ரூ.30 லட்சத்தை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    நெதர்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு பையர் மூலமாக பனியன் ஆர்டர் வழங்கப்பட்டு, திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தினர் ஆடைகளை தயாரித்து அனுப்பி வைத்தனர். இதற்கான தொகையாக ரூ.1 கோடி திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் பணத்தை முழுவதும் வழங்க வேண்டும். ஆனால் பிப்ரவரி மாதம் வரை வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர் முறையிட்டார். ஏற்றுமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டு நெதர்லாந்தில் உள்ள நிறுவனத்திடம் இருந்து ரூ.70 லட்சத்தை பெற்றுக்கொடுத்தது. மீதம் உள்ள ரூ.30 லட்சத்தை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ஏற்றுமதியாளர்கள் சட்டவிதிமுறைக்கு உட்பட்டு உரிய ஆவணங்களுடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்தால், ஆவணங்களின் அடிப்படையில் இதுபோல் பணத்தை பெறுவது எளிது. எனவே முறைப்படி உரிய ஆவணங்களுடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பின்னலாடை உற்பத்தி, ஜாப்ஒர்க் சார்ந்த 20 சங்கங்கள் உறுப்பினராக உள்ளன.
    • 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி கவுன்சில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை துறையினர் தங்களுக்குள் வர்த்தகம் சார்ந்து ஏற்படும் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காணும்வகையில் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். இதில் பின்னலாடை உற்பத்தி ,ஜாப்ஒர்க் சார்ந்த 20 சங்கங்கள் உறுப்பினராக உள்ளன. ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு ஆர்பிட்ரேஷன் கவுன்சில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி கவுன்சில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    ஆடை உற்பத்தியாளர்கள் - ஜாப்ஒர்க் நிறுவனத்திரிடையே ஏற்படும் நிதி சார் பிரச்சினைகள்,ஏற்றுமதியாளர் - வெளிநாட்டு வர்த்தகரிடையே ஏற்படும் நிதி சார்ந்த பிரச்சினைகளுக்கு, இந்த கவுன்சில் சுமூக தீர்வு காண்கிறது.சைமா மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கங்கள், ஆர்பிட்ரேஷனில் பிரதான உற்பத்தியாளர் சங்கங்களாக அங்கம்வகித்து வருகின்றன. இந்நிலையில் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் இருந்து விலக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன், ஆர்பிட்ரேஷன் கவுன்சில் செயலாளர் ராமசாமிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க 262வது செயற்குழு கூட்டம் கடந்த மார்ச் 6ல் கூடியது. இதில் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் தொடரலாமா என விவாதிக்கப்பட்டது. ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் இருந்து விலகலாம் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆர்பிட்ரேஷன் கவுன்சிலின் ஆயுட்கால உறுப்பினர் என்கிற நிலையை ஏற்றுமதியாளர்கள் சங்கம் வாபஸ் பெறுகிறது.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆர்பிட்ரேஷன் கவுன்சில், விலகல் முடிவை மறுபரீசீலனை செய்யுமாறு ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு பதில் கடிதம் அனுப்பிவைத்துள்ளது.

    • 2ந் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.
    • 12 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் 2022 - 2025க்கான புதிய நிர்வாகிகளை தேர்வுசெய்வதற்கான தேர்தல் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.கடந்த 2ந்தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. கே.எம்., நிட்வேர் சுப்பிரமணியத்தை தலைவராக கொண்ட அணியினர் 7 நிர்வாக பதவி, 20 செயற்குழு உறுப்பினர் என சங்கத்தின் 27 பதவிக்கும் மனு தாக்கல் செய்தனர். இவர்களுக்கு எதிராக 12 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சுப்பிரமணியம் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு இளங்கோவன், ராஜ்குமார், இணை செயலாளர் பதவிக்கு சின்னசாமி, குமார் துரைசாமி,பொருளாளர் பதவிக்கு கோபாலகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு எதிராக துணை தலைவர் பதவிக்கு, செந்தில்குமார், பொருளாளர் பதவிக்கு கொண்டசாமி, இணை செயலாளர் பதவிக்கு செந்தில் போட்டியிடுகின்றனர்.

    தலைவர் பதவிக்கு சுப்பிரமணியம் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் போட்டியின்றி சங்க தலைவராகிறார். சக்திவேல், ராஜாசண்முகம் ஆகியோரை தொடர்ந்து சங்கத்தின் 3-வது தலைவராக சுப்பிரமணியம் பொறுப்பேற்கிறார்.இவரது அணியில் உள்ள திருக்குமரனும் போட்டியின்றி பொதுச்செயலாளராகிறார். இவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தேர்தல் பொறுப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.வருகிற 14-ந்தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள். 15-ந்தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.கூடுதல் நபர்கள் போட்டியிடும் பதவிகளுக்கு மட்டும் வருகிற 30-ந் தேதி காலை, 'நிப்ட்-டீ' கல்லுாரியில் தேர்தல் நடைபெறும். சங்க உறுப்பினர்கள் பங்கேற்று ஓட்டளிப்பர். உடனடியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

    • 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளில் பதவிக்காலம் முடிகிறது.
    • 66வது மகாசபை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கமான சைமாவில் 6 நிர்வாக பதவி, 21 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளில் பதவிக்காலம் முடிகிறது.கடந்த 2ந்தேதி கூடிய செயற்குழுவில் தற்போது உள்ள நிர்வாகிகளே, 2022 - 2025ம் ஆண்டில் பதவியில் தொடரலாம் எனவும், உறுப்பினர் யாரேனும் தெரிவித்தால் சங்க விதிமுறைகள்படி தேர்தல் நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.வருகிற 29ந்தேதி மாலை 4:30 மணிக்கு, ஹார்வி ரோட்டில் உள்ள சங்க அரங்கில் 66வது மகாசபை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலை தவிர்க்கும் சைமாவின் செயற்குழு முடிவு ஒருதரப்பு உறுப்பினர் குழுவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.புதியவர்கள், இளைஞர்களுக்கு மூத்த நிர்வாகிகள் வழிவிடவேண்டும் என சங்க தலைமையை வலியுறுத்தி தேர்தலுக்கு ஆயத்தமாகிவருகின்றனர். எதிர்ப்போருக்கு பதவி வழங்கி தேர்தலை தவிர்ப்பதற்காக அமைதி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் 7 நிர்வாக பதவி,20 செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி தேதி. இந்தநிலையில் கே.எம். நிட்வேர் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியத்தை தலைவராக கொண்டு அனைத்து நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 27 பேர் திரண்டு வந்து சங்க அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    தலைவர் பதவிக்கு சுப்பிரமணியம், துணை தலைவருக்கு பெஸ்ட் கார்ப்பரேஷன் ராஜ்குமார், எஸ்.என்.க்யூ.எஸ்., இளங்கோவன், பொதுச்செயலாளருக்கு எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் திருக்குமரன், இணைச் செயலாளருக்கு சில்வின் நிட் பேஷன் சின்னசாமி, ஈஸ்டன் குளோபல் கிளாத்திங் குமார் துரைசாமி, பொருளாளர் பதவிக்கு ராயல் கிளாசிக் மில் கோபாலகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 20 பேர் மனுதாக்கல் செய்தனர்.

    தேர்தல் குறித்து ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் கூறுகையில், கடந்த 6 ஆண்டுகள் ஒரு தலைமையின் கீழ் சங்க நிர்வாகம் செயல்பட்டு வந்தது.விதிமுறைப்படி தற்போது புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. கே.எம்., நிட்வேர் சுப்பிரமணியத்தை தலைவராக கொண்டு சங்கத்தின் அனைத்து பதவிகளுக்கும் 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 6 ஆண்டுகளாக பதவி வகித்தோர் தற்போதைய தொழில் சூழல் உணர்ந்து தேர்தலில் போட்டியை தவிர்க்கவேண்டும் என்றார்.

    ×