என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரகணங்கள்"

    • ஒரு ஆண்டில் வருடத்திற்கு நான்கு கிரகணங்கள் ஏற்படுகிறது.
    • சந்திர கிரகண நாளில் 12 ராசியினரும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்.

    ஜோதிட ரீதியாக பல்வேறு தோஷங்கள் இருந்தாலும் கிரகண தோஷம் சிலரின் வாழ்வில் மீள முடியாத இன்னல்களை ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளது. தோராயமாக ஒரு ஆண்டில் வருடத்திற்கு நான்கு கிரகணங்கள் ஏற்படுகிறது. ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான விசுவாவசு வருடம் ஆவணி 22ம் நாள் ஞாயிற்றுகிழமை 7.9.2025 அன்று 9.56 இரவு முதல் 8.9.2025 அன்று 1.26 நள்ளிரவு வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் ராகு கிரகஸ்த முழு சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். சந்திர கிரகண நாளில் 12 ராசியினரும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்.

    கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள்.

    சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி புனர்பூசம், விசாகம். கிரக தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்துவிட்டு சிவன் கோவில் சென்று வருவது நல்லது.

    மேஷம்: மேஷ ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. நான்காம் அதிபதி சந்திரன் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் கிரகணம் அடைகிறார்.

    இதற்கு குரு பார்வை இருக்கிறது கால்நடை வளர்ப்பவர்கள், விவசாயிகள், பண்ணையாளர்கள் ஆதாயமான பலன் பெறுவார்கள். எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் நல்லது. அன்று போரிங் போடுதல் கிணறு வெட்டுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

    தாயையும் தாய்வயதில் உள்ளவர்களை மதிப்பதும் ஆசிர்வாதம் பெறுவதும் இன்னல்களை நீக்கும்.

    ரிஷபம்: ரிஷப ராசிக்கு பத்தாமிடமான ஸ்தானத்தில் சந்திரன் ராகு சேர்க்கை ஏற்படுகிறது. அன்று உங்களின் மூன்றாம் அதிபதி சந்திரன் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். தகவல் தொடர்பு சாதனங்களான பேஸ்புக் யூடியூப் இன்ஸ்டாகிராம், பத்திரிக்கை துறை எழுத்துத் துறையினரின் வாழ்வாதாரம் உயரும்.

    இந்த நாளில் ஜாமீன் போடுவது தேவையற்ற வெளியூர் பயணங்கள், முக்கிய ஒப்பந்தங்கள், சிற்றின்பம் இவைகளை தவிர்த்தால் நன்மைகள் மிகுதியாகும். இளைய சகோதரன் சகோதரி போன்றவர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்வதன் மூலம் உங்களுக்கு உயர்வு உண்டாகும்.

    மிதுனம்: மிதுன ராசியினருக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. உங்களின் தன ஸ்தான அதிபதி சந்திரன் மேன்மையான பலன்களை தரக்கூடிய ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிப்பதால் அனுபவ ஆற்றல் அதிகமாகும். பேச்சை மூலமாக கொண்டவர்கள், பேங்கிங் 'ஆடிட்டிங்' டீச்சிங் புரோகிதம், ஜோதிடம் மந்திர உபதேசம் ஆகியவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

    இன்றைய நாளில் செயற்கை முறை கருத்தரிப்பு, தூர தேசப் பிரயாணங்களை ஒத்தி வைக்க வேண்டும். கடுமையான மாத்ரு தோஷம் உள்ளவர்கள் பித்ரு தர்ப்பணங்கள் செய்யலாம். தந்தை, தந்தை வழி முன்னோர்களை வழிபடுவதால் வாழ்க்கை ஒளிமயமாகும்.

    கடகம்: ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் ராகு சேர்க்கையுடன் கிரகணம் சம்பவிக்கிறது ராசி அதிபதி சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் நின்று சந்திராஷ்டமத்துடன் கிரகணம் சம்பவிப்பதால் வழக்குகள், அறுவை சிகிச்சை, வெளியூர் வெளிநாட்டுப் பயணம் கொடுக்கல் வாங்கல், வீண் வாக்குவாதங்கள் சண்டை சச்சரவு, தற்பெருமை சுய கவுரவம் எதிர்பார்ப்பது, ஆகியவற்றை தவிர்ப்பதால் இன்னல்கள் குறையும்.

    ஆரோக்கியத்தை காக்கும் மிதமான உணவுகளை சாப்பிட வேண்டும். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் தேவை அறிந்து உதவி செய்வதால் உங்களின் தேவைகள் நிறைவேறும்.

    ஐ.ஆனந்தி

     

    சிம்மம்: ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. தொழில் தொடர்பான புதிய முயற்சிகள், திருமணம், திருமண ஒப்பந்தம், விவாகரத்து வழக்குகளை விசாரித்தல், வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் இவைகளை சில நாட்களுக்கு தவிர்க்கவும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் வரலாம். வாழ்க்கை துணை, நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களை பகைக்க கூடாது. சிற்றின்பம், நண்பர்கள் சுற்றம் சூலத்துடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வது அன்றைய நாட்களுக்கு தகாத செயலாகும். நலிந்தவர்களின் வாழ்வாதாரம் உயரத் தேவையான உதவிகளை செய்வது நல்லது.

    கன்னி: கன்னி ராசிக்கு ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இன்றைய நாளில் கடன் தீர்ப்பதால் நிரந்தரமாக கடன் தொல்லை குறையும். அஜீரண சக்தி குறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. விலை உயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் நகைகளை கவனமாக கையாளவேண்டும். பிறகுக்கு கடன் கொடுப்பது கடன் பெறுதல் நல்லதல்ல. பல வருடங்களாக தீராத தீர்க்க முடியாத நோய்யுள்ளவர்கள் மிருத்யுஞ்ஜெய மந்திரம், ஸ்ரீ ருத்ரம் படிப்பது கேட்பதால் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பய உணர்வு அகலும். தாய் மாமா ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு ஆடைதானம் வழங்கி ஆசீர்வாதம் பெறுவது நல்லது.

    துலாம்: ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. ஆழ்மன எண்ணங்களை கட்டுப்படுத்தும் தியானம் யோகா மூச்சுப் பயிற்சி மனநிறைவு மன நிம்மதியை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும்.

    குலதெய்வ வழிபாடு கோடி குற்றங்களை நிவர்த்தி செய்யும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். குழந்தைகளை உங்களின் சொந்தப் பொறுப்பில் கண்காணிக்க வேண்டும். காதல் விவகாரங்கள் அவமானத்தை ஏற்படுத்தலாம். ஆன்மீக குருமார்களின் ஆசிர்வாதம் பெறுவது நன்னடத்தையுடன் நடந்து கொள்வது சிந்தித்து செயல்படுவது உங்களை உயர்வான இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

    விருச்சிகம்: உங்கள் ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. பாக்யாதிபதி சந்திரன் சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாய் தந்தை, தந்தை வழி உறவுகளுடன் மோதல் கருத்து வேறுபாடு வரலாம். தாய் தந்தையரை அனுசரித்துச் செல்வதால் அவர்களின் ஆசிர்வாதத்தை பெற முடியும்.

    சொத்து வாங்குவது விற்பது ஆகியவற்றில் தவறான விலை நிர்ணயம் ஏற்படலாம். முதல் முறையாக நோய்க்கு வைத்தியம் செய்வது நல்லதல்ல. தாயின் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வரலாம். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகளை பெறுவதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.

    தனுசு: தனுசு ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. அஷ்டமாதிபதி சந்திரன் ராகுவுடன் இணைவதால் மனப்போராட்டம் அதிகரிக்கும் ஞாபக சக்தி குறையும். வீடு மாற்றுவது,வேலை மாற்றுவது தொழில் நிறுவனத்தை மாற்றுவது, உத்தியோக மாற்றம், பத்திரப்பதிவு பாகப்பிரிவினை ஆகியவற்றை தவித்தல் நல்லது.முக்கிய பணப்பரிவர்த்தனைக்கு உள்ள ஆவணங்களை பத்திரமாக பராமரிக்க வேண்டும்.

    சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட, பணம், பொருள், உயில் சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. உயிர் காக்கும் முக்கிய அறுவை சிகிச்சை இருந்தால் செய்து கொள்ளலாம். சாலையோரம் வசிப்பவர்களின் தேவையறிந்து உதவுவது நல்லது.

    மகரம்: ராசிக்கு இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. பேச்சை மூலமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். 7ம் அதிபதி சந்திரன் 2ம் இடத்தில் நிற்பதால் நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால்,வேற்று மதத்தினர் வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு.

    சிலருக்கு உணவு ஒவ்வாமை. அலர்ஜி, கண் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். காரசாரமான விவாதங்கள் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தெளிவான மனக் குழப்பமற்ற பேச்சுகளால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். அடிப்படை வசதிகள் அற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும்.

    கும்பம்: கும்ப ராசியில் சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. ஆறாம் அதிபதி சந்திரன் ராகுவுடன் இணைவதால் கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத கடுமையான உடல் பாதிப்பு உள்ளவர்கள் அன்று வைத்தியம் செய்யலாம். சுய வைத்தியம்.

    சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவது, கடன் கொடுப்பது, பெரிய பணப் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் முயற்சிகளில் கடை தாமதங்கள் இருக்கும். சுயக்கட்டுப்பாடு மிக அவசியம். திட்டமிட்டு செயல்பட வேண்டும். மனதின் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவது நல்லது. மன வளர்ச்சியற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது நல்லது.

    மீனம்: ராசிக்கு 12ம் மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சந்திரனுடன் ராகு இணைந்து கிரகண தோஷம் ஏற்படுகிறது. தூக்கம் சற்று குறைவுபடும். மனசஞ்சலம் பய உணர்வும் இருக்கும். குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக இருப்பீர்கள். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆதாயம் குறைவுபடும். பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி சீட்டு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கை, கால் மூட்டு வலி, பாதம், இடது கண் போன்றவற்றில் பாதிப்பு இருக்கும்.

    கண், மூட்டு அறுவை சிகிச்சைகளை ஒத்தி வைக்கவும். ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடிய உணவு சாப்பிடுவது நல்லது. கண் அறுவை சிகிச்சை செய்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும்.

    கிரகண காலங்களில் செய்யக்கூடாதவை

    ஞாயிற்றுக்கிழமை 7.9.2025 மாலை 4.00 மணிக்கு பிறகு உணவு உண்ணக் கூடாது. கிரகண நேரத்தில் சமையல் செய்யவோ, சாப்பிடவோ கூடாது. கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்ப்பையை போட்டு வைக்க வேண்டும்.

    கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நோயாளிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம் . அறுவை சிகிச்சை அவசியம் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் கால பைரவரை வழிபட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.

    கிரகண காலங்களில் செய்யக் கூடியவை

    ராகு கேதுக்களின் பாதையில் பூமி, சூரியன், சந்திரன் நேர்கோட்டில் வரும் அந்த நொடிகள் அமானுஷ்யமான விசயங்களை உண்டாக்கும். அந்த நேரத்தில் நாம் இறைவனை சரணடைந்து வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும். கிரகண காலங்களில் செய்யப்படும் வழிபாடுகள் பல மடங்கு புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும். சுய ஜாதகத்தில் உள்ள கிரகண தோஷ வீரியம் குறையும். கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்யலாம். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்.

    செல்: 98652 20406

    • 2024-ம் ஆண்டின் கிரகண நிகழ்வுகள், மார்ச் 25-ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணத்துடன் தொடங்குகிறது.
    • செப்டம்பர் 18-ந்தேதி காலை நிகழும் பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் காணப்படாது.

    இந்தூர்:

    சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும்போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் நடப்பு ஆண்டில் முழு சூரிய கிரகணம் உள்பட 4 கிரகணங்கள் நிகழும் என்றும், ஆனால் அவை எதையும் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த வானியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

    நடப்பு ஆண்டு கிரகணங்கள் நிகழ்வு குறித்து உஜ்ஜைன் நகரில் உள்ள அரசு ஜிவாஜி ஆய்வகத்தின் மூத்த அதிகாரி ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியதாவது:-

    2024-ம் ஆண்டின் கிரகண நிகழ்வுகள், மார்ச் 25-ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணத்துடன் தொடங்குகிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது.

    அதனை தொடர்ந்து, முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8 மற்றும் 9-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழ உள்ளதால், இந்த கிரகணத்தையும் இந்தியாவில் பார்க்க இயலாது.

    அதேபோல் செப்டம்பர் 18-ந்தேதி காலை நிகழும் பகுதி சந்திர கிரகணமும் இந்தியாவில் காணப்படாது.

    அக்டோபர் 2 மற்றும் 3-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழவுள்ள வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் புலப்படாது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×