என் மலர்
சமையல்
- இது டயட் இருப்பவர்களுக்கும், கொழுப்பைக் குறைக்க விரும்புவோருக்கும் மிகவும் நல்லது.
- ஸ்டீமர் முறையில் சமைக்கும்போது எண்ணெய் ஒரு துளி கூட பயன்படுத்தப்படுவது இல்லை.
பாரம்பரிய பார்சி உணவு வகைகளில் ஒன்றாகத் திகழும் பத்ராணி மச்சி, அதன் அலாதியான சுவை மற்றும் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளால் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் பெரும் புகழ் பெற்று விளங்குகிறது. இது, மீனை எண்ணெயில் பொரித்தோ அல்லது குழம்பாக வைத்தோ சமைக்கப்படும் வழக்கமான முறை கிடையாது. மாறாக, மீன் துண்டுகளில் காரசாரமான பச்சை சட்னியைப் பூசி, அவற்றை வாழை இலையில் நேர்த்தியாகச் சுருட்டி, பின்னர் ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான மீன் ரெசிபியை சமையல் கலைஞர் செஃப் கதிரவன் நமக்காக செய்து காட்டியுள்ளார்.

செய்முறை
* மீன் துண்டுகளை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதில் சிறிதளவு உப்பு மற்றும் அரை லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி ஊற வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடாக்கி, அது லேசாக கொதிக்க ஆரம்பித்தவுடன், சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் புதினா தழைகளைப் போட்டு 2 நிமிடங்கள் வைத்து எடுத்து, ஆற வைக்கவும்.
* ஆறிய தழைகளுடன், நீளமாக நறுக்கிய 4 பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, 10 பல் பூண்டு மற்றும் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பாதியாக அரைக்கவும். பிறகு, துருவி வைத்துள்ள ஒரு கப் தேங்காயையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த மசாலாவில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், புளிப்புக்கு ஏற்ற அளவில் லெமன் ஜூஸ் ஆகியவற்றைச் சேர்த்து கையால் நன்கு கிளறவும்.
* இந்தக் காரசாரமான மசாலாவை, ஏற்கனவே உப்பு மற்றும் லெமன் சேர்த்து ஊற வைத்துள்ள மீன் துண்டுகளுடன் நன்கு கலக்கவும்.
* ஒரு சுத்தமான வாழை இலையின் நடுவில் மசாலா தடவிய மீன் துண்டை வைத்து, அதை நான்கு பக்கங்களிலும் மடித்து, ஒரு பார்சல் போல சுற்றவும்.
* சுற்றப்பட்ட வாழை இலை பார்சல்களை ஸ்டீமரில் (ஆவியில் வேக வைக்கும் பாத்திரம்) வைத்து, மீன் நன்கு வேகும் வரை சுமார் 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைக்கவும்.
* வேகவைத்த மீனை ஸ்டீமரில் இருந்து எடுத்து, வாழை இலையை கவனமாகப் பிரித்து, ஒரு பரிமாறும் தட்டில் மாற்றி, உடனடியாகப் பரிமாறவும்.

சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மீன் துண்டுகள்
பத்ராணி மச்சியின் சிறப்புகள்
* ஸ்டீமர் முறையில் சமைக்கும் போது எண்ணெய் ஒரு துளி கூட பயன்படுத்தப்படுவது இல்லை. ஆவியில் வேக வைப்பதால், இது டயட் (உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள்) இருப்பவர்களுக்கும், கொழுப்பைக் குறைக்க விரும்புவோருக்கும் மிகவும் நல்லது.
* வாழை இலையில் சுற்றி சமைக்கப்படும்போது, இலையின் அலாதியான சுவை மற்றும் மணம் உணவுடன் கலந்து, வேறு எந்த சமையல் முறையிலும் கிடைக்காத ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது.
* இதில் பயன்படுத்தப்படும் பச்சை சட்னிதான் இந்த உணவின் மற்றொரு சிறப்பம்சம். பூண்டு, பச்சை மிளகாயின் காரம், புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளின் கூட்டுச் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த மூலிகைகளின் சத்துக்கள் மீனுடன் சேர்ந்து ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன.
* இந்த சமையல் முறையை மீன்களில் மட்டுமல்லாமல், பன்னீர் மற்றும் கறித் துண்டுகளிலும் கூட முயற்சி செய்யலாம்.

ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள பத்ராணி மச்சி
இந்த அற்புதமான பத்ராணி மச்சி உணவை தோசை, சப்பாத்தி, ரொட்டி அல்லது சாதம் மற்றும் காய்கறி தன்சக் (Vegetable Dhansak) உடன் சேர்த்து சைடிஷ்ஷாக சாப்பிடும் பொழுது, அதன் சுவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். ஆரோக்கியம் மற்றும் பாரம்பரியம் இணைந்த இந்த பார்சி உணவை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்!
- உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
- கொள்ளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிறைவாக உணர வைக்கும்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துண்டுகள் - 1 கப்
புளி - 10 கிராம்
கடுகு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் கொள்ளை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, சிறிதளவு உளுந்து, காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.
வறுத்து வைத்திருக்கும் கலவையை மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய்த் துண்டுகள், புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக கடுகு, கறிவேப்பிலையை தாளித்துக் கொட்டி சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சுவை அமோகமாக இருக்கும்.

நீங்கள் உண்ணும் உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைவதால் எடை இழப்பு ஏற்படும்.
கொள்ளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிறைவாக உணர வைக்கும். இதனால் நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறையும்.
கொள்ளு துவையலாக மட்டுமில்லாமல், கொள்ளை வேகவைத்து சுண்டலாகவும், கொள்ளு தோசை, கொள்ளு சூப், கொள்ளு ரசம் முதலானவற்றை செய்து சாப்பிடலாம்.
- ஈரலைச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கழுவிப் பிழிந்து கொள்ளுங்கள்.
- ஈரல் துண்டுகளை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது.
தேவையான பொருட்கள்:
கோழி ஈரல் - அரைக் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 8 பல்
பட்டை - 2
இஞ்சி - 1 துண்டு
தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
கிராம்பு - 4
சோம்பு - 1 தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
* இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொண்டு, தேங்காய்த் துருவலுடன் கிராம்பு, சோம்பு, பட்டை ஆகியவற்றைச் சேர்த்து நீர் தெளித்து அரைத்துக் கொள்ளுங்கள்.
* ஈரலைச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கழுவிப் பிழிந்து கொள்ளுங்கள்.
* அந்த துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு இஞ்சி விழுது, பூண்டு விழுது, மஞ்சள் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்த்துப் பக்குவமாகப் புரட்டிவிட்டு ஊற வையுங்கள்.
* வெங்காயத்தைத் தோலுரித்துக்கொள்ள வேண்டும்.
* அடுப்பில் இருப்புச் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், வெங்காயத்தைத் தட்டிப் போட்டு வதக்குங்கள்
* பிறகு ஈரல் துண்டுகளை மசாலாவுடன் கொட்டி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய்க் கலவையைப் போட்டு உப்பு சேர்க்கவும். அரை கப் நீர் ஊற்றி, ஒரு தட்டால் மூடி வைத்து வேகவிடுங்கள்.
* ஈரல் துண்டுகளை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது. ஆகையால் அவை வெந்ததும் உடனே அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும்.
சுவையான ஈரல் வறுவல் ரெடி!
- கோதுமை அல்வா செய்யும்போது வெந்நீர் தெளித்து நெய் கலந்து கிளறினால் சுவையும் மணமும் கூடும்.
- வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து வடை தயாரித்தால் மிருதுவாக இருக்கும்.
* கிழங்குகளை உப்புப்போட்டு வேக வைக்கக் கூடாது. அப்படி செய்தால் சீக்கிரம் வேகாது.
* சாதம் கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சம்பழச் சாறு பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.
* உருளைக்கிழங்கை சீவியதும் சிறிது பயத்தம் பருப்பு மாவைத் தூவி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
* பால் பாயசம் செய்யும் போது பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.
* ரவாதோசை செய்யும்போது 2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் தோசை நன்கு சிவந்தும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
* சேமியாவை வாணலியில் வறுத்து விட்டு உப்புமா செய்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
* கோதுமை அல்வா செய்யும்போது வெந்நீர் தெளித்து நெய் கலந்து கிளறினால் சுவையும் மணமும் கூடும்.
* பச்சை மிளகாயைக் காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பெருங்காயம் கட்டியாகாமல் மிருதுவாக இருக்கும்.
* வத்தல் குழம்பு தயார் செய்யும் போது அவரை, கத்திரி, கொத்தவரங்காய் வத்தல்களை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து குழம்பில் சேர்த்தால் சீக்கிரம் வெந்து விடும்.
* எலுமிச்சை, தக்காளி, புளி, தேங்காய் சாத வகைகள் செய்யும் முன்பு சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாகவும், சுவையாகவும் இருக்கும்.
* வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து வடை தயாரித்தால் மிருதுவாக இருக்கும். எண்ணெய்யும் அதிகம் குடிக்காது.
- மீந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
- பருப்புவடை மீந்து விட்டால், மறுநாள் வடைகறி செய்யலாம்.
உணவுப்பொருட்கள் மீந்துவிட்டால் வீட்டில் பெண்கள் கவலைப்படுவார்கள். ஆனால் சில உணவுப்பொருட்கள் மீதமாகிவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. அவற்றை வேறு மாதிரி தயாரித்து பயன்படுத்தலாம்.
அதற்கான குறிப்புகள்...
* மீதமான தேங்காய் சட்னியை கெட்டியான புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதி விட்டால், சுவையான மோர்க்குழம்பு தயார்.
* ஊறுகாய் பாட்டிலில் காய் எல்லாம் தீர்ந்த பிறகு மிளகாய் வண்டல் மீந்திருந்தால், பாகற்காய், வெண்டைக்காய் போன்றவற்றுக்குள் அடைத்து 'ஸ்டப்டு' வெஜிடபிள் கறி செய்யலாம்.
* மீதமான குழம்பு, சாம்பாரை பயன்படுத்தி சுவையான டிபன் சுலபமாக செய்யலாம். அவற்றில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் வறுத்த ரவையைக் கொட்டிக் கிளறவும். வித்தியாசமான சுவையில் உடனடி கிச்சடி ரெடி.
* பிரட் மீந்து விட்டதா? அதை மிக்சியில் போட்டு பொடியாக்கி, உப்பு, கரம் மசாலா, கொத்தமல்லித் தழை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து 'கட்லெட்டாக பொரித்து எடுக்கலாம். சுவையாக இருக்கும்.
* மீந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
* கொத்தமல்லிச் சட்னி மீந்துவிட்டால், மோரில் சட்னியைப் போட்டுக் கரைத்து விடுங்கள். மசாலா மோர் போல் சுவையாக இருக்கும்.
* இடியாப்பம் மீந்துவிட்டதா? அதை ஒருநாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு. நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டால் தேவைப் படும்போது சுவையான வற்றலாக பயன்படுத்தலாம்.
* சமையலுக்கு வாங்கிய முட்டைக்கோஸ் மிச்சமாகிவிட்டதா? கோஸை பொடிப்பொடியாக நறுக்கி, அத்துடன் நிறைய வெங்காயத்தையும் நறுக்கிப்போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கி இக்கலவையுடன் கடலைமாவு, அரிசிமாவு, உப்புத் தூள், மிளகாய்ப்பொடி கலந்துகொண்டு லேசாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து சுவையான பக்கோடா தயார் செய்யலாம்.
* தேன்குழலுக்கு அரைத்த மாவு மீந்து விட்டால், அதைக் கரைத்து உப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தோசை வார்த்தால், மிருதுவாக தோசை ருசியுடன் இருக்கும்.
* சாதம் மீந்துவிட்டால், அதனுடன் பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து வடாம் போல பிழிந்து வெயிலில் காய வைக்கவும். இதை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் மொறுமொறுவென்று இருப்பதுடன், சுவையிலும் அசத்தும்.
* பருப்புவடை மீந்து விட்டால், மறுநாள் வடைகறி செய்யலாம். அல்லது மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, வெந்த காய்களுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்க, உசிலி சுவையாக இருக்கும்.
- மாவு சூடாக இருக்கும்போதே சிறிய சிறிய உருண்டைகளாக செய்துகொள்ளுங்கள்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் பாலை கொதிக்க வைக்கவும்.
விநாயகர் சதுர்த்திக்கு பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 1 கப்
பால் - 2 கப்
தேங்காய்ப் பால் - 1 கப்
சர்க்கரை - சுவைக்கேற்ப
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை கொட்டுங்கள். அதில் சிறிது உப்பு சேர்த்து கலக்கவும்.1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் அரிசி மாவை சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்துகொள்ளவும்.
மாவு சூடாக இருக்கும்போதே சிறிய சிறிய உருண்டைகளாக செய்துகொள்ளுங்கள். அவற்றை இட்லித் தட்டில் வைத்து வேக வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் பாலை கொதிக்க வைக்கவும். தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
பால் நன்றாக கொதித்து வந்ததும் கொழுக்கட்டை உருண்டைகளை அதில் போடவும்.
பிறகு ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் மாவை தண்ணீரில் கரைத்து அதிலே ஊற்றவும். இப்போது கெட்டி பதத்துக்கு வரத் தொடங்கிவிடும்.
சுவைக்காக தேங்காய்ப் பால் சேர்க்கலாம். கொழுக்கட்டைகள் வெந்ததும் ஏலக்காய்த்தூளை சேர்த்து கலக்கவும். பால் கொழுக்கட்டை தயார்.
பால் கொழுக்கட்டையை சூடாகவே பரிமாறலாம் அல்லது குளிரவைத்து பரிமாறலாம்.
- பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு சேர்த்துப் பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.
- தேங்காய் சாதம் செய்யும் போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப்பொடி கலந்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* வெந்தயக் குழம்பு தயார் செய்யும்போது ஒரு டீ ஸ்பூன் எள்ளுப் பொடியை தூவினால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
* மீந்து போன வாழை சிப்ஸ், உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்சியால் கரகரப்பாக பொடித்து பொரியலுக்குத் தூவலாம். மாறுபட்ட சுவையும், மணமும் கிடைக்கும்.
* பாயசம் நீர்த்து போயிருந்தால் அதில் வாழைப் பழத்தைப் பிசைந்துப் போட்டு கொஞ்சம் தேனும் கலந்தால் போதும். சுவையான கெட்டிப் பாயசம் ரெடி.
* வித்தியாசமான முறையில் ரவா கேசரி செய்ய வேண்டுமானால், ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊற வைத்து பிறகு சர்க்கரைப்பாகு செய்து கேசரி கிளறினால் மாறுபட்ட சுவையில் ருசிக்கலாம்.
* பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு சேர்த்துப் பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.
* தேங்காய் சாதம் செய்யும் போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப்பொடி கலந்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* பாகற்காய் வறுவல் செய்யும் போது முதலில் பாகற்காயை எண்ணெய்யில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு, காரம் போட்டால் மொறுமொறுப்பு குறையாமலிருக்கும்.
* சூடான எண்ணெய்யில் சிறிதளவு மைதா மாவு சேர்த்த பிறகு எதை பொரித்தாலும் வாணலியில் ஒட்டாது.
- பிரிட்ஜில் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டி துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் சீக்கிரம் அழுகிப் போகாமல் இருக்கும்.
- முழுத் தேங்காயை பிரிட்ஜில் வைத்து தேவையானபோது உடைத்துக் கொள்ளலாம்.
* பெண்கள் நிறைய நேரங்களை சமையல் அறையில் செலவிடுவதால் அந்த அறை நல்ல காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருத்தல் அவசியம்.
* சமையலறை எந்த அளவில் இருந்தாலும் சரி, நுழைவாயிலில் கட்டாயம் ஒரு மிதியடி போட வேண்டும். மேலும் அதில் தலைமுடி, நூல் போன்ற குப்பைகளைச் சேர விடாமல் அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
* சமையல் அறையில் உள்ள மேடையில் எண்ணெய் கொட்டி இருந்தால் கடலை மாவைக் கெட்டியாகத் தண்ணீரில் கரைத்துப் பூசி சிறிது நேரம் ஊறவைத்து தேய்த்துக் கழுவ, மேடை பளிச்சென்று இருக்கும்.
* அரிவாள் மனை, தேங்காய் துருவி, காய்கறி நறுக்கப் பயன்படும் கத்தி போன்றவற்றில் உள்ள துருவைப் போக்க அவற்றின் மீது ஒரு வெங்காயத்தை நறுக்கித் தேய்த்தால் துரு இருந்த இடம் தெரியாமல் நீங்கிவிடும்.
* எண்ணெய்ப் பிசுக்கான பாத்திரங்களைக் கழுவுவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் கடுகுத்தூளைப் போட்டு கழுவினால் பாத்திரங்கள் சுத்தமாக எந்தவித வாடையும் இல்லாமல் இருக்கும்.
* கிழங்குகளை மூடி வைக்கக் கூடாது. காற்றோட்டமாக பரப்பி வைக்க வேண்டும். தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால் தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்கும்.
* வாழைத் தண்டு, சுரைக்காய், நூல்கோல் முதலிய காய்கறிகள் மீது நகம் வைத்தால் உள்ளே போவது போல் இருக்க வேண்டும். அது தான் பிஞ்சு.
*பிரிட்ஜில் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டி துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் சீக்கிரம் அழுகிப் போகாமல் இருக்கும்.
*பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் பாக்கெட்டில் போட்டு பிரிட்ஜில் வைக்கவும்.
*முழுத் தேங்காயை பிரிட்ஜில் வைத்து தேவையானபோது உடைத்துக் கொள்ளலாம். தேங்காய் கெடாமல் இருக்கும்.
- தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவ மணமாக இருக்கும்.
- பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து வேக விட்டால் சுவையாக இருக்கும்.
வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாக கட்டி பிரிட்ஜில் வைத்து விட்டால் இரு வாரம் ஆனாலும் பழுக்காது.
கடையில் விற்கும் தையல் இலை எனும் மந்தாரை இலையைப் பானையில் போட்டு அதன் மேல் புளியை வைத்தால் நீண்ட நாட்கள் புளி கெடாமல் இருக்கும்.
கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளைவிடாமல் இருக்க கூடவே ஆப்பிள் பழத்தை போட்டு வைக்க வேண்டும்.
குளிர் காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைத்து விட்டால் ஒரு ஸ்பூனை நன்கு சூடாக்கி அப்பாட்டிலினுள் நுழைத்து விட்டால் எண்ணெய் உருகி வழக்கமான நிலைக்கு மாறிவிடும்.
வெங்காயத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தால் தோல் எளிதாக உரிந்து வரும். கண்ணில் இருந்து நீரும் வராது.
பிஸ்கெட் இருக்கும் டப்பாவின் அடியில் சிறிது சர்க்கரையைத் தூவி காற்று புகாமல் இறுக மூடி வைத்தால் பிஸ்கெட் நமத்துப் போகாமல் மொரமொரப்பாக இருக்கும்.
மாதத்திற்கு ஒரு முறை உப்பை போட்டு மிக்ஸியை சுழலச் செய்தால் மிக்ஸியின் பிளேடுகள் கூர்மையாக இருக்கும்.
பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்தால் பிரியாணியின் அரிசிகள் தனித்தனியே பிரிந்து பிரியாணி பார்க்க அழகாக இருக்கும்.
சர்க்கரைப் பாகில் கொஞ்சம் பாலை விட்டு விட்டால் எந்த இனிப்பு பண்டமும், கடினமாகாமல் மிருதுவாக, சாப்பிட நன்றாக இருக்கும்.
மேஜை விரிப்பில் தேநீர் கொட்டி விட்டால் உடனே அந்த இடத்தில் சர்க்கரை சிறிது தூவினால் கறை படியாது.
பழைய சாதம் மீந்து விட்டால் பெரிய கிண்ணத்தில் சாதத்தை நன்கு பிழிந்து வைத்து ஒரு கப் துருவிய தேங்காய் ஒரு டீ ஸ்பூன் சீரகம், சிறிது உப்பு கலந்து கூழாக பிசைந்து பிஸ்கெட் சைஸில் தட்டிப்போட்டு வெயிலில் காய வைத்து பொரித்து சாப்பிடலாம்.
தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவ மணமாக இருக்கும்.
பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து வேக விட்டால் சுவையாக இருக்கும்.
புளித்த தோசை மாவில் சுக்குப்பொடி கலந்து ஊத்தாப்பம் செய்தால் எளிதில் ஜீரணமாகும்.
- பூண்டு வாடை கையில் இருந்தால் சிறிதளவு பற்பசையை பூசி அலம்பினால் வாடை ஓடியே போகும்.
- காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை சமையல் பொருட்கள் இருக்கும் அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.
தயிர் கெட்டியாக இருக்க, நன்கு காய்ச்சி ஆறிய பாலுடன் சிறிது காய்ச்சாத பாலையும், சிறிது தயிரையும் சேர்த்து வைக்கலாம்.
நெய் காய்ச்சுவதற்கு முன்பு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து பின்பு காய்ச்சினால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாது.
முட்டைக்கோஸை நறுக்கும் போது அதன் தண்டுகளை சாம்பாரில் போட்டு சமைத்தால் நன்றாக இருக்கும்.
வாழைப்பழம் சீக்கிரம் கருத்து விடாமல் இருக்க ஈரத் துணியால் சுற்றி வைத்தால் பிரெஷ்ஷாக இருக்கும்.
பூண்டு வாடை கையில் இருந்தால் சிறிதளவு பற்பசையை பூசி அலம்பினால் வாடை ஓடியே போகும்.
முட்டைக்கோஸை துருவி நன்றாக வதக்கி மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் ரெடி.
வழக்கமான அடை மாவுடன் தக்காளி சேர்த்து அரைத்து அதனை பாத்திரத்திற்கு மாற்றும் முன்பு துருவிய கேரட் அல்லது பீட்ரூட் போட்டு ஒரு சுற்று சுற்றி மாவை கரைத்து அடை வார்க்க ருசி அமோகமாக இருக்கும்.
காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை சமையல் பொருட்கள் இருக்கும் அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.
ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது உறவைத்த பச்சரிசியுடன் ஒரு மூடி தேங்காய் துருவல், ஒரு கரண்டி பழைய சாதம் போட்டு அரைத்தால் ஆப்பம் மிருதுவாக இருக்கும்.
- லஸ்ஸியில் சேர்க்கும் சர்க்கரை அளவை குறைத்து அதற்கு பதிலாக தேன் கலந்து பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பருகினால் சுவை கூடுதலாக இருக்கும்.
- சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயத்தில் சிறிதளவு வெந்தயப் பொடி தூவினால் வாசனையாக இருக்கும்.
* கருவேப்பிலை துவையலுக்கு உளுந்தம் பருப்புக்கு பதில் வேர்க்கடலையை வறுத்து போட்டால் துவையல் சுவையாக இருக்கும்.
* உருளைக்கிழங்கை உப்பு கரைத்த வெந்நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்து வைத்துக் கொண்டால் சில நாட்களுக்கு உருளைக்கிழங்கு கெடாமல் பிரெஷாக இருக்கும்.
* குடிக்கும் நீர் மணமாகஇருக்க வேண்டும் என்றால் வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியைப் போட்டு வைத்தால் நன்றாக இருக்கும்.
* ஆப்பிள் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயம், பெருங்காயத்தூள் கலந்து தாளித்தால் சுவையான ஊறுகாய் தயார்.
* காலையில் கீரை சமைக்க இரவே வாங்கி விட்டால், அது வாடிப் போகாமல் இருக்க கீரையின் வேர் பாகத்தை நீரில் மூழ்கும்படி வைக்கலாம்.
* லஸ்ஸியில் சேர்க்கும் சர்க்கரை அளவை குறைத்து அதற்கு பதிலாக தேன் கலந்து பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பருகினால் சுவை கூடுதலாக இருக்கும்.
* அப்பளம் நமத்துப் போகாமல் இருக்க உளுந்தம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவில் அப்பளங்களை மேலாக வைத்து இறுகி மூடிவிட்டால் போதும். வெயிலில் உலர்த்தியது போலாகி விடும்.
* நெய் காய்ச்சும் போதே வெந்தயக்கீரை, முருங்கைக்கீரையை போட்டு லேசாக வதக்கிக்கொள்ளவும். நன்கு ஆறிய பிறகு இந்த வெந்தயக்கீரை, முருங்கைக்கீரையை சப்பாத்தி மாவில் பிசைந்து சப்பாத்தி செய்து பாருங்கள். சப்பாத்தி ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.
* சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயத்தில் சிறிதளவு வெந்தயப் பொடி தூவினால் வாசனையாக இருக்கும்.
* வெண்டைக்காய் பொரியல் செய்வதற்கு முன்பு வெண்டைக்காயை நறுக்கி வெயிலில் கால் மணி நேரம் உலர வைக்கவும். பிறகு பொரியல் செய்தால் வழுவழுப்பு நீங்கி விடும்
- கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், புளி ஆகியவற்றை வதக்கி, பின்னர் மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
- அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு, நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
தேவையான பொருட்கள்:
அரிசி ரவை-2 கப்
கொத்தமல்லித்தழை - சின்ன கட்டு
பச்சை மிளகாய் -3
தேங்காய்த் துருவல் - 4 கப்
நெய் - 2 டீஸ்பூன்
புளி - சிறிதளவு
கடுகு - 1½ டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ½ டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், புளி ஆகியவற்றை வதக்கி, பின்னர் மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, 5 கப் நீர் ஊற்றவும். அதில் அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு, நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
நன்கு கொதிக்கும்போது, அடுப்பை 'சிம்'மில் வைத்து, அரிசி ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறி, மூடிபோட்டு 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்தால் சுவையான கொத்தமல்லி கார உருண்டை தயார்.






