என் மலர்
சமையல் - Page 2
- கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெறும்.
- கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்
கருணை கிழங்கு - 250 கிராம்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
ஆம்சூர் பவுடர் - கால் தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
கருணைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக நறுக்கி 5 நிமிடங்கள் வேக வைத்து உப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், அரிசி மாவு, ஆம்சூர் பவுடர், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்த பின்னர் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய கருணைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான கருணை கிழங்கு பஜ்ஜி ரெடி.
- எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த கிழங்கினை ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
- சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் பி, வைட்டமின் டி, இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
சர்க்கரை வள்ளி கிழங்கு - 75 கிராம்
தோசை மாவு - 1 கப்
எண்ணெய் அல்லது நெய் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையானளவு
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் - 1
செய்முறை
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சர்க்கரை வள்ளி கிழங்கை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கிழங்குடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த கிழங்குடன் தோசை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு தோசை ரெடி.
- காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு புலாவ் செய்து கொடுக்கலாம்.
- இந்த புலாவ் செய்ய 30 நிமிடங்கள் மட்டுமே போதுமானது.
தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - 5
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி - ஒன்று
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 4
பூண்டு - 10 பல்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புதினா - ஒரு கப்
கொத்தமல்லி - ஒரு கப்
பச்சை மிளகாய் - 4
தேங்காய் - அரை முடி
தாளிக்க:
கிராம்பு
பட்டை
பிரிஞ்சி இலை, ஏலக்காய்
செய்முறை :
முதலில் மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் அனைத்தையும் தண்ணீரில்லாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை மிக்ஸியில் அடித்து இரண்டு கப் வருமாறு தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பேனில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பின் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
அதன் பின் வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பொன்னிறமான பின் தக்காளி போட்டு நன்கு குழைய வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
குக்கரில் கொட்டி அதனுடன் அரிசி, தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கிளறி 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்.
வெந்ததும மூடியை திறந்து சூடாக எடுத்து பரிமாறவும்.
சூப்பரான செட்டிநாடு வெஜிடபிள் புலாவ் ரெடி.
- காலையில் செய்ய தோசை மீந்து விட்டால் மாலையில் இந்த ரெசிபியை செய்யலாம்.
- 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
கல் தோசை - 4
வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பிலை - தேவைக்கு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் - 3
கொத்தமல்லி - தேவைக்கு
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்
செய்முறை
கல் தோசையை சிறிய துண்டுகளாக பிய்ந்து வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் பிய்ந்து வைத்துள்ள தோசையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
மசாலாவுடன் தோசை நன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான தோசை உப்புமா ரெடி.
- காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சிக்கன் போண்டா.
- சிக்கன் போண்டாவை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் கைமா – கால் கிலோ,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
போண்டா மாவு – 250 கிராம்,
சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பூண்டு – 5 பல்,
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு,
பொட்டுக்கடலை – 50 கிராம்,
இஞ்சி – 2 சிறிய துண்டு,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
* சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும்.
* அத்துடன் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
* முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
* போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.
* அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
* சூப்பரான சிக்கன் போண்டா ரெடி.
- பச்சை பட்டாணியை தவறாமல் எடுத்துகொள்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வராது.
- பட்டாணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.
தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி - 1 கப்,
கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
வரமிளகாய் - 2, கறிவேப்பிலை - 6 இதழ்கள்.
மேலே தூவுவதற்கு
அரிந்த கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
பச்சை பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பட்டாணியைச் சேர்த்து வதக்கி கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கொத்தமல்லித்தழை தூவி கலந்துவிடவும்.
இப்போது சூப்பரான பட்டாணி கார சுண்டல் ரெடி.
- இந்த கோங்குரா சிக்கன் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
- புளிச்சக்கீரை சற்று புளிப்பாக இருப்பதால், இந்த சிக்கன் மசாலா சற்று புளிப்பாக சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4 (கீறியது)
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 6 பல்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
கோங்குரா மசாலாவிற்கு...
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
புளிச்சக்கீரை - 2 கப்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள வெந்தயம், சோம்பு, மல்லி, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து 5-ஜ நிமிடம் மிதமான தீயில் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 1/4 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் கோங்குரா கீரையை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, 3-4 நிமிடம் மசாலாவில் கோங்குரா கீரையை மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* கீரை நன்கு வெந்ததும், அதை குக்கரில் உள்ள சிக்கனுடன் சேர்த்து, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன் தயார்.
* இட்லி, தோசை, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்.
- பாலக்கீரையை தினமும் சாப்பிட்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
- இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க பாலக்கீரை உதவுகிறது.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
பாலக் கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் (விழுதாக அரைக்கவும்) - 3
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் இரண்டு வகை அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பாலக்கீரையை ஆய்ந்து, சுடு தண்ணீரில் 5 நிமிடம் வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கீரை, சீரகம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும், அரைத்த மாவுடன் சேர்க்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் சூப்பரான சத்தான பாலக்கீரை தோசை தயார்.
ஊறுகாயுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்!
- சிக்கனில் பல்வேறு வித்தியாசமான ரெசிபிகளை செய்யலாம்.
- மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சிக்கன் சமோசா செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/4 கிலோ ( எலும்பு நீக்கியது )
கொத்தமல்லி தழை - சிரிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
மைதா - 3 கப்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா - 1 ஸ்பூன்
வேகவைத்த பட்டாணி - ½ கப்
பெரிய வெங்காயம் - 1
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மைதாவை போட்டு அதில் தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அடுப்பில் வைத்து நீர் வற்றும் வரையில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வெந்த சிக்கனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.
* பின்னர் வேக வைத்த பட்டாணி, சிக்கன், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சப்பாத்தி போல் திரட்டி முக்கோண வடிவில் செய்து அதில் செய்து வைத்த சிக்கன் கலவையை போட்டு ஓரங்களில் தண்ணீர் தொட்டு நன்றாக மூடி விடவும். இவ்வாறு இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
* இப்போது சூப்பரான சிக்கன் சமோசா ரெடி.
- காலையில் சத்தான உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- இன்று அவல் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கெட்டி சிவப்பு அவல் - அரை கப்,
தேங்காய்ப்பால் - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.
வறுத்து பொடிக்க
காய்ந்த மிளகாய் - 4.
செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாக கழுவி தேங்காய்ப் பாலில் ஊறவிடவும்.
நிலக்கடலையை வறுத்துப் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அவலையும் (தேங்காய்ப் பால் முழுவதையும் அவல் இழுத்திருக்கும்) போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும்போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள், மிளகாய்தூள் தூவிக் கிளறவும்.
கடைசியாக கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.
தேங்காய்ப்பால் சேர்ந்திருப்பதால் சாப்பிட ருசியாக இருக்கும்.
- விருப்பப்பட்டால் பீட்சாவை வாங்கிச் சாப்பிடலாம். ஆனால், தொடர்ந்து சாப்பிடுவது நம் உடல்நலத்துக்கு நல்லதல்ல
- அதிக அளவில் இதைச் சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
மைதா - 4 கப்
ஈஸ்ட் - 5 கிராம்
சீனி - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
ஸ்டப்பிங் செய்ய:
பீட்ஸா சாஸ் - தேவையான அளவு
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - 1
கேரட் - ஒன்று
குடை மிளகாய் - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
துருவிய சீஸ் - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
வெதுவெதுப்பான தண்ணீரில், ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி சேர்த்து நன்றாக கலக்கிய பின்னர் ஒரு கப் மைதாவை சேர்த்து நன்கு கலக்கிக் கலவையை 10 நிமிடம் எடுத்து வைக்கவும்.
10 நிமிடம் கழித்து, 3 கப் மைதாவில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கலக்கி வைத்த கலவையை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பரோட்டாவுக்கு பிசையும் மாவை விட சற்று மிருதுவாக பிசைய வேண்டும்.
பிசைந்த மாவினை ஒரு ஈரத் துணியால் மூடி ஒரு மணி நேரம் வைத்து பார்த்தால் அது இருமடங்காக அதிகரித்து இருக்கும்.
மாவினை வெளியே எடுத்து மீண்டும் நன்றாக பிசைந்து, மீண்டும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து, அவன் ட்ரேயில் மாவை போட்டு சமமாக கையிலேயே விரித்து விடவும். ஓரங்களில் விரலால் ஒரே மாதிரியாக அழுத்தி விடவும்.
பீட்ஸா பேஸ் ரெடி.
இப்போது பீட்ஸா மீது சாஸ் தேவையான அளவு தடவிய பின்னர் காய்கறிகளை ஒன்றின் பின் ஒன்றாக தூவவும்.
துருவிய சீஸை தேவையான அளவு பரப்பி விடவும்.
பின் சிறிது எண்ணெய்யை சீஸ் மேல் ஆங்காங்கே சேர்க்கவும்.
பின்னர் பீட்ஸாவின் ஓரங்களிலும் எண்ணெய் தடவி விடவும். இதனால் வேகும் போது கிறிஸ்பியாக இருக்கும்.
பின் ட்ரேவை எலக்ட்ரிக் அடுப்பின் மேல் ஸிம்மில் வைத்து சூடாக்கவும்.
ஃப்ளேம் கொண்ட அடுப்பு எனில் ஃபுல் ஃப்ளேமில் தோசை கல்லை வைத்து அதன் மேல் ட்ரேவை வைக்கவும். ட்ரே நன்கு சூடானதும் எடுத்து விடவும்.
பீட்ஸாவின் ஓரங்கள் பொன்னிறத்தில் மாறி, சீஸ் காய்கறிகளுடன் நன்கு கலந்திருக்கும் போது வெளியே எடுக்கவும்.
இப்போது சூப்பரான பீட்சா ரெடி.
- கேழ்வரகில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன.
- கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.
ராகி எனும் கேழ்வரகு தென்னிந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன. கேழ்வரகில் உள்ள அமினோ அமிலங்கள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும். சரும ஆரோக்கியம், எலும்புகளின் வலிமை, முடி வளர்ச்சி போன்றவற்றுக்கும் கேழ்வரகில் உள்ள சத்துக்கள் பயன்படுகின்றன. கேழ்வரகைக் கொண்டு பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்படும் 'ராகி சிமிலி' செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
எள் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
உப்பு - ¼ தேக்கரண்டி
செய்முறை:
பாத்திரத்தில் கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, நெய் ஊற்றி சப்பாத்திகளாக சுட்டுக்கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எள் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கி பொடித்துக்கொள்ளவும்.
கேழ்வரகு சப்பாத்தி ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் வெல்லம் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகப் பிசையவும். கலவை கையில் ஒட்டும் பதத்தில் வரும்போது உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.
இப்பொழுது சுவையான மற்றும் சத்து மிகுந்த 'கேழ்வரகு சிமிலி' தயார்.