என் மலர்tooltip icon

    சமையல்

    எப்படி செய்தாலும் சுவையாக இல்லையா?- கவலையை விடுங்க உங்களுக்காக சில டிப்ஸ்கள்
    X

    எப்படி செய்தாலும் சுவையாக இல்லையா?- கவலையை விடுங்க உங்களுக்காக சில டிப்ஸ்கள்

    • வாழைப்பூ வடை செய்யும்போது சிறிது பச்சரிசி மாவு சேர்த்தால் வடை உடையாமல் வரும்.
    • புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் சுவை கூடும்.

    தோசை மாவு அரைக்கும் போது, வேக வைத்த சாதத்தையும் சேர்த்து அரைத்தால் தோசை மென்மையாக இருக்கும்.

    தோல் சீவிய இஞ்சை இடித்து தயிரில் சேர்த்தால் தயிர் புளிக்காமல் இருக்கும்.

    வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது புளித்த மோர் சேர்த்தால் பொரியல் மொறுமொறுவென்று இருக்கும்.

    கேரட், பீட்ரூட் அல்வா செய்யும்போது சிறிது பால் பவுடர் சேர்த்து கிளறினால் அல்வாவின் ருசி கூடுதலாகும்.

    வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும் போது வெந்தயத்தை சேர்த்தால் நெய் வாசனை கமகமவென்று இருக்கும்.

    வாழைப்பூ வடை செய்யும்போது சிறிது பச்சரிசி மாவு சேர்த்தால் வடை உடையாமல் வரும்.

    புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் சுவை கூடும்.

    ரசம் தாளிக்க எண்ணெய்க்கு பதில் நெய் ஊற்றி தாளித்தால் ரசம் வாசனையாக இருக்கும்.

    கீரையை சமைத்து இறக்கிய பின்னர் உப்பு சேர்த்தால், கீரையில் உண்டாகும் சில ரசாயன மாற்றங்களை தடுக்கலாம்.

    சாம்பாரில் புளிப்பு அதிகமாகி விட்டால் ஒரு துண்டு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்க்கலாம்.

    பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால் பூரி சீக்கிரம் நமத்து போகாமல் இருக்கும்.

    சாலட் தயாரிக்க தக்காளி நறுக்கும் போது சாறு வெளியேவராமல் இருக்க, தக்காளியின் அடிப்பகுதியில் பிளஸ் போன்று கீறி பின்னர் வட்டமாக நறுக்கலாம்.

    ரசம் வைக்கும்போது கறிவேப்பிலை இல்லை என்றால் சிறிதளவு முருங்கையிலை சேர்த்து இறக்கினால் தனி சுவை தரும்.

    சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும்போது ஒரு டீஸ்பூன் கொள்ளுப்பருப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் உடம்பில் கொழுப்பு சேராமல் இருக்கும்.

    Next Story
    ×