என் மலர்
சமையல்

கூட்டு முதல் சப்பாத்தி மாவு வரை... நீர்த்துப் போன உணவை கெட்டியாக்க எளிய டிப்ஸ்!
- தோசை மாவு நீர்த்துவிட்டால் பாலில் 2 ஸ்பூன் ரவை, அரிசி மாவு சேர்த்து கலந்து விட்டால் கெட்டியாகும்.
- சாதம் குழையாமல் இருக்க, சாதம் வெந்தவுடன் அதில் எலுமிச்சைச் சாறு கலந்து கிளறினால் சாதம் உதிரியாக இருக்கும்.
உணவுகள் நீர்த்துப் போய்விட்டால் அதை எப்படி சமாளிக்கலாம் என்பதை பார்ப்போம்...
* கூட்டு, குழம்பு நீர்த்துவிட்டால், பொட்டுக்கடலை மாவு அல்லது அரிசி மாவை கரைத்து கூட்டு, குழம்பில் ஊற்றி சூடு செய்தால் அவை கெட்டியாகும். ருசியாகவும் இருக்கும்.
* அடை மாவு நீர்த்துவிட்டால் சிறிதளவு கார்ன்பிளேக்ஸ் தூள் கலந்துவிட்டால் மாவு கெட்டியாகிவிடும்.
* குருமா நீர்த்துவிட்டால் ஒரு கைப்பிடி அளவு நூடுல்சை நொறுக்கிப் போட்டு கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும். சிறிது சோளமாவை கரைத்து ஊற்றினாலும் கெட்டியாகும். சுவையாக இருக்கும்.
*கோதுமை அல்வா, மைதா அல்வா செய்யும்போது நீர்த்துவிட்டால் சிறிதளவு சோளமாவு கரைத்து சேர்த்துவிட்டால் கெட்டிப்படும், ருசி கூடும்.
* பொங்கல் நீர்த்துவிட்டால் சிறிதளவு வறுத்த ரவை அல்லது அவலைப் பொடித்து பொங்கலோடு சேர்த்துக் கிளறினால் போதும்.
* தோசை மாவு நீர்த்துவிட்டால் பாலில் 2 ஸ்பூன் ரவை, அரிசி மாவு சேர்த்து கலந்து விட்டால் கெட்டியாகும். புளிப்பும் இருக்காது.
* பருப்பு பாயசம், ஜவ்வரிசி பாயசம் நீர்த்துவிட்டால் அதில் இரண்டு டீஸ்பூன் சோளமாவு அல்லது பால் பவுடர் கரைத்து ஊற்றி கலந்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் போதும்.
* சேமியா உப்புமா நீர்க்க இருந்தால், சிறிது எலுமிச்சைச் சாறு ஊற்றி அடுப்பில் வைத்து கிளறினால் சரியாகும்.
* சாதம் குழையாமல் இருக்க, சாதம் வெந்தவுடன் அதில் எலுமிச்சைச் சாறு கலந்து கிளறினால் சாதம் உதிரியாக இருக்கும்.
* பிசைந்த சப்பாத்தி மாவில் நீர் கூடிவிட்டால் சிறிது மாவு சேர்த்துப் பிசைந்து பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் கெட்டியாகும்.






