என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் கட்சி தலைவர்கள்"

    • அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட முடிகிறது.
    • இனி வருகிற காலங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்படும்.

    ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் விவரம் வருமாறு:-

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:

    உலகெங்கிலும் வாழும் கிறிஸ்துவ பெருமக்கள் இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த நிகழ்வினை நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். கிறிஸ்துவ சமுதாயத்து மக்கள் இந்நாளில் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக அளிக்கின்றனர். இதனால், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட முடிகிறது.

    கிறிஸ்துவ சமுதாயமே மக்கள் மீது அன்பும், பரிவும் காட்டுவதில் அளப்பரிய பங்காற்றி வருகிறது. முதியோர் இல்லங்கள், ஏழை, எளியவர்களுக்கு இலவச கல்வி, மருத்துவ உதவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு புகலிடம் வழங்குவது ஆகியவை இச்சமுதாயத்தின் மிகச் சிறந்த நற்பணிகளாக விளங்கி வருகின்றன. இயேசு பிரான் போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்துவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன்.

    கிறிஸ்துவ சிறுபான்மை சமுதாயத்தினர் ஒன்றிய பா.ஜ.க. அரசால் பாரபட்சத்தோடு நடத்தப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகிறார்கள். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

    மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள காங்கிரஸ் கட்சி கிறிஸ்துவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆதரவாக எப்போதும் செயல்பட்டு வருகிறது. இனி வருகிற காலங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்படும்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

    அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை மட்டுமே போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கும் உள்ள கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, அனைத்து மக்களுக்கும், அனைத்து நன்மைகளும் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக நடந்தே தீரும் என்பது உறுதி.

    இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதும், பின்னர் உயிர்த்தெழுந்து வந்ததும் தனிமனிதரின் வாழ்க்கை அனுபவமல்ல. அது உலகிற்கே சொல்லப்பட்ட பாடம் ஆகும். வாழ்க்கையில் எப்போதும் நன்மையையே செய்யுங்கள்; அதனால் இடையில் சோதனைகள் வந்தாலும் நிறைவில் நன்மையே நடக்கும் என்று உலக மக்களுக்கு நற்செய்தி சொல்வதற்கான நிகழ்வு தான் புனித வெள்ளியும், உயிர்த்தெழுதல் திருநாளும் ஆகும். அதுமட்டுமின்றி, இருள் விரைவாகவே நீங்கும் என்பதும் ஈஸ்டர் திருநாள் சொல்லும் செய்தியாகும்.

    ஈஸ்டர் திருநாளின் நோக்கத்தைப் போலவே தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும்; வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவை பெருக வேண்டும் என்று கூறி, கிறித்தவ சொந்தங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:

    ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகின் இன்றையத் தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் திருநாள் தான் ஈஸ்டர் திருநாள் ஆகும்.

    ஈஸ்டர் நாளில் பரிசளிக்கப்படும் முட்டைகளில் இனிப்புகளும், மிட்டாய்களும் நிறைந்திருக்கும். அவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை. மாறாக, சமூகத்திற்கு வழங்கப்படும் ஈஸ்டர் முட்டைகளில் அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை நிறைந்திருக்க வேண்டும். அது தான் ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.

    ஈஸ்டர் திருநாள் தெரிவிக்கும் செய்தியை பின்பற்றும் வகையில் நாம் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்; தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும். அத்துடன், உலகம் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு தேவையான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவை தழைக்க பாடுபடுவதற்கு அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:

    மூப்பர்களாலும், வேத பாலகர்களாலும் பழி தூற்றப்பட்டு, இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, கன்னத்தில் அறைந்து, வாரினால் அடித்துச் சித்திரவதை செய்து, கபாலஸ்தலம் எனும் கொல்கொதாவில், ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க, இரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றனர்.

    கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது.

    இயேசு உயிர்த்தெழுந்தார், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. அதுபோலவே, ஈழத்திலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும்.

    அன்பையும் கருணையையும் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

    தியாகச்சுடர் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி

    மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாடிநத்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பின் அடையாளமாக விளங்கும் இயேசுபிரான், கொடூரமான முறையில் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் திருநாளாக உலகெங்கிலும் உள்ள

    கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.

    இந்நாளில் கிறிஸ்துவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று அன்பின் திருவுருவான இயேசுபிரானின் கருணைகளை நினைவுகூர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் செடீநுவார்கள்.

    இயேசுபிரானின் போதனைகளான அன்பு, சகோதரத்துவம், சமாதானம், தொண்டு போன்ற உயரிய பண்புகளை அனைவரும் பின்பற்றி, வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன்

    வாடிநந்திட வேண்டுமென்ற என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்துக் கொண்டு, அனைத்து கிறிஸ்துவப் பெருமக்களுக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாடிநத்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன்:

    கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான "ஈஸ்டர் திருநாளை" மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானின் "ஈஸ்டர் திருநாள்" மனித நேயமிக்க கிறிஸ்தவப் பெருமக்கள் மகிழ்வுறும் இனிய நாள்.எத்தகைய துயரங்களையும் தாங்கும் இதயம் கொண்ட இயேசு பெருமானின் மன தைரியத்துடன் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் "சுய சுகாதார பாதுகாப்புடனும்" மகிழ்ச்சியுடனும் "ஈஸ்டர் திருநாளை" கொண்டாடிட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    • தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ் புத்தாண்டு திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,"

    தமிழர்கள் வாழ்வில் நீங்காத இடம் பிடித்திருக்கும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும்.

    சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்.

    சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான். அதிலும் குறிப்பாக சித்திரை முழுநிலவு நாம் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே வழங்கும்; நமது வெற்றியை மட்டுமே பறைசாற்றும். வழக்கம் போலவே இந்த சித்திரையும் நம் வாழ்வில் மகிழ்ச்சியை நிறைக்கும்.

    சங்கக் காலத்தைப் போலவே நிகழ்காலத்திலும் தமிழர்கள் வாழ்க்கை திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றால் நிறைக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக தமிழர்களின் தொழில்கள் சிறக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்; அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும் என வாழ்த்துகிறேன்" என்றார்.

    பாமக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், " இந்திர விழாவை நமக்குக் கொண்டு வரும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

    மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. அவ்வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும்.

    வெயிலைக் கொடுக்கும் சித்திரை தான் இனி வரும் ஆண்டுகளில் நமக்கு வெற்றிகளையும் வழங்கப் போகிறது. சித்திரை வெற்றிகளையே வழங்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையும் கூட. தமிழர்களின் வாழ்வில் வரப்போகும் பல நன்மைகளின் தொடக்கமாக சித்திரை மாதம் திகழ்கிறது.

    சித்திரை மாதத்தின் தொடக்கமான இந்த நாள் தமிழர்களின் வாழ்வில் அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளும் நிறைவதன் தொடக்கமாக அமைய வேண்டும். தமிழர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் நன்மைகள் கிடைக்க சித்திரைத் திருநாள் வகை செய்ய வேண்டும் என்று கூறி சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து கூறுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    பாஜக நிர்வாகி சரத்குமார் தனது வாழ்த்து செய்தியில், "தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் 13வது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நயினார் நாககந்திரன் அவர்களின் பணி சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் லட்சிய பயணம் வெற்றி பெற சூளுரை ஏற்போம்.

    தமிழ் ஆண்டுகளில் உலக நிறைவு என்னும் பொருள் கொண்ட விசுவாசுவ புத்தாண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த இனிய தமிழ்புத்தாண்டானது கடந்த கால சோதனைகளையும், வேதனைகளையும் அகற்றி மக்கள் அனைவர் வாழ்விலும் உயர்வையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும், அன்பு நிறைந்த வளத்தையும், ஆரோக்கியத்தையும் அருள்வதாக அமையட்டும்.

    இனிய சித்திரை புத்தாண்டில் மக்கள் வாழ்வில் வளம் பெருக வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளை என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும் பாஜக சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், " சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இயத இனிய நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி என்னும் பழமையும், இலக்கிய வளமும் நிறையத தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் மாற்றத்திற்கான புதிய சியதனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகள் உருவாகி, தமிழ்நாட்டை அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் அழைத்துச் செல்ல இயத இனிய திருநாளில் உறுதியேற்போம்.

    இயத இனிய தமிழ்ப் புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும், இன்பமும், இனிமையும் இல்லயதோறும் பொங்கட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கிலும் வாழும் அன்புத் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை

    எனது மனமார்யத தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் மனோஜ் மறைவுக்கு இரங்கல்.
    • தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மனோஜ் பாரதிராஜா.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பு ஏற்பட்டு இன்று மாலை காலமானார்.

    இவரது மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் மனோஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறுகையில், " இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான மனோஜ் பாரதி அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

    ஐயா பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    ஓம் சாந்தி!" என குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், " இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்களின் மகனும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா அவர்கள் மரணமடைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    திரைத்துறையில் தனது தந்தையின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மனோஜ் பாரதிராஜா அவர்கள்.

    அன்னாரை இழந்து வாடும் அவரது தந்தை இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" குறிப்பிட்டுள்ளார்.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

    எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறுகையில், ``இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மறைந்த செய்தி ஆழ்ந்த வருத்தமளிக்கிறது.

    இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கும், குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' .

    • தமிழகத்தில் உள்ள இந்த அரசாங்கம் முற்றிலுமாக சட்டம் ஒழுங்கு சீரழிந்த நிலையில் தான் இருக்கிறது.
    • கருத்து சொல்லும் பொழுது பொறுப்பற்ற வகையில் பதில் அளிப்பதே இங்குள்ள சட்டத்துறை அமைச்சர் மற்றும் பலருக்கும் வழக்கமாக உள்ளது.

    நெல்லை:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. இன்று நெல்லை வந்தார்.

    பாளை வி.எம் சத்திரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குற்றங்கள் ஒட்டு மொத்தமாக சமூகத்தில் நடக்கவே நடக்காது என்பதை யாராலும் குறிப்பிட்டு சொல்ல இயலாது. ஆனால் ஒரு அரசாங்கம் குற்ற செயல்களை தடுப்பதற்கும், குற்ற செயல்கள் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி என்பது குறித்தும் உள்ள அரசின் நடவடிக்கையை மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

    ஆனால் தமிழகத்தில் உள்ள இந்த அரசாங்கம் முற்றிலுமாக சட்டம் ஒழுங்கு சீரழிந்த நிலையில் தான் இருக்கிறது.

    ஒவ்வொரு நாளும் நடைபெறக்கூடிய கொலைகள், நெல்லை மாவட்டத்தில் கூட காங்கிரஸ் தலைவர் ஒருவர் இறந்திருக்கிறார். அவர் எவ்வாறு இறந்தார் என்பது கூட இதுவரை தெரியவில்லை.

    தமிழகத்தில் எப்போதும் பாதுகாப்பு இருக்கக்கூடிய அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு கூட இங்கு உத்திரவாதம் இல்லை. அதாவது கட்சியின் மேல் மட்டத்தில் உள்ள தலைவர்கள் உயிருக்கும் கூட பாதுகாப்புக்கு இல்லாத சூழ்நிலை தான் நிலவுகிறது.

    இதுகுறித்து கருத்து சொல்லும் பொழுது பொறுப்பற்ற வகையில் பதில் அளிப்பதே இங்குள்ள சட்டத்துறை அமைச்சர் மற்றும் பலருக்கும் வழக்கமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முரசொலி செல்வம் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார்.
    • முரசொலி செல்வம் உடலுக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினார்.

    முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

    இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அதன்படி, முரசொலி செல்வம் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

    பிறகு, செய்தியளர்களிடம் பேசிய திருமாவளவன், "முதலமைச்சரின் மு.க.ஸ்டாலினின் மனசாட்சியாக திகழ்ந்தவர் முரசொலி செல்வம். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

    முரசொலி செல்வம் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார்.

    முரசொலி செல்வம் உடலுக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினார்.

    முரசொலி செல்வம் உடலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர், "கலைஞரின் எண்ண ஓட்டங்களை எழுத்தில் பிரதிபலிப்பவராக இருந்தார் முரசொலி செல்வம்" என்றார்.

    முரசொலி செல்வம் உடலுக்கு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர், " "திராவிட சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து தொண்டர்களுக்கும் இது பேரிழப்பு" என்றார்.

    முரசொலி செல்வம் உடலுக்கு நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர், " நான் பொன்னர் சங்கர் படம் எடுத்தபோது 5 வருடங்களாக கலைஞரோடு இருந்தேன். அப்போது எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கியவர் முரசொலி செல்வம். அந்த நாட்களை மறக்கவே முடியாது" என்றார்.

    முரசொலி செல்வத்தின் உடலுக்கு நடிகர்கள் விஜயகுமார், அருண் விஜய் அஞ்சலி செலுத்தினர். பிறகு பேசிய விஜயகுமார், " தலைவர் கலைஞருக்கு பக்கபலமாக இருந்து கடைசி வரை பணியாற்றியவர் முரசொலி செல்வம்" என்றார்.

    மூத்த பத்திரிக்கையாளர் முரசொலி செல்வத்தின் உடல் இன்று மாலை 4 மணியளவில் தகனம் செய்யப்படுகிறது.

    ×