என் மலர்
இந்தியா

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா
- ஆம் ஆத்மியின் பெண் எம்.எல்.ஏ. அன்மோல் ககன்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- கரார் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.
ஜெய்ப்பூர்:
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. அன்மோல் ககன்மான் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
கரார் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் தனது ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகர் குல்தார் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பாடகராக இருந்து அரசியலுக்கு வந்த அன்மோல் 2022ல் கரார் தொகுதியில் வென்று எம்.எல்.ஏ. ஆனார். சுற்றுலா மற்றும் கலாசாரம், முதலீடு ஊக்குவிப்பு, தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருந்தார்.
Next Story






