என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்மீத் சிங்"

    • பலாத்கார வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங் கைது செய்யப்பட்டார்.
    • செல்லும் வழியில் ஹர்மீத் சிங் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

    சண்டிகர்:

    பஞ்சாபில் முதல் மந்திரி பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மித் சிங் பதன்மஜ்ரா. கடந்த சட்டசபை தேர்தலில் சானோர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இவர்மீது ஜிரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹர்மீத் சிங்கை கைதுசெய்தனர்.

    இந்நிலையில், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹர்மீத் சிங்கும், அவரது உதவியாளர்களும் போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

    போலீசார் கஸ்டடியில் இருந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஹர்மித் சிங் தப்பி ஓடியது பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தலைமறைவாகி இருக்கும் எம்.எல்.ஏ ஹர்மீத் சிங்கை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் செய்தி சேனல் ஒன்றில் ஹர்மீத் சிங் என்ற சீக்கியர் ஒருவர் முதல்முதலாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். #PakistanNewsChannel #SikhAanchor #HarmeetSingh
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள சாகேசர் பகுதியில் ஹர்மீத் சிங் என்ற சீக்கியர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வருகிறார்.

    இதுதொடர்பாக அந்த செய்தி சேனல் வெளியிட்டுள்ள வீடியோவில், பாகிஸ்தானின் முதல் சீக்கிய செய்தி வாசிப்பாளராக ஹர்மீத் சிங் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு நல்ல குரல் வளமும், ஆளுமைத் திறனும் உள்ளது என தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஹர்மீத் சிங் கூறுகையில், செய்தி துறையில் நான் மதத்தை பார்த்து வேலை பார்ப்பதில்லை. எனது உழைப்புக்கு கிடைத்த பலனாகவே இதை கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, மன்மீத் கவுர் என்ற சீக்கிய பெண், பாகிஸ்தானில் முதல் நிருபராக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. #PakistanNewsChannel #SikhAanchor #HarmeetSingh
    ×