என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "More Plastic wastage"

    • ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
    • மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.

    போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்களைப் பெற்று அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    போகிப் பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2020 முதல் 14.012026 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre) ரப்பர் ட்யூப் (Rubber Tube), நெகிழி (Plastic), காகிதக் கழிவுகள், அட்டைப் பெட்டிகள், மரக்கழிவுகள், உலோகக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.

    மேலும், இதுகுறித்து பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2026 முதல் 14.012026 வரை 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு பெறப்பட்ட பொருட்கள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் (RRC) பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மேலும் பயன்படுத்த இயலாத பொருட்கள் எரியூட்டி சாம்பலாக்கும் எரியூட்டும் ஆலைக்கு (Incinerator Plant அனுப்பப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டப்படும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பல்வேறு மாநிலங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு தடுப்பு நடவடி க்கைகள் தீவிரமாக எடுக்க ப்பட்டு வருகின்றன.
    • மோயர் சதுக்கம் பகுதியில் வன த்துறை சோதனை சாவடி யில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருள்க ளுக்கு தடை விதிக்கப்ப ட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு தடுப்பு நடவடி க்கைகள் தீவிரமாக எடுக்க ப்பட்டு வருகின்றன. மலைப்பகுதிகளில் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் பிளாஸ்டிக் பொருட்கள் முதல் கண்ணாடி பாட்டி ல்கள் வரை திரும்பப் பெரும் நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் வீசிச்செல்லும் பிளாஸ்டிக் குப்பையால் வனவிலங்கு கள் பாதிக்கப்பட்டு வருகி ன்றன. எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு சோதனை சாவடியில் அதை பறிமுதல் செய்கின்றனர்.

    வனத்துறை கட்டு ப்பாட்டில் உள்ள சுற்று லாத்தலமான மோயர் சதுக்கம் பகுதியில் வன த்துறை சோதனை சாவடி யில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு ள்ளது.

    இப்பகுதியில் வன விலங்குகள் அதிகம் என்பதால் இவற்றை விலங்குகள் உண்டு பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டு ள்ளது.எனவே பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை உடனடியாக அப்புறப்ப டுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×