என் மலர்
செய்திகள்
- இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
- விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் தயாரிப்பில் சில தினங்களுக்கு முன் "பூக்கி" என்ற திரைப்படம் வெளியானது. முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், பூக்கி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்த நிலையில், படத்தை திரையரங்கில் தவற விடாதீர்கள் என்று விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வணக்கம், நல்ல சினிமா விரும்பிகளே மற்றும் காதலன் காதலிகளே. நான் POOKIE பூக்கி என்ற ஒரு நல்ல படத்த புது talents வச்சு produce பண்ணி 2 days-க்கு முன்னால release பண்ணிருக்கேன். பூக்கி ஒரு super படம், பாத்தவங்கட்ட கேளுங்க Miss பண்ணாம பாருங்க. அப்புறம், ஒரு நல்ல படத்தை theatre-ல miss பண்ணிட்டோம்னு feel பண்ணாதிங்க, நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.
- மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து இங்குள்ள பெருமாளை பூஜித்து வந்தனர்.
- அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது, திருநாவாய் நவ முகுந்தன் கோவில். 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகவும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. இத்தலத்தில் திருமாலை நினைத்து 9 யோகிகள் தவம் செய்துள்ளனர். இதனால் இத்தலம் 'நவ யோகித்தலம்" என்று அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி 'நாவாய் தலம்' என்றாகி, தற்போது 'திருநாவாய்' எனப்படுகிறது.
முன்னொரு காலத்தில் காடு வழியாக ஒன்பது முனிவர்கள் பயணித்தனர். செல்லும் வழியில் ஒரு இடம் பிடித்துப்போக, அந்த இடத்தில் விஷ்ணுவை வேண்டி தவம் செய்யத் தொடங்கினர். அவர்களில், ஒருவர் பின் ஒருவராக எட்டு முனிவர்கள் முக்தியடைந்தனர். இந்த நிலையில் ஒன்பதாவதாக இருந்த முனிவர் வருத்தம் அடைந்தார். அவர் முன்பாகத் தோன்றிய விஷ்ணு, அவரது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். அம்முனிவர், "இறைவா, என்னுடன் தவமிருந்த எட்டு முனிவர்களும் முக்தி பெற்று விட்டனர். அவர்களுடன் அவர்கள் வழிபட்டு வந்த தங்கள் உருவச் சிலைகளும் மறைந்து போய்விட்டன. அவர்களைப் பிரிந்து நான் மட்டும் தனிமையில் இருப்பதால் வருத்தம் தோன்றுகிறது" என்றார். இறைவன் அவருடைய கவலையைப் போக்க, எட்டு முனிவர்களையும் காட்டியருளினார். அந்த முனிவர்கள், "இறைவன் அருளால் நாங்கள் முக்தி பெற்றுவிட்டாலும், பிறர் கண்களுக்குத் தெரியாமல் இங்கு உங்களோடுதான் இருக்கிறோம்" என்றனர். அதைக்கேட்ட முனிவர் இறைவனிடம், தானும் பிறர் கண்களுக்குத் தெரியாமல் இருக்க அருளும்படி வேண்டினார். இறைவனும் அவர் வேண்டியதை வழங்கினார். அவர் வழிபட்டு வந்த இறைவனின் திருவுருவச் சிலையையும் தன்னுடன் மறைந்து வந்தடையச் செய்யும்படி இறைவனிடம் வேண்டினார்.
இறைவன் "முனிவரே, நானும் இங்கிருந்து தங்களுடன் மறைவாக வந்துவிட்டால், இந்த இடம் ஒன்பது முனிவர்கள் வழிபட்டு முக்தியடைந்த இடம் என்பது மற்றவர்களுக்கு தெரியாமலே போய்விடும். பிறர் கண்களுக்குத் தெரியாத நீங்கள் இங்கிருக்கும் நதியில் நீராடி, இங்குள்ள மலர்களைப் பறித்து இந்தத் திருவுருவச் சிலையினை அலங்கரித்து வழிபட்டு வாருங்கள். பிற்காலத்தில் இந்த இடம் அனைவரும் வழிபடும் சிறப்பு மிகுந்த இடமாகி விடும்" என்றார். பின்பு, இறைவன் ஒன்பதாவது முனிவர் வழிபட்ட திருவுருவச்சிலையின் வடிவிலேயே இங்கு கோவில் கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது.
மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து இங்குள்ள பெருமாளை பூஜித்து வந்தனர். ஒரு சமயம் கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் கிடைக்காமல் போனது. கஜேந்திரன், இதை பெருமாளிடம் கூறி வருந்தியது. உடனே பெருமாள் லட்சுமியை தேவியை அழைத்து, "இனிமேல் பூப்பறிக்க வேண்டாம், கஜேந்திரனுக்காக விட்டுக்கொடு" என்றார். லட்சுமியும் ஒப்புக்கொண்டார். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன், தினமும் ஏராளமான பூக்களைப் பறித்து பெருமாளை அர்ச்சித்து வந்தது. பூஜையின் போது பெருமாள், லட்சுமி தேவியை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து, கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக புராண வரலாறு கூறுகிறது.
கோவில் அமைப்பு
இக்கோவிலில் பெருமாள், 'நாவாய் முகுந்தன்' என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில், முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில், வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார். தாயார் திருநாமம் மலர்மங்கை நாச்சியார். மிகப்பழமையான இக்கோவிலின் உட்புற சுவர்களில் காலத்தால் அழியாத பல ஓவியங்கள் உள்ளன. கோவில் சுற்றுப்பகுதியில் கணபதி, திருமகள், ஐயப்பன் ஆகியோர் சன்னிதிகளும் காணப்படுகின்றன.
துவாபர யுகத்தில் கிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து, தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவுகடந்த புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். மூலவர் நாவாய் முகுந்தன், கால்கள் பாதி உள்ளே பதிந்த நிலையில் அருள்பாலிப்பதால், இங்கே நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள், முட்டியிட்டு பிரதட்சணம் செய்வது வழக்கம்.
அமைவிடம்
கேரளாவின் திரூர் நகரில் இருந்து தெற்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. பாலக்காடு, குருவாயூர், திருச்சூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து திரூர் செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது. திரூரில் இருந்து கோவிலுக்கு பேருந்தில் செல்லலாம்.
- வர்த்தக ஒப்பந்தத்தை விவசாயிகளுக்கு எதிரான துரோகமாக பார்க்கிறோம்- ராகுல் காந்தி
- பால்வளத் துறையை பலவீனப்படுத்தாமல், விரிவுபடுத்தியவர்கள் நாங்கள்தான்- அமித் ஷா
இந்தியா சமீபத்தில் ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலமாக இந்தியாவில் உள்ள விவசாயிகள், விவசாயம் பாதிக்கப்படும் என ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை விவசாயிகளுக்கு எதிரான துரோகமாக பார்க்கிறோம் என்று எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி பொய் பரப்புகிறார். விவசாயிகள் முழுமையாக பாதுகாக்கப்படுகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-
விவசாயிகள் பாதுகாப்பு பற்றி பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி எடுத்த நிலையை பார்க்கும்போது எனக்கு சிரிக்கத்தான் தோன்றுகிறது. நாட்டை தவறாக வழி நடத்தியதற்கான நீண்ட கால வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. தற்போது அவர்கள் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பொய் பரப்பி வருகிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் கையெழுத்தான ஒவ்வொரு வர்த்தக ஒப்பந்தத்திலும், பிரதமர் மோடி உங்கள் நலன்களை முழுமையாகப் பாதுகாத்துள்ளார் என்பதை இந்த நாட்டின் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். கவலைப்படத் தேவையில்லை.
பால்வளத் துறையை பலவீனப்படுத்தாமல், விரிவுபடுத்தியவர்கள் நாங்கள்தான். அனைத்து ஒப்பந்தங்களிலும், பால்வளத் துறைக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி ஜி, எந்த மேடையை வேண்டுமானாலும் முடிவு செய்யுங்கள். பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவர் கூட வந்து விவசாயிகளுக்கு யார் தீங்கு செய்தார்கள், அவர்களின் நலனுக்காக யார் பாடுபட்டார்கள் என்பது குறித்து உங்களுடன் விவாதிக்க முடியும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
- ஜெர்மனியில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் இருவரும் பேசினர்.
- குறைந்த வரியை மீண்டும் உயர்த்துவோம்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது.
ரஷிய எண்ணெயை இந்தியா வாங்காது என அமெரிக்கா கூறி வந்தாலும், இந்தியா தரப்பில் தெளிவான பதில் இல்லை.
இதற்கிடையே ஜெர்மனியில் மியூனிக் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், "ரஷியாவின் எண்ணெய் மீது அமெரிக்கா கூடுதல் தடைகளை விதித்துள்ளது.
இந்தியாவுடனான எங்கள் பேச்சுவார்த்தையில், கூடுதலாக ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை நாங்கள் பெற்றுள்ளோம்" என்றார்.
தொடர்ந்து இதே மாநாட்டில் மற்றொரு அமர்வில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரூபியோவின் கூற்றை நேரடியாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
ஜெய்சங்கர் கூறியதாவது, "இந்தியாவின் முடிவுகள் எப்போதும் அதன் மூலோபாயத் தன்னாட்சி அடிப்படையிலேயே இருக்கும். இது இந்தியாவின் வரலாறு மற்றும் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த ஆழமான கொள்கை.
உலகளாவிய எரிசக்தி சந்தை தற்போது மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. எண்ணெய் கொள்முதல் என்பது அரசியல் அழுத்தத்தின் அடிப்படையில் அமையாது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள், ஐரோப்பிய நிறுவனங்களைப் போலவே, கிடைக்கும் தன்மை, விலை மற்றும் அபாயங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தே முடிவெடுக்கும்" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தப்படி ரஷிய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமா என்ற நேரடி கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு எது சிறந்தது என்று கருதுகிறார்களோ அதையே செய்வார்கள்" என்று முடித்தார்.
இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு 25% இருந்து 18% ஆக குறைந்த வரியை மீண்டும் உயர்த்துவோம் என அமெரிக்கா மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அத்தையின் கணவர், அவரது மகன் மற்றும் தனது தந்தையால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
- சிறுமி 8 வயதாக இருக்கும் போது அவரது தாய்மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
கேரளாவை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவளது தந்தை மற்றும் உறவினர்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவர போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்பிரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, தனது தோழியை சந்தித்த போது கடந்த 4 ஆண்டுகளாக தந்தை மற்றும் உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவதாக கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
விசாரணையில் சிறுமியின் தாய், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தையின் சகோதரி வீட்டில், சிறுமி தங்கினார். அங்கு தான் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
அத்தையின் கணவர், அவரது மகன் மற்றும் தனது தந்தையால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானது தெரிய வந்ததை தொடர்ந்து தந்தை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சிறுமி 8 வயதாக இருக்கும் போது அவரது தாய்மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பான புகாரில் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- புதுச்சேரியில் தி.மு.க., பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- வருகிற தேர்தலில் போட்டியிடுவதற்காக வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை கண்டறியும் வேலையில் தி.மு.க., ரகசியமாக சர்வே நடத்தி வருகிறது.
புதுச்சேரி:
தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் தி.மு.க. - காங்கிரஸ் இடையே இதுவரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கப்படாமல் இழுபறியாக இருந்து வருகிறது.
த.வெ.க. தரப்பில் கூறப்பட்டுள்ள 70 எம்.எல்.ஏ.க்கள் சீட்டு, துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவி உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியை தி.மு.க. பக்கம் செல்ல முடியாத அளவிற்கு நிறுத்தி வைத்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தலைவர் செல்வப்பெருந்தகை மட்டுமே தி.மு.க. கூட்டணிக்கு வலியுறுத்தி வருகிறாரே தவிர ராகுல் காந்தி கூட்டணி குறித்து இதுவரை எதுவும் கூறாமல் உள்ளார்.
இதனால் எரிச்சல் அடைந்துள்ள தி.மு.க. தலைமை கூட்டணி ஆட்சி கிடையாது என பகிரங்கமாகவே தெரிவித்துள்ளது.
இந்நிலையில் த.வெ.க.,வால் தங்களை மதிக்காமல் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியில் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் தி.மு.க., தலைமையிலேயே கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் தி.மு.க., பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் தி.மு.க. தலைமையில் அமைக்கும் அமைச்சரவையில் முதல்-அமைச்சர் அல்லது உள்துறை அமைச்சர் பதவிகளை தி.மு.க.வே வகிக்கும். இதற்கு கூடுதல் இடங்களில் வருகிற தேர்தலில் போட்டியிடுவதற்காக வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை கண்டறியும் வேலையில் தி.மு.க., ரகசியமாக சர்வே நடத்தி வருகிறது.
கடந்த தேர்தல் போல் இல்லாமல் புதுச்சேரியில் கூட்டணியில் 15 இடங்கள் இல்லை என்றால் காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டு, 2 கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தை கூட்டணியுடன் போட்டியிடுவது என தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாகவே கங்கிரஸ் அல்லாத கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. ஆலோசனை நடத்தியுள்ளது.
- நாட்டை தாய்நாடு என்றும், நதிக்கும், நெல்லும் பெண்களின் பெயரை வைப்பது மட்டும் பெருமையல்ல.
- தமிழக பெண் தெய்வங்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும்.
தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரனுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர்," திரிஷா குறித்து அவதூறாக பேசியதற்கு குஷ்பு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது" என்றார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னெடுப்பாக சேலத்தில் தவெக தலைவர் விஜய், சீலநாயக்கன்பட்டி அருகே தாளமுத்து பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய விஜய், "என்னை வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள்; என் வீடு எது தெரியுமா? தமிழ்நாடுதான் என் வீடு. 8 கோடி தமிழக மக்களும் தான் என் குடும்பம். அவர்களுடன் முதல் படை வீரனாக நிற்பதே எனது குறிக்கோள். நான் வாக்கு கேட்க வரவில்லை. மக்களுக்காக நீதி கேட்க வந்துள்ளேன். மற்ற கட்சிகளுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகின்ற நிலையில் எனக்கு தடைகள் விதிக்கப்படுகிறது. கூட்டணிகளை மட்டும் நம்பி இருக்கக் கூடிய 50, 70 வருட கட்சினு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை மீறி, இன்றைக்கு களத்தில் தமிழகத்தில் 30 சதவீத வாக்கு வங்கியுடன் முதன்மை சக்தியாக தவெக உள்ளது" என்றார்.
விஜய்யின் இக்கருத்திற்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களுடன் பேசும்போது, "அரசியலில் பாவம் அவருக்கு அனுபவம் இல்லை. முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும். வெளியே வந்தால் தான் என்ன நடக்கிறது என்பது தெரியும்" என்றார்.
கடந்த 2023-ம் ஆண்டு குஷ்பூ குறித்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதற்கு, தற்போது பாஜகவில் உள்ள குஷ்பு கொதித்தெழுந்து பெண்களை பற்றி தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது வந்தால் அடிப்போம் என்றார்.
ஆனால் இது குறித்து அவர் கண்டனம் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. அதே நேரம் கனிமொழி எம்பி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பெண்களுக்கு உரிய மரியாதையையும், அவர்களுக்கான சமூக அந்தஸ்தையும் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
நாட்டை தாய்நாடு என்றும், நதிக்கும், நெல்லும் பெண்களின் பெயரை வைப்பது மட்டும் பெருமையல்ல. மூத்த அரசியல்வாதியாகவும், தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவாராக உள்ள நயினார் நாகேந்திரன் தன் பேச்சுக்கு தமிழக பெண் தெய்வங்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும்.
நான் எப்போதும் பெண் குழந்தைகளை பிறந்தது முதல் 19 வயது வரை பெண் தெய்வங்கள் என்றும் 19 வயதிற்கு மேல் தேவதைகள் என்றும் சொல்லி வருகிறேன். பெண்களே இந்நாட்டின் ஆணிவேர். அவர்களை மதித்திடுங்கள். அதன் பின் "பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்க வேண்டும் இதுதான் பாஜகவின் கனவு என்று சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 19-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
20-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
21-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே நாளை முதல் 20-ந்தேதி வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் 16 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 17 ஆம் தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதற்கிடையே இன்று முதல் 19-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இந்திய அணியுடன் விளையாட முடியாது என பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது.
- இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று (பிப். 15) இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியுடன் விளையாட முடியாது என பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது. எனினும், பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்ட நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை சென்னை மெரினா கடற்கரையில் ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.
- டிநீர் வசதி, மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், இலவச வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
தாம்பரம்:
தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது முனையமாக மாறிய பிறகு இங்கு தினமும் 2 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் ஆயிரக்கணக்கான பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்கின்றனர்.
இதையடுத்து பயணிகள் வசதிக்காக தாம்பரம் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த காத்திருப்பு அறையை தாம்பரம் ரெயில் நிலைய பொதுமேலாளர் முகமது அப்துல் ரகுமான் திறந்து வைத்தார்.
தாம்பரம் ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவு பகுதியில் இந்த குளிர்சாதன காத்திருப்பு அறை அமைந்துள்ளது. இந்த காத்திருப்பு அறை ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 80 பேருக்கு போதுமான இருக்கை வசதிகள் உள்ளன.
இதன் உட்புறத்தில் மிகவும் சொகுசான சோபா இருக்கை வசதி, சாய்வு நாற்காலிகள் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான ரேக்குகள் ஆகியவை உள்ளன. மேலும் இங்கு பாலூட்டும் அறை வசதியும் உள்ளது. பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.
மேலும் குடிநீர் வசதி, மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், இலவச வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ரெயில் விவரங்களை காட்டும் டிஜிட்டல் காட்சி பலகை மற்றும் பொது அறிவிப்பு அமைப்பு ஆகிய வசதிகளும் உள்ளன. இந்த காத்திருப்பு அறை 24 மணி நேரமும் இயங்கும்.
இந்த அறைக்கு ஒரு மணி நேரத்துக்கான கட்டணம் 35 ரூபாய். 5 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு ரூ.20 கட்டணம் ஆகும். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. இதற்கான 5 ஆண்டுகால உரிமம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன வசதி கொண்ட நவீன காத்திருப்போர் அறையை தொடங்கி உள்ளோம். இதுபோன்று தமிழகத்தில் பயணிகள் வருகை அதிகம் உள்ள 100-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் பயணிகள் காத்திருப்பு அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.
உறுதி செய்யப்பட்ட டிக்கெட் அல்லது ஆர்.ஏ.சி. டிக்கெட் வைத்துள்ள பயணிகள் தங்களது பயண வகுப்பு எதுவாக இருந்தாலும், ரூ.35 கட்டணத்தை செலுத்தி இந்த அறையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன் கூட்டியே பதிவு செய்ய தேவையில்லை. நேரடியாக சென்று கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
- காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர்.
உட்புற வடிவமைப்பு துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வரும் சந்தோஷ் சோபன், எதிர்பார்த்த வாய்ப்பு இல்லாமல் வாழ்க்கையுடன் போராடுகிறார். வாழ்வாதாரத்திற்காக பகுதி நேரமாக இருசக்கர டாக்ஸி ஓட்டி வருகிறார்.
அதே சமயம், ஐடி துறையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் வேலை தேடும் மானசா வாரணாசியை சந்திக்கிறார். இந்த இருவரும், ஒரு கட்டத்தில் ஒரே வீட்டில் தங்கி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இறுதியில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைய காரணம் என்ன? இருவரும் வாழ்க்கையில் சாதித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சந்தோஷ் சோபன் தமிழுக்கு புதிய முகம் என்றாலும், நடிப்பில் புதுமை தெரியாத அளவுக்கு இயல்பை வெளிப்படுத்துகிறார். போராட்டம், நம்பிக்கை, காதல் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
மானசா வாரணாசி, முதல் பாதியில் லேசான நடிப்பு மற்றும் அழகால் ஈர்க்க, இரண்டாம் பாதியில் உணர்ச்சி காட்சிகளில் கவனம் பெறுகிறார். இவர்களின் கெமிஸ்ட்ரி அதிகளவில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.
யோகி பாபுவின் காட்சிகள் குறைவாக இருந்தாலும், வழக்கமான வசன டைமிங் சிரிப்பைத் தருகிறது. சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட துணை நடிகர்கள் கதையின் ஓட்டத்துக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இயக்கம்
காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர். ஒருவருக்கொருவர் துணையாக நிற்பதை அழகாக காண்பித்து இருக்கிறார். வழக்கமான காதல் கதையாக இருந்தாலும், படம் பார்க்கும்போது புது அனுபவத்தை அளிக்கிறது.
திரைக்கதை எளிமையான நகர்வுடன் அமைந்துள்ளது. காதல், கனவு, முயற்சி என்ற மூன்று கோட்டுகளை மையமாக வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார்.
ஒளிப்பதிவு
தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். சென்னையில் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
இசை
ஆதித்யா ரவீந்திரனின் இசை, படத்தின் உணர்ச்சி ஓட்டத்துக்கு பொருத்தமாக உள்ளது. பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பு.
ரேட்டிங்-3.5/5
- தமிழகம் முழுவதும் தமிழக அரசின் இந்த திடீர் பரிசுத்தொகை பேசு பொருளாக மாறி உள்ளது.
- மனைவி ஒப்புதலுடன் மணி ஆர்டர் மூலம் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்து உள்ளார்.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் பெண்களுக்கு தேர்தல் காலத்தில் வரும் 3 மாத உரிமைத் தொகை மற்றும் கோடைகால ஊக்கத் தொகை ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை சேர்த்து ரூ.5 ஆயிரத்தை மொத்தமாக 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
தமிழகம் முழுவதும் தமிழக அரசின் இந்த திடீர் பரிசுத்தொகை பேசு பொருளாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் இதுபற்றி ஒவ்வொரு விதமாக பேசுகின்றன. இதையே சமூகநல ஆர்வலர் ஒருவர் வேறு விதமாக அணுகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையை சேர்ந்த சங்கரபாண்டி என்ற அந்த சமூக ஆர்வலர் தனது மனைவி பெயருக்கு அரசு அனுப்பி இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தையும் மனைவி ஒப்புதலுடன் மணி ஆர்டர் மூலம் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்து உள்ளார்.
இதுபற்றி குறிப்பிட்டு உள்ள அவர் 'கடன் சுமையுடன் இருக்கும் தமிழக அரசுக்கு என் பங்களிப்பாக இருக்கட்டும் என்று கடிதம் எழுதி உள்ளார். தன் பணத்தை திருப்பி அனுப்பியதை சமூக வலைத்தளங்களிலும் அவர் பதிவிட்டுள்ளார். இது பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






