என் மலர்
செய்திகள்
- எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
- டெல்லியில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 145 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மிகப்பெரிய அளவில் திருவிழா போன்று நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தல்கள் முதல் உள்ளாட்சி தேர்தல்கள் வரை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு உற்சாகம் அளித்த ஆண்டாகவே அமைந்தது.
ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
தலைநகர் டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியே அடைந்துள்ளது.

தலைநகர் டெல்லிக்கு பிப்ரவரி மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி அசத்தியது. ரேகா குப்தா முதலமைச்சர் ஆனார்.
தொடர்ந்து 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தலைநகரிலேயே ஒரு இடம் கூட வாங்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் தேய்ந்து வருகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இதேபோல், நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில தேர்தலிலும் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்தது.
பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அசத்தியது. பாஜகவுக்கு 89 இடமும், கூட்டணிக்கு தலைமை தாங்கிய நிதிஷ்குமார் கட்சிக்கு 85 இடமும் கிடைத்தது.
காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதுபோலவே, இந்தியா முழுவதும் நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் காங்கிரஸ் சொல்லிக் கொள்ளும் அளவு வெற்றி பெறவில்லை.
பொதுவாக 2025-ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே அமைந்தது. காங்கிரசுக்கு இந்த ஆண்டு ராசி இல்லாத ஆண்டாகவே முடியப் போகிறது.

சிறந்த ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம். எதிர்க்கட்சிதான் மக்களின் பிரதிநிதியாக, அரசை விழிப்புடன் செயல்படவைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்வதற்கு 543 தொகுதிகளில் குறைந்தது 55 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி இல்லாமல்தான் பா.ஜ.க ஆட்சிசெய்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் 99 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்தியது.
பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில், வரும் தேர்தல்களில் மாநில கட்சிகள் ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளும் குறைந்துவிடும். இதே நிலை மற்ற மாநிலங்களில் நீடித்தால், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்தில்கூட இந்தியா கூட்டணியில் காங்கிரசால் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம். எனவே, இதுபோன்ற சிக்கல்களை சரியாகக் கையாண்டால் மட்டுமே காங்கிரசால் மீண்டும் தீவிர அரசியல் களத்தில் நிலைத்து நிற்க முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
- அஜிதா இன்று முழுவதும் தவெக தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டிருந்தார்.
- தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம்
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவிக்கோரி இன்று முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாலும், தவெக நிர்வாகி அஜிதாவிற்கு அப்பதவி வழங்கப்படவில்லை. தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜை நியமித்தார் அக்கட்சித் தலைவர் விஜய்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் தவெக தலைவர் விஜய். அதன் ஒருபகுதியாக இன்று விடுபட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதே நேரத்தில், தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவர் நியமிக்கப்பட உள்ளார் என்ற செய்தியும் நேற்றே பரவியது.
இதனால் தனக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பெண் நிர்வாகி அஜிதா இன்று முழுவதும் தவெக தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. விஜய் காரை மறித்தும் விஜய் இடமிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை.
இந்நிலையில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கபிலனின் பாடல் வரிகளுக்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.
- இம்மாத இறுதியில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'தலைவன் தலைவி'. அதனைத்தொடர்ந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் டிரெயின். யாரும் எதிர்பார்க்காத மிஸ்கின்-விஜய் சேதுபதி கூட்டணி என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஸ்ருதிஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான கன்னக்குழிக்காரா தற்போது வெளியாகி உள்ளது.
இப்பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். கபிலனின் பாடல் வரிகளுக்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.
- ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
- தீப்தி சர்மா தரவரிசைக்கான 737 புள்ளிகளை பெற்றுள்ளார்.
ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைகள், அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பெண்களுக்கான டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர் வரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளது.
இவர் தரவரிசைக்கான 737 புள்ளிகளை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
பாகிஸ்தான் வீராங்கனை சதியா இக்பால் 732 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீராங்கனை ரேணுகா சிங் தாகூர் 3 இடங்களை சரிந்து 14-வது இடத்தில் உள்ளார். ராதா யாதவ் 15-வது இடத்தில் உள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஜெர்மையா ரோட்ரிக்ஸ் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஷஃபாலி வர்மா 1 இடம் பின்தங்கி 10-வது இடத்தில் உள்ளார்.
ஹர்மன்ப்ரீத் கவுர் 15-வது இடத்தில் உள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளார்.
- Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்
தமிழ்நாட்டின் இளம் சாம்பியன்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடியுள்ளார்.
இளம் தலைமுறை சாம்பியன்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் VIBE WITH MKS நிகழ்ச்சி நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவித்தார்.
- படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டீசர் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகான நடிக்கிறார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக், டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்புகள், பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.
- எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய மந்திரி பியூஸ் கோயலை சந்தித்தார்
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.
தமிழக பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.
இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த மத்தியமந்திரி பியூஸ்கோயலை சந்தித்தார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனு சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்.ஆகிய இருவரையும் கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கும் இடங்களில் இருந்து டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதாவது அதிமுகவுக்கு 170 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மீதமுள்ளவற்றில் பாஜகவுக்கு 23 தொகுதிகளும் பாமகவுக்கு 23 தொகுதிகளும் தேமுதிகவுக்கு 6 தொகுதிகளும் அமமுகவுக்கு 6 தொகுதிகளும் ஒபிஎஸ்க்கு 3 தொகுதிகளும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்படவுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
- 2026 தேர்தலை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளோம்.
- அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்
தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று சென்னை கிண்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் கோயல், இபிஎஸ் இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பியூஷ் கோயல், "சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பு சிறப்பாக நடந்தது. 2026 தேர்தலை எதிர்கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினோம். மக்கள் பணிகள் குறித்தும் ஆலோசித்தோம். மக்களுக்கு வளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோம். வளர்ச்சி, வேலைவாய்ப்பே பாஜகவின் இலக்கு.
2026 தேர்தலை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம். வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும். ஊழல் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை செய்தோம். வரும் 2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்" என்று தெரிவித்தார்.
- ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
- முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்து பரிதாப நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்தின் பேஸ்பால் ஆட்டம் ஆஸ்திரேலியா மண்ணில் எடுபடவில்லை. இங்கிலாந்து வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், 2-ஆவது போட்டிக்கும், 3-வது போட்டிக்கும் இடையிலான கிடைத்த ஓய்வு நாட்களை குடித்து கும்மாளம் அடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக 5 போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் வீரர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள டெஸ்ட் போட்டிகளுக்கு இடையில் சற்று இடைவெளி கிடைப்பதுண்டு. சில டெஸ்ட் போட்டிகள் 5 நாட்களுக்கு முன்னதாகவே முடிவடைந்தால் ஓய்வு நாட்கள் அதிகமாக கிடைக்கும்.
அதேபோல்தான் பிரிஸ்பேனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டிக்கும், அடிலெய்டில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டிக்கும் இடையில் 9 நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது.
இந்த 9 நாட்கள் ஓய்வை இங்கிலாந்து வீரர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள பயன்படுத்தாமல் குடிக்க செலவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.
பெரும்பாலான வீரர்கள் 9 நாட்களில் 6 நாட்கள் குடித்து கும்மாளம் அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்துவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
2-வது டெஸ்ட் முடிவடைந்த டிசம்பர் 7-ந்தேதி முதல் 3வது டெஸ்ட் தொடங்கிய டிசம்பர் 17-ந்தேதி வரையில் குயின்ஸ்லாந்தில் உள்ள நூசா கடற்கரை விடுதியில் நான்கு இரவுகள் இங்கிலாந்து அணி செலவழித்துள்ளது.
2வது டெஸ்ட் முடிவடைந்த பிறகு இரண்டு நாட்கள் பிரிஸ்பேனில் குடிப்பதற்காக செலவழித்துள்ளனர். அதன்பின் நூசா கடற்கரையில் செலவழித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் சாலையோரங்களில் குடித்தவாறு காணப்பட்டுள்ளனர். 3 வீரர்கள் மட்டுமே குடிப்பதில்லை என முடிவெடுத்து நழுவியதாக கூறப்படுகிறது.
4வது டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதியும், 5-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 4-ந்தேதியும் தொடங்குகிறது.
- அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது .
- இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வால்வார்த் தொடர் நாயகி விருதை வென்றார்.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து தென்ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. ஆனால் அந்த அணியின் கேப்டனும், தொடக்க பேட்டருமான லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராகவும், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகவும் சதம் அடித்தார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் 9 இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் மகளிருக்கான ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் முன்னேறினார். ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த ஸ்மிரிதி மந்தனா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து மீண்டும் ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்தார். லாரா வால்வார்த் 2 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 -0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வால்வார்த் தொடர் நாயகி விருதை வென்றார்.
இதன்மூலம் மகளிருக்கான ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் லாரா வால்வார்த் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறினார். ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த ஸ்மிரிதி மந்தனா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
- இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தைகள் முழுமையாக திருந்துவிடப்படும்.
- பால் பொருட்கள் ஏற்றுமதிக்கான வரி விதிப்பை போதுமான அளவிற்கு குறைக்க இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை.
இந்தியா- நியூசிலாந்து இடையில் வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA- Free Trade Agreement) ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தகம் சுதந்திரமான மற்றும் நியாயமான ஒப்பந்தம் இல்லை என நியூசிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி வின்ஸ்டன் பீட்டர்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதை கடுமையாக தங்களுடைய கட்சி எதிர்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொர்பாக வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறுகையில் "வருந்தத்தக்க வகையில் இது நியூசிலாந்துக்கான மோசமான டீல். இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தைகள் முழுமையாக திருந்துவிடப்படும். நியூசிலாந்தின் முக்கியமான பால் பொருட்கள் ஏற்றுமதிக்கான வரி விதிப்பை போதுமான அளவிற்கு குறைக்க இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை. விவசாயிகளிடமும் கிராமப்புற சமூகங்களிடமும் இந்த முடிவை நியாயப்படுத்துவது சாத்தியமற்றது.
நவம்பர் மாதம் நியூசிலாந்தின் பால் பொருட்கள் ஏற்றுமதி ஏறக்குறைய 13.94 பில்லியன் டாலராகும். இது நாட்டின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 30 சதவீதமாகும். இந்த ஒப்பந்தம் முக்கிய பால் பொருட்களை விலக்கும் ஒப்பந்தமாக இருக்கும் என்றார்.
மேலும், குடிபெயர்தல் விவகாரத்தில் நியூசிலாந்து நலனை பாதுகாப்பதில் தோல்வியடைந்து விட்டது என்றார்.
- அவளுடைய எதிர்காலத்திற்கான என் பெற்றோரின் கனவுகளுக்கான இறுதிச்சடங்கு
- ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தானாகவே தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே குற்றமா?
மத்தியப் பிரதேசத்தில் 23 வயது பெண் ஒருவர் தனது சொந்த விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதால், அவரது உருவப்பொம்மையை வைத்து குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்து, அதனை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் உறவுகள், மரபுகள் மற்றும் சமூக சிந்தனை குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரைச் சேர்ந்த சவிதா குஷ்வாஹா என்ற பெண் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் குடும்பத்தினர் அவரை ஊர்முழுவதும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், போலீசிடம் புகாரளித்துள்ளனர். பல நாட்கள் தேடிய பிறகு, போலீசார் சவிதாவைக் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.
போலீசார் சவிதாவை குடும்பத்தினருடன் செல்ல கூறியுள்ளனர். ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த சவிதா, அவர்களுடன் செல்ல விருப்பமில்லை எனவும், தான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், துக்கத்திலும், கோபத்திலும் எடுத்த ஒரு முடிவு இப்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
சவிதாவின் குடும்பத்தினர் அவரைப்போன்றே ஒரு உருவப்பொம்மையை வடிவமைத்து, அதற்கு இறுதி சடங்குகள் செய்து, அதனை சவப்பெட்டியில் வைத்து மேள, தாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து இடுகாட்டிற்கு எடுத்துச்சென்று எரித்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக ஊர்முழுவதும் அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பார்த்த பலரும் ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே குற்றமா? குடும்பம் மற்றும் சமூகத்தின் விதிமுறைகள் ஒருவரின் சொந்த வாழ்க்கையை விட முக்கியமானதாக மாறுகிறதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மறுபக்கம் இதுதொடர்பாக பேசியுள்ள சவிதாவின் சகோதரர், "எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை இது சகோதரியின் இழப்பு மட்டுமல்ல. பல வருட வளர்ப்பு, நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளின் சிதைவு. சவிதா வீட்டில் பாசமாக வளர்க்கப்பட்டார். அவளுடைய ஒவ்வொரு தேவையும், விருப்பமும் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனாலும், அவள் வீட்டை விட்டு வெளியேறியது குடும்பத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது சவிதாவின் இறுதிச்சடங்கு அல்ல. அவளுடைய எதிர்காலத்திற்கான என் பெற்றோரின் கனவுகளுக்கான இறுதிச்சடங்கு" என தெரிவித்தார்.






