என் மலர்tooltip icon

    செய்திகள்

    • SIR தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்துக்கள்.
    • அவர்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஊழலால் நிறைய பணம் சம்பாதித்தவர்கள்.

    பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR நடைபெற்று வருகிறது. அவசர கதியில் செய்யப்படுவதால் படிவத்தை விநியோகித்து, திரும்பப்பெற்று, பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் SIR எதிர்ப்பு பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி,

    "பாஜக SIR ஐ வைத்து குறித்து மத அரசியலில் ஈடுபடுகிறது. ஆனால் SIR தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்துக்கள். எனவே நீங்கள் அமர்ந்திருக்கும் கிளையையே (இந்துக்கள்) வெட்ட வேண்டாம்.

    நான் மேற்கு வங்கத்தில் தேசிய குடிமை பதிவேட்டை (NRC), மக்களை அடைத்து வைக்கும் தடுப்பு முகாம்களையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்

    என் கழுத்தை அறுத்தாலும் சரி, இங்கிருந்து யாரும் விரட்டப்பட மாட்டார்கள். மேற்கு வங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மாநிலமாக இருக்கும்.

    மேலும் வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படாது என்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு எனது பொறுப்பு என்றும் உறுதியளிக்கிறேன்.

    சில விஷமிகள், மாநில அரசு மத வழிபாட்டுத் தலங்களை மசூதிகள் அல்லது கல்லறைகளாகப் பதிவு செய்ததாக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இது ஒரு பொய்.

    ஏஐ தொழில்நுட்பம் இப்போது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் ஒருபோதும் கூறாத அறிக்கைகளைப் பரப்ப என் முகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

    அவர்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஊழலால் நிறைய பணம் சம்பாதித்தவர்கள். பீகாரில், அவர்கள் தந்திரமாக ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தினர். இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. சுயேச்சைகள் வாக்குகளைப் பிரித்தால், இழப்பு உங்களுடையது, நன்மை அவர்களுடையது.

    நான் இன்னும் SIR படிவத்தை பூர்த்தி செய்யவில்லை. உங்கள் அனைவரின் பெயர்களும் சேர்க்கப்பட்ட பின்னரே நான் அதை செய்வேன். உதவ ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உதவி முகாம்களை அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.  

    • இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
    • ஹேடனின் மகள், எங்கள் கண்கள் தப்பித்தது என பதிவிட்டார்.

    இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்றுநடந்தது. இதில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்து. தொடர்ந்து 3ம் நாள் முடிவில் நியூசிலாந்து 417/4 என்ற அளவில் உள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.

    இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை அடித்து சாதித்து காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தனது முதல் சத்தத்தை ரூட் பதிவு செய்தார்.

    முன்னதாக ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார். தற்போது ரூட் சதம் அடித்ததால் ஹைடன் தப்பித்தார்.

    இந்நிலையில் சதம் அடித்து மானத்தை காப்பாற்றிய ரூட்-க்கு தற்போது வர்ணனையாளராக உள்ள ஹைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி எக்ஸ்-இல் பகிர்ந்த வீடியோவில், ஹேடன் நிம்மதியை வெளிப்படுத்தினார்.

    ரூட்டின் முயற்சியைப் பாராட்டிய அவர், "வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியாவில் நீங்கள் சதம் அடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சதம் அடிக்க நீண்ட நேரம் பிடித்துவிட்டது. நீங்கள் சதம் அடிக்கவில்லையெனில், என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிக ஆபத்து இல்லை. அதனால், மீண்டும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

    முன்னதாக ஹேடனின் மகள், "எங்கள் கண்கள் தப்பித்தது" என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பினார்.
    • அதனால்தான் எங்களால் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியவில்லை

    டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவைக் குறிப்பிட்டு, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பினார்.

    அதாவது, நிதின் கட்கரியின் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, ஆனால் அசாமில் அத்தகைய சாலைகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. சுங்க வரி செலுத்தினாலும் அசாம் மக்களுக்கு தரமான சாலைகள் கிடைக்கவில்லை. அதனால்தான் எங்களால் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியவில்லை என்று கோகாய் கூறினார்.

    இதற்கு பதிலளித்த நிதின் கட்கரி, கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்ததை ஒப்புக்கொண்டார். அதாவது, கௌரவ் கோகோய் கூறியது உண்மை என்றும், விசாரணை நடத்தப்பட்டு சாலைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இப்போது நிலைமை சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

    • அருகில் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த 10,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    ஜார்க்கண்ட்டில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவால் 2 பெண்கள்உயிரிழந்தனர்.

    தன்பாத் மாவட்டத்தின் கெண்டுவாடி பஸ்தி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கடந்த 2 நாள்களாக கார்பன் மோனாக்ஸைட் விஷவாயு கசிந்து வருவதாகக் கூறப்படுகிறது.

    இதனால் அருகில் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த 10,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    விஷவாயு தாக்கியதில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு 20-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் விஷவாயு தாக்கியதில் அப்பகுதியை சேர்ந்த பிரியங்கா தேவி என்ற பெண்நேற்று முன் தினம் உயிரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணா லலிதா தேவி என்பவர் நேற்று உயிரிழந்தார்.

    இதனிடையே விஷவாயு பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    அதேநேரம் விஷவாயு கசிவிற்கு பிசிசிஎல் நிறுவனத்தின் அலட்சியமே காரணம் எனக் குற்றம்சாட்டி உள்ளூர்வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    • பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் அனைவரையும் அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
    • மக்களாட்சி விழுமியங்களை நசுக்கும் அராஜகப் போக்கை உடனடியாக கைவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள திரு. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் அமளியில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைதுக்கு அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது என கங்கணம் கட்டிக்கொண்டு, சட்ட நிர்ணயங்களுக்கு முற்றிலும் விரோதமான அரசாக தன்னை நிரூபித்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்துறை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் அனைவரையும் அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறதா இந்த பொம்மை முதல்வரின் அரசு?

    மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் இரு அமர்வுகள் அளித்த உத்தரவுக்குப் பிறகும், திமுக ,அரசு இயந்திரத்தை பயன்படுத்தி இப்படி அடாவடித்தனத்தை கையாள்வதன் மூலம், இதை வேண்டுமென்றே பெரிய பிரச்சனையாக்கி, தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் நோக்கில், தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக குளிர்காயத் துடிப்பது தெள்ளத்தெளிவாகிறது.

    உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுக்குப் பிறகும், ஆட்சியில் இருக்கும் விடியா திமுக-வை மகிழ்விக்கவோ என்னவோ, சில அதிகாரிகளும் இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு செயல்களுக்கு துணைபோவது வருத்தமளிக்கிறது. இத்தகைய செயல்கள், கடும் கண்டணத்திற்குரியது,

    மக்களாட்சி விழுமியங்களை நசுக்கும் அராஜகப் போக்கை உடனடியாக கைவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள திரு. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.   

    • டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்தனர்.
    • மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    நாளை டெல்லியில் நடைபெற உள்ள 23வது இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக இன்று மாலை ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை தந்தார்.

    டெல்லியில் வந்திறங்கிய அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார்.

    டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்து, கலைஞர்களை வாழ்த்தினர். பின்னர், இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார்.

    பிரதமர் மோடி தனது இல்லத்தில் புதினுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறப்பு இரவு விருதுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

    2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து புதினின் முதல் இந்திய வருகை இதுவாகும். எனவே இந்த வருகை சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்கா இந்தியா மீது பல தடைகளை விதித்துள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, புதின் ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு, பின்னர், ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை, பின்னர், மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    நாளை உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் புதின் பங்கேற்பார். 

    • சிஐஎஸ்எப் படையினரை இந்துத்துவா அமைப்புக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்த ஜிஆர் சுவாமிநாதம் உடனே தீபம் ஏற்ற வேண்டும் என கூறி அனுப்பினார்.
    • 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. அதன்படியே அரசு செயல்படுகிறது.

    திருப்பரங்குன்றத்தில் மலையுச்சியுள்ள தூணில் விளக்கேற்ற வேண்டும் என இந்துத்துவா அமைப்பு நபர் தொடந்த வழக்கில் மதுரை கிளை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

    ஆனால் வழக்கப்படி மலையில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் நேற்று தீபம் ஏற்றப்பட்டது. இதனால் உய்ரநீதிமன்ற பாதுகாப்பில் இருந்த சிஐஎஸ்எப் படையினரை இந்துத்துவா அமைப்புக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்த ஜிஆர் சுவாமிநாதம் உடனே தீபம் ஏற்ற வேண்டும் என கூறி அனுப்பினார்.

    ஆனால் காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி அவர்களை தடுக்கவே சிஐஎஸ்எப் வீரர்கள் திரும்பிச்சென்றனர். ஆனால் இந்துத்துவா அமைப்பினர் மலையடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுத்தப்பட்டு காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 2 காவலர்கள் ரத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார்.

    இந்த விவகாரத்தை இன்று மீண்டும் கையில் எடுத்த மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன், நீதிமன்ற அவமதிப்பு என கூறி, இன்று மலையில் தான் சொன்ன இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டார். இதை காரணம் காட்டி மலையேற முயன்ற இந்துத்துவா அமைப்பினருடன் கூட்டு சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    இதில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் பாஜக மாநில தலைவர் நாகேந்திரன், எச் ராஜா உள்ளிட்டோர் கைதாகினர். இன்றும் தீபம் ஏற்றப்படாததால் இந்த வழக்கை இன்று இரவு 10.30 மணிக்கே விசாரிக்க உள்ளதாக மதுரை கிளை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

    ஆனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்றைய உத்தரவு தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிப்பார் என்று உயர்நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    அந்த மனுவில், 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றி, வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்னையாக உள்ளது.

    2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. அதன்படியே அரசு செயல்படுகிறது.

    புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கவே, அங்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வழக்கை மீண்டும் கையிலெடுத்த நீதிபதி, 144 தடை உத்தரவை ரத்து செய்து மீண்டும் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டார்.
    • நயினார் நாகேந்திரனும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

    திருவண்ணாமலை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன், முருகன் மற்றும் விஷ்ணு கோயில்களில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை கார்த்திகை தீபம். நேற்று கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது. அதுபோல மதுரை திருப்பரங்குன்றத்திலும் ஏற்றப்பட்டது.

    ஆனால் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு மாறாக வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

    இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவியது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. போலீசார், போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளு என தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவ சிஐஎஸ்எஃப் வீரர்கள் மலைமீது ஏற அனுமதி மறுக்கப்பட்டது.

    நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டது. இதில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்து, தனி நீதிபதியே வழக்கை விசாரிப்பார் என உத்தரவிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து வழக்கை மீண்டும் கையிலெடுத்த நீதிபதி, 144 தடை உத்தரவை ரத்து செய்து மீண்டும் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டார். காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் பாஜவினர் மற்றும் இந்து அமைப்பினர் சிலர் தீபமேற்ற மலைமீது ஏற முயன்றனர். ஆனால் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக அவர்களிடம் போலீசார் தெரிவித்து மலையேற அனுமதி மறுத்தனர். இதனால் மீண்டும் போலீசாருக்கும் - திருப்பரங்குன்றம் மலைப்பாதை முன்பு கூடியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    போராட்டக்காரர்கள் கலையவில்லை என்றால் கைது நடவடிக்கை தொடரும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விரைந்தனர். நயினார் நாகேந்திரனும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கலைந்து செல்லுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரகுபதி, 2014-ம் ஆண்டின் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 2014-ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அரசு செயல்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு உள்ளது; இது தனி நீதிபதியின் தீர்ப்பு.

    2014ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அறியாமல் புதிதாக ஒரு வழக்கை தொடுத்து தற்போது தீர்ப்பை பெற்றுள்ளனர்.

    திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சனையை உருவாக்குகிறார்கள். மத ஒற்றுமை, மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது.

    ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது பெற்ற தீர்ப்பையே மறந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பா.ஜ.க.வுக்கு முழு அடிமை என்பதை உறுதிசெய்திருக்கிறார் பழனிசாமி.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்தார்.

    இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

    தமிழக அரசு வழங்கிய மேல்முறையீட்டு மனுவில், கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை.

    100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றி, வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்னையாக உள்ளது.

    2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. அதன்படியே அரசு செயல்படுகிறது.

    புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கவே, அங்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

    • தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் ‘தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி’ என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது
    • திருவாதிரை களி சிவபெருமானுக்காக படைக்கப்படும் ஒரு பிரசாதமாகும்.

    கூகுள் தனது பயனர்களால் அதிகம் தேடப்படும் பொருட்கள், பெயர்கள் என அனைத்துவிதமான தேடல்களின் பட்டியலையும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் அதிகம் தேடப்பட்ட A டூ Z அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்திய உணவான இட்லி முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் பத்து இடங்களில் கொழுக்கட்டை, திருவாதிரை களி இடம்பிடித்துள்ளன. முதல் பத்து இடங்களை பிடித்த உணவுகள் குறித்து காண்போம். 

    இட்லி

    இந்த தேடலில் தென்னிந்தியாவின் முக்கிய உணவான இட்லி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வட இந்தியர்கள் என சொல்லலாம். காரணம் தேசியக் கல்விக்கொள்கை, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்புகள் எழுந்த சமயத்தில், இணையத்தில் முக்கியமாக இன்ஸ்டாவில் தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் 'தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி' என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது. அப்போது அதிகம் இட்லி குறித்து தேடப்பட்டிருக்கலாம்.

    Porn star martini 

    இரண்டாவது இடத்தில் Porn star martini உள்ளது. இது ஒரு காக்டெயில். வெண்ணிலா சுவையுள்ள Porn star martini ஷாட் கிளாஸ் ஷாம்பெயினுடன் சேர்க்கப்படுகிறது.

     உகாடிச்சே மோடக்

    உகாடிச்சே மோடக் என்பது வட இந்தியாவில் செய்யப்படும் கொழுக்கட்டை எனக்கூறலாம். விநாயகர் சதுர்த்தியின்போது இது அதிகம் தேடப்பட்டிருக்கும்.

    தேக்குவா (இனிப்பு பிஸ்கட்)

    4ம் இடத்தில் தேக்குவா (இனிப்பு பிஸ்கட்) உள்ளது. இது கஜூரியா, கஜூர் எனவும் அழைக்கப்படுகிறது. கோதுமை மாவில் வெல்லம், நெய், தேங்காய், ஏலக்காய், பெருஞ்சீரகம் போன்ற பொருட்கள் சேர்த்து செய்யப்படுகிறது.

     உகாதி பச்சடி

    உகாதி பச்சடி என்பது உகாதி பண்டிகையின் போது தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் செய்யும் ஒரு சிறப்பு உணவாகும். இது அறுசுவைகளின் கலவையாகும். 

    பீட்ரூட் கஞ்சி 

    6ம் இடத்தில் பீட்ரூட் கஞ்சி உள்ளது. பீட்ரூட்டுடன் கேரட் கடுகு மற்றும் தேவையான மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு உணவு.

    திருவாதிரை

    திருவாதிரை களி சிவபெருமானுக்காக படைக்கப்படும் ஒரு பிரசாதமாகும். இது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது.

    கொழுக்கட்டை

    10ம் இடத்தில் கொழுக்கட்டை உள்ளது. கொழுக்கட்டையை நாம் அனைவரும் அறிவோம். விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு படைக்க செய்யப்படும் முக்கிய உணவாகும்.  

    • கார்த்திகை தீபம் என்பது தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படக் கூடியது.
    • தமிழர்கள் கொண்டாடக்கூடிய பண்டிகையில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் இல்லை என்றார்.

    சென்னை:

    இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    கார்த்திகை தீபம் என்பது தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படக் கூடியது.

    தமிழர்கள் கொண்டாடக்கூடிய பண்டிகையில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் இல்லை.

    தமிழ்நாட்டில் எந்த வழியிலாவது காலூன்ற வேண்டும் என மதவாத சக்திகள் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.

    2014-ம் ஆண்டின் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 2014-ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அரசு செயல்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு உள்ளது; இது தனி நீதிபதியின் தீர்ப்பு.

    2014ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அறியாமல் புதிதாக ஒரு வழக்கை தொடுத்து தற்போது தீர்ப்பை பெற்றுள்ளனர்.

    திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சனையை உருவாக்குகிறார்கள். மத ஒற்றுமை, மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது.

    ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது பெற்ற தீர்ப்பையே மறந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பா.ஜ.க.வுக்கு முழு அடிமை என்பதை உறுதிசெய்திருக்கிறார் பழனிசாமி.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்தார்.

    • சீனாவில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது.

    பீஜிங்:

    சீனாவில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை 2 மில்லியன் மக்கள் உணர்ந்தனர்.

    சீனாவின் கிர்கிஸ்தான்-ஜின்ஜியாங் எல்லைக்கு அருகிலுள்ள அக்கி மாவட்டத்திற்கு அருகில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    • திருப்பரங்குன்றம் மலைப்பாதை முன்பு கூடியவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தல்
    • கலைந்து செல்லுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது

    திருவண்ணாமலை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன், முருகன் மற்றும் விஷ்ணு கோயில்களில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை கார்த்திகை தீபம். நேற்று கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது. அதுபோல மதுரை திருப்பரங்குன்றத்திலும் ஏற்றப்பட்டது.

    ஆனால் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு மாறாக வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

    இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவியது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. போலீசார், போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளு என தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவ சிஐஎஸ்எஃப் வீரர்கள் மலைமீது ஏற அனுமதி மறுக்கப்பட்டது.

    நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டது. இதில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்து, தனி நீதிபதியே வழக்கை விசாரிப்பார் என உத்தரவிட்டனர். அதனைத்தொடர்ந்து வழக்கை மீண்டும் கையிலெடுத்த நீதிபதி, 144 தடை உத்தரவை ரத்து செய்து மீண்டும் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டார். காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

    உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் பாஜவினர் மற்றும் இந்து அமைப்பினர் சிலர் தீபமேற்ற மலைமீது ஏற முயன்றனர். ஆனால் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக அவர்களிடம் போலீசார் தெரிவித்து மலையேற அனுமதி மறுத்தனர். இதனால் மீண்டும் போலீசாருக்கும் - திருப்பரங்குன்றம் மலைப்பாதை முன்பு கூடியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

    போராட்டக்காரர்கள் கலையவில்லை என்றால் கைது நடவடிக்கை தொடரும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விரைந்தனர். நயினார் நாகேந்திரனும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இந்நிலையில் கலைந்து செல்லுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    ×