என் மலர்
நீங்கள் தேடியது "Chennai Sangamam Festival"
- வரவிருக்கும் காலங்களில் திராவிட மாடல் அரசு கலைக்காக இன்னும் பல சாதனைகளை புரியும்.
- கலை நிகழ்ச்சிகள் ஜன.15-18 வரை 20 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 வரை நடைபெறும்
'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை' முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று (ஜன. 14) மாலை தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்கவிழாவில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பறை இசைத்து விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள், மேயர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
"சென்னை சங்கமம் என்பது தமிழ் சங்கமமாக, ஒட்டுமொத்த கலைஞர்களின் சங்கமமாக, வெற்றி சங்கமமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ் கலை, பண்பாட்டு துறை இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. கலைஞர்கள் தங்கள் திறமைகளை மிக எழுச்சியுடன் பறைசாற்றியுள்ளனர். அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது சல்யூட். வரவிருக்கும் காலங்களில் திராவிட மாடல் அரசு கலைக்காக இன்னும் பல சாதனைகளை புரிய இருக்கிறது; புரியும். அதற்காக நான் இந்த இடத்தில் உறுதி அளிக்கிறேன். கலையை வளர்ப்போம், தமிழ்நாடு வெல்லும்." என தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1,500 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் சென்னையில் ஜன.15-18 வரை 20 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 வரை நடைபெற உள்ளன.
- சென்னை சங்கமத்தில் எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.
- சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு திருவிழா.
சென்னை தீவுத்திடலில் இன்று முதல் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேளம் கொட்டி தொடங்கி வைத்தார்.
பிறகு, கலைநிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.
தமிழகத்தின் பாரம்பரியாத்தை பிரதிபலிக்கும் 40 வகையான கலைகளுடன் சென்னை சங்கமம் திருவிழா நடைபெறுகிறது.
சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு சென்னை சங்கமம் திருவிழா நடைபெறுகிறது.
- கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக முதலமைச்சர் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
- தமிழ்நாடு தான் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சென்னையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கிராமிய கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் மீண்டும் சென்னை சங்கமத்தை தொடங்கி நடத்திக்கொண்டு இருக்கிறார்.
8 மாவட்ட தலைநகரங்களில் கிராமிய கலை விழாக்களை நடத்த நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு இருக்கிறார்கள். மேலும் இதை விரிவுபடுத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக முதலமைச்சர் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
கிராமிய கலை விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் மக்களுடைய ஆதரவு பெருகிக்கொண்டு இருப்பது, கிராமிய கலைஞர்களுக்கு பெரிய உந்துசக்தியாக உள்ளது.
டெல்லி மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு,
தி.மு.க.வை பா.ஜ.க. பின்பற்றத் தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாடு தான் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் பல்வேறு முக்கிய திட்டங்களை இன்று மற்ற மாநிலங்களும் பின்பற்றிக்கொண்டிருக்கிறது. இப்போது பா.ஜ.க.வும் பின்பற்ற தொடங்கி இருக்கிறது வாழ்த்துகள் என்று கூறினார்.






