search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை சங்கமம்"

    • சென்னை சங்கமத்தில் எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு திருவிழா.

    சென்னை தீவுத்திடலில் இன்று முதல் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேளம் கொட்டி தொடங்கி வைத்தார்.

    பிறகு, கலைநிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

    தமிழகத்தின் பாரம்பரியாத்தை பிரதிபலிக்கும் 40 வகையான கலைகளுடன் சென்னை சங்கமம் திருவிழா நடைபெறுகிறது.

    சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு சென்னை சங்கமம் திருவிழா நடைபெறுகிறது.

    • சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களும் அமைக்கப்படுகின்றன.
    • சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 5 நாட்கள் சென்னை நகரையே கோலாகலமாக்க உள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழா என்ற கலைவிழா சென்னையில் இன்று தொடங்குகிறது. சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு சென்னை சங்கமம்- நம்ம ஊரு திரு விழாவை தொடங்கி வைக்கிறார்.

    இதையடுத்து நாளை (14-ந்தேதி) முதல் வருகிற 17-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னையின் முக்கிய சந்திப்புகளில் சென்னை மக்களுக்கு விருந்து படைக்கும் வகையில் கிராமிய கலைஞர்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. சென்னையில் 18 இடங்களில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    சென்னை தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், தி.நகர் நடேசன் பூங்கா எதிரில் உள்ள மாநகராட்சி மைதானம் ஆகிய இடங்க ளில் நடத்தப்படுகிறது.

    மேலும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் பழனியப்பா நகர் லேமேக்ஸ் பள்ளி வளாகம், அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் ஆகிய இடங்களிலும் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    சென்னை சங்கமம் விழாவில் நாட்டுப்புற பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு, காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், பறையாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை, ஆலியாட்டம், சேவையாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

    மேலும் பஞ்சாப்பின் பாங்ரா மற்றும் ஜிந்துவா நடனம், ஒடிசாவின் சம்பல்புரி நடனம், மணிப்பூரின் லை ஹரோபா நனடம், காஷ்மீரின் ரூப் நடனம், பரதநாட்டியம், காவடியாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், மேளம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, நாட்டுப்புற ஆடல்- பாடல், வில்லிசை, கையுறை பாவைக்கூத்து, கோல்கால் ஆட்டம், இறை நடனம், தேவராட்டம், கணியான் கூத்து, ஜிம்பளா மேளம், களரி, மெல்லிசை, கட்டைக்கூத்து, நாடகம் உள்ளிட்ட ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படு கின்றன.

    சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கலைப்பொருட்கள் விற்படை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு மூலிகை உணவுகள், கடல் உணவுகள், பாரம்பரிய மசாலாவுடன் கூடிய சுவையான கிராமிய உணவு வகைகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை நகர மக்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலைகளை கண்டுகளிக்கவும், நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் வகையிலும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 5 நாட்கள் சென்னை நகரையே கோலாகலமாக்க உள்ளது.

    • சுமார் 600 கலைஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
    • நாளை முதல் 17ம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை" முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த சுமார் 600 கலைஞர்கள், நம்ம ஊரு திருவிழா துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன்,  சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னை வந்து சங்கமித்துள்ள கலைஞர்கள், நாளை முதல் 17ம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

    • 2011-ம் ஆண்டு வரை சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • சென்னை சங்கமம் நிகழ்ச்சி முக்கியமான இடங்களில் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2007-ம் ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    இந்த விழாவின்போது சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய நடனம், இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    2011-ம் ஆண்டு வரை சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 17-ந்தேதி வரை சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள், கடற்கரைகள் என 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது.

    சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் போது ஒருங்கிணைப்பாளரும், நிறுவனருமான கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    சென்னை சங்கமம் நிகழ்ச்சி முக்கியமான இடங்களில் நடத்தப்படுகிறது. அண்ணாநகர் டவர் பூங்கா, செம்மொழி பூங்கா, நடேசன் பூங்கா, பெசன்ட்நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட 16 இடங்களில் நடக்கிறது. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை நான் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

    இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்காக பணியாற்றி வருகிறார். சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் மயிலாட்டம், பறை, சிலம்பாட்டம், குயிலாட்டம், தெருக்கூத்து, கானா உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் புதிய நாட்டுப்புற கலை வடிவங்களையும், குழுக்களையும் அடையாளம் கண்டுள்ளோம். பன்முகத் தன்மையை வெளிக் கொண்டு வரவும், பாரம்பரிய கலை, நாட்டுப்புற கலை, கானா மற்றும் இசைக்குழுக்கள் இணைந்து பணியாற்ற முடியும் என்பதை தெரிவிக்கும் வகையில் இதன் கருத்துரு உள்ளது.

    கடந்த முறை அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவுடன் நடைபெற்ற நிகழ்ச்சியை போல் அல்லாமல் இந்த முறை அரசே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.

    ஒவ்வொரு முறையும் நிகழ்வுகள் நடைபெறும் போது நாங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டோம். மேலும் பல்வேறு உணவுகள் மற்றும் கலாச்சார உணவு வகைகளுடன் கூடிய உணவுத் திருவிழாவை சேர்த்துள்ளோம். இந்த நிகழ்ச்சியின் மூலம் மாவட்டங்களில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை நகரத்தில் வெளி கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டின் கலாச்சார தனித்துவம் மற்றும் மொழியின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதில் இந்த நிகழ்வு உலகளாவிய அளவில் இருக்கும்.

    சென்னை சங்கமம் நிகழ்ச்சி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு கூடுதல் இடங்களில் நடத்தப்படும். சங்கமம் போன்ற நிகழ்வுகளை மற்ற மாநிலங்களும் நடத்த விரும்பினால் அவர்களுடன் ஒருங்கிணைப்பதில் மகிழ்ச்சி அடைவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நம் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.
    • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனிச் சிறப்பான உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம் பெறுகின்றன.

    சென்னை:

    'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தனித்த அடையாளத்தோடு கலை, பண்பாடு, இலக்கியம் என வாழ்ந்திட்ட தமிழர், பின்னாளில் இனப் பகைவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகி தங்களது அடையாளங்களை மறந்தனர். மறத்தமிழரின் மான உணர்வை பகுத்தறிவால் மீட்டெடுத்து, இன எழுச்சி பெற வைத்தது திராவிட இயக்கம். தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்கும் திராவிட சிந்தனையின் மற்றுமொரு முன்னெடுப்பு தான் 'சென்னை சங்கமம்'.

    தமிழினத் தலைவர் கலைஞர் ஏற்றி வைத்த கலை பண்பாட்டுச் சுடரை அணையாது காத்திடும் விதத்தில் தற்போது "சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா" தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் வரும் ஜனவரி 13-ம் நாள் தொடங்கி 17-ம் நாள் வரையில் அரசு சார்பில் நடைபெற இருக்கிறது.

    வரும் ஜனவரி 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை), சென்னை, தீவுத் திடலில் 'சென்னை சங்கமம்-2023' நிகழ்வை நான் தொடங்கி வைக்கி றேன். 16 இடங்கள், 60-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள், 600-க்கும் மேற்பட்ட மண்ணின் கலைஞர்களை ஒன்றிணைத்து, மீண்டும் வருகிறது 'சென்னை சங்கமம்'.

    பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நம் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. இதோடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனிச் சிறப்பான உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம் பெறுகின்றன.

    இலக்கியத் திருவிழாவும் நடைபெற உள்ளது. நம் தமிழ் மண்ணையும், மக்களையும், மக்களின் கதைகளையும் பேசும் இந்தக் கலைகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு பெருமிதம் கொள்கிறது. 'தமிழர் என்று ஓர் இனம் உண்டு, தனியே அவருக்கு ஒரு குணமுண்டு'. 'கலைகள் யாவிலும் வல்லவனாம், கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்'. இந்த மாபெரும் மக்கள் திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள்! வாருங்கள்! நம்ம ஊரு திருவிழாவில் சந்திப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
    • தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. ஒருங்கிணைக்கிறார்.

    தொடர்ந்து 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த இடங்கள் வருமாறு:-

    தீவுத்திடல், பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், கொளத்தூர், முரசொலி மாறன் மேம்பால பூங்கா, பெரம்பூர், ராபின்சன் பூங்கா, ராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், சிந்தாதிரிப்பேட்டை, டென்னிஸ் விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம், டவர் பூங்கா, அண்ணாநகர், ஜெய் நகர் பூங்கா, கோயம்பேடு, ராமகிருஷ்ணா நகர் விளையாட்டு திடல், வளசரவாக்கம், சிவன் பூங்கா, கே.கே.நகர், கடற்கரை சாலை, திருவான்மியூர், அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், சைதாப்பேட்டை, நடேசன் பூங்கா, தியாகராய நகர்.

    தினமும் கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். அப்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்மையாட்டம், தெருக்கூத்து, கட்டைக் கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம், தோற் பாவைக்கூத்து, சேர்வையாட்டம், தெம்மாங்கு பாட்டு, பெரும் சலங்கையாட்டம், தோடர் நடனம் போன்ற 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

    நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மக்களால் விரும்பி உண்ணப்படும் சுவையான உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில் உணவுத் திருவிழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழாக்கள் நடக்கும் இடங்களில் கிராமிய சூழலை உருவாக்கி, பார்வையாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வண்ணம் உறியடி, பரமபதம், வழுக்கு மரம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    • சென்னையில் 16 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    • மதுரை கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளதாவது

    இந்த ஆண்டு நாட்டுப்புற கலை நிகழ்ச்சியான சென்னை சங்கமம், புதுப்பொழிவோடு நம்ம ஊரு திருவிழாவாக சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஒருங்கிணைப்பில் விழாநிகழ்ச்சிகள் மிளிர இருக்கிறது. வரும் 13ஆம் தேதி துவங்கி, 17ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக சென்னை மாநகரில் இந்த விழா நடைபெறவிருக்கிறது. இதன் தொடக்க விழாவை, 13ந் தேதி மாலை சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமான கலை விழாவோடு முதலமைச்சர் துவங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து வரும் 14ந் தேதி முதல் 17ந் தேதிவரை நான்கு நாட்களுக்கு சென்னையில் 16 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மதுரை கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலும் இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது. மேலும் பஞ்சாப், அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற இதர மாநிலங்களிலிருந்தும், சில நிகழ்ச்சிகளை இணைந்து நம்முடைய ஒருமைப்பாட்டையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சிகள் அமைய இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×