search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namma Ooru Thiruvizha"

    • சென்னையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பிரமாண்டமாக சங்கமம்-நம்ம ஊரு திருவிழா பல்வேறு இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்களை வைத்து கலைஞர்களை தேர்ந்தெடுத்து நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் அளிக்கப்படும்.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறை வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

    சென்னையில் கடந்த பொங்கல் விழாவையொட்டி 4 நாட்கள் 18 இடங்களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நடைபெற்றது.

    இது அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றதால், இந்த ஆண்டு மேலும் 8 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சென்னை, கோவை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திரு நெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் சங்கமம்- கலைத்திருவிழாவை நடத்தும் வகையில் நாட்டுப்புற கலை விழாக்கள் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் முதற்கட்டமாக நடத்தப்பட உள்ளது.

    இந்த கலைவிழா மூலம் 3 ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன் அடைவார்கள்.

    இதைத் தொடர்ந்து சென்னையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பிரமாண்டமாக சங்கமம்-நம்ம ஊரு திருவிழா பல்வேறு இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.

    சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெற விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலைத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிடம் ஓடக்கூடிய வகையில் வீடியோவை குறுந்தகடு அல்லது பென் டிரைவ்-ல் பதிவு செய்து, கலை பண்பாட்டுத்துறைக்கு www.artandculcure.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து எங்களது மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு வரும் அக்டோபர் 6-ந் தேதிக்குள் பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.

    இந்த விண்ணப்பங்களை வைத்து கலைஞர்களை தேர்ந்தெடுத்து நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் அளிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுமார் 600 கலைஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
    • நாளை முதல் 17ம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை" முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த சுமார் 600 கலைஞர்கள், நம்ம ஊரு திருவிழா துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன்,  சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னை வந்து சங்கமித்துள்ள கலைஞர்கள், நாளை முதல் 17ம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

    • 600 கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டு களிக்கலாம்.
    • நாளையும், நாளை மறுநாளும் தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா நாளை (வெள்ளிக் கிழமை) சென்னை தீவுத் திடலில் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் உள்ள 16 இடங்களில் 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்படுகிறது. 600 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டுகளிக்கலாம்.

    தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு திடல், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, ராகேஸ்வர ராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு திடல், அண்ணாநகர் டவர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, திருவான்மியூர் கடற்கரை சாலை, சைதாப்பேட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு திடல், தி.நகர் நடேசன் பூங்கா, எலியட்ஸ் கடற்கரை, மே தின பூங்கா, எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகிறது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    நாளையும், நாளை மறுநாளும் தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்.

    இந்த நம்ம ஊரு திருவிழாவில் கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம் பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    ×