என் மலர்
நீங்கள் தேடியது "மகரஜோதி வழிபாடு"
- அய்யப்பன் வருகிற 17-ந்தேதி வரை திருவாபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.
- 19-ந்தேதி இரவு மகரவிளக்கு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகாலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ந்தேதி தொடங்கி டிசம்பர் 27-ந்தேதி வரை நடந்தது.
அதைத்தொடர்ந்து மகர விளக்கு பூஜை வைபவம் கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்தநிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று (14-ந்தேதி) நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
அதன்பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டது.பின்பு பிற்பகல் 2:45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு 3:08 மணிக்கு மகர சங்கிரம பூஜை தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகமும் நடை பெறுகிறது.
இந்தநிலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் இன்று மதியம் பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கிருந்து மாலையில் சன்னிதானத்திற்கு திருவாபரணங்கள் கொண்டு செல்லப்பட்டன.
மாலை 5:30 மணிக்கு சரங்குத்தியை அடையும் திருவாபரணங்கள், சன்னிதானத்திற்கு 6.15 மணியளவில் கொண்டு வரப்பட்டது. அதனை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, சபரிமலை மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள்.
பின்பு அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு மாலை 6:30 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது பொன்னம்பலமேட்டில் அய்யப்பன் மூன்று முறை ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை லட்சக் கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தார்கள்.
பம்பை ஹில் டாப், சன்னிதான திருமுற்றம், மாளிகப்புரம் கோவில், அன்னதான மண்டபம், பாண்டித்தாவளம், டோனர் இல்ல முற்றம், ஓட்டல் வணிக வளாக பின்புற மைதானம், தரிசன வணிக வளாக பகுதிகள், பி.எஸ்.என்.எல். அலுவலக பின் பகுதி, தேங்காய் சேகரிக்கும் பகுதி, கற்பூர ஆழியின் சுற்றுப்பகுதி, ஜோதி நகர், வனத்துறை அலுவலக பகுதிகள், நீர்வளத்துறை அலுவலக பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து மகரஜோதியை பக்தர்கள் தரிசித்தனர்.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சன்னிதானத்துக்கு திருவாபரணங்கள் கொண்டுவரப்பட்டதை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு பிறகு நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் காலை 11 மணி முதல் பம்பாவில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல அனும திக்கப்படவில்லை. முன் அனுமதி சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மாலையில் அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்ட பிறகே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அய்யப்பன் வருகிற 17-ந்தேதி வரை திருவாபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். 18-ந்தேதி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 19-ந்தேதி இரவு மகரவிளக்கு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.
- மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
- பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தேனி:
சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை முதல்நாள் முதல் மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் தேக்கடியில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ், தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கார்த்திகை முதல் நாள் முதல் மகரஜோதி வரை அய்யப்பன் கோவில் வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதால் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகா ப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
வெளியூர் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தப்பட வேண்டும். மேலும் வாகனங்களில் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள வாகன எண் பலகைகளை மறைக்காத வண்ணம் புகைப்படங்கள் மற்றும் மாலைகளை அணி வித்திருக்க வேண்டும்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். வாடகை வாகனங்களில் அதிக அளவில் பக்தர்களை ஏற்றி செல்லக் கூடாது. பக்தர்கள் சாலை விதிகளை பின்பற்றி, குறிப்பிட்டுள்ள இடங்களில் மாற்று பாதைகளில் செல்ல வேண்டும்.
மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் பசுமை சோதனை சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். பக்த ர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு செல்ல அனு மதிக்க கூடாது. அவ்வாறு பக்தர்களால் கொண்டு வரப்படும் தடைசெய்ய ப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொரு ட்கள், மது, புகையிலை போன்ற பொ ருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க உரிய இடங்களில் விழிப்பு ணர்வு பதாகைகளை வைக்கப்பட வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பி ற்காக போதிய போலீசார் சுழற்சி முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
குறுவனூத்து மற்றும் எரச்சல் பாலம் அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் பக்தர்களை குளிக்க அனுமதிக்க கூடாது. மேலும் பாலத்தின் இருபுறமும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும்.
கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி சார்பாக பக்தர்களுக்கு குடிநீர் வசதி, நடமாடும் கழிவறைகள் ஆகியன அமைக்கப்பட வேண்டும். தமிழக எல்லையில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் சுண்ணாம்பு, பீனாயில் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தக்க சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். பக்தர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வீசப்படும் குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்வதற்கு சுழற்சி முறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
அவசர நிகழ்வுகளுக்காக சுகாதாரத்துறையின் மூலம் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பயிற்சி பெற்ற மீட்பு குழுவினர் தயார் நிலையில் பணியமர்த்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் கேரளா வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை போலீசார் ஆகியோர் இணைந்து உரிய களப்பணி கள் மேற்கொண்டு முன்னே ற்பாடு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
இதில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீண் உமேஷ் டோங்கரே, துணை காவல் கண்காணி ப்பாளர் மதுகுமாரி, இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குரியாகோஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






