என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தே.ஜ. கூட்டணியில் கட்சிகளை இணைக்க ஓய்வுபெற்ற டிஜிபி தலைமையில் குழு - பாஜக அறிவிப்பு
- பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில குழு
- தலைவராக முன்னாள் எம்பியும், மாநில துணைத் தலைவருமான துரைசாமி நியமனம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் கட்சிகளை இணைக்க குழு அமைத்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"வருகின்ற சட்டமன்ற தேர்தல்-2026-ஐ சிறப்பாக எதிர்கொண்டு, மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்த்திட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில குழு அமைக்கப்படுகிறது." என தெரிவித்துள்ளார்.
இக்குழுவிற்கு தலைவராக முன்னாள் எம்பியும், மாநில துணைத் தலைவருமான துரைசாமியும், துணைத்தலைவராக முன்னாள் டிஜிபி பாலச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.






