search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "businessman murder"

    • பழிக்கு பழியாக நடந்த விருதுநகர் தொழிலதிபர் கொலையில் 4 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
    • தலைமறைவானவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மேலத்தெருவை சேர்ந்தவர் குமரவேல் (வயது47). தொழிலதிபரான இவர் நகராட்சியில் மார்க்கெட் குத்தகை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். மார்க்கெட்டில் ஏலம் எடுப்பது தொடர்பான முன்விரோதத்தில் கடந்த மாதம் திருமங்கலம் மையிட்டான்பட்டியை சேர்ந்த அறிவழகன் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக குமரவேலை 8பேர் கொண்ட சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதில் அவரது உறவினர்கள் ரூபி, ராம்குமார் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று கொலை சம்பவத்தில் தொடர்புடைய விருதுநகரை சேர்ந்த சண்முகம் மகன் பால்பாண்டி என்ற பவர் பாண்டி (20), சிவகாசியை சேர்ந்த முத்துவிஜயன் மகன் செல்வம் (20) ஆகிய 2 பேர் சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தனிப்படை போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் விருதுநகருக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் கொலையான குமரவேலின் நடவடிக்கை குறித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்த அல்லம் பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்ற வெங்க டேஷ்வரன்(25), பாலமுத்துகுமார் (22) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்துள்ளனர். இவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • நாமக்கல் வெப்படை அருகே பாதரையில் 22-ம் தேதி கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் கவுதம் சேலம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
    • கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வெப்படை பகுதியில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து பேராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 36). இவருடைய மனைவி திவ்யபாரதி (29). கவுதம் வெப்படையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் அவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராக உள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 9.30 மணிக்கு கவுதம் நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு பாதரையில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டின் அருகே இருட்டான பகுதியில் மறைந்து இருந்த மர்ம நபர்கள், கவுதம் கண்ணில் மிளகாய் பொடியை தூவி தாங்கள் வந்த காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டிவி. காட்சிகள் ஆய்வு மேலும் 6 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    தனிப்படை போலீசார், அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடத்தல் நடந்த நேரத்தில் செல்போன் கோபுரத்தில் இருந்து வெளியான செல்போன் அழைப்பு விபரங்கள் குறித்து செல்போன் நிறுவனங்களிடம் கேட்டு அறிந்தனர்.

    இந்நிலையில், கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் கவுதம் சேலம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    சங்ககிரி அருகே வைகுந்தம் ஏரிக்கரையில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த கவுதமின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வெப்படை பகுதியில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து பேராட்டம் நடத்தி வருகின்றனர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகியான கவுதமை மிளகாய்ப் பொடி தூவி காரில் கடத்திச் சென்று கொன்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வியாபாரியை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி, பெருமாப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கொக்கி கிருஷ்ணன் (வயது 47). இவர் கிழங்கு வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த 21-ந்தேதி கொக்கி கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சேந்தமங்கலம் அருகே உள்ள பொட்டணம் கிராமத்தில் மரூர்பட்டி செல்லும் வழியில் முட்புதரில் வீசப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கொக்கி கிருஷ்ணன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து கண்டுபிடிக்க போலீசார் பொட்டணம் கிராமத்திற்கு சென்று உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தியபோது, ஆத்துக்குழிப்பள்ளம் பகுதியை சேர்ந்த சந்திரா (47) என்பருக்கும், கொக்கி கிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக போலீசார், ஆத்துக்குழிப்பள்ளம் பகுதிக்கு சென்று சந்திராவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கொக்கி கிருஷ்ணனும், சந்திராவும் சேந்தமங்கலம், நாமக்கல், கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிழங்கு வியாபாரம் செய்து வந்தனர். இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சந்திராவின் கணவர் கடந்த ஆண்டு திடீரென மரணம் அடைந்தார். இதனால் சந்திரா தனிமையில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே அவர் கிழங்கு வியாபாரம் தொடர்பாக கொக்கி கிருஷ்ணனுடன் பேசி பழகி வந்தார். நாளடைவில் இது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.

    கொக்கி கிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்திரா வீட்டிற்கு வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கொக்கி கிருஷ்ணன் வியாபாரம் நிமித்தமாக வெளியூர் சென்றபோது, அங்கு வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதனால் சந்திரா வீட்டிற்கு செல்வதை நிறுத்தி விட்டார். இது பற்றி கேட்க அவர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அழைப்பை ஏற்கவில்லை. செல்போன் அழைப்பை துண்டித்து விட்டார்.

    இதற்கிடையே சந்திராவுக்கு, அதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

    கடந்த மாதம் 20-ந்தேதி கொக்கி கிருஷ்ணன் திடீரென சந்திரா வீட்டிற்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த அவரிடம், ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். அதற்கு சந்திரா முடியாது. நீ வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் வைத்துள்ளாய். என்னுடைய வீட்டிற்கு இனிமேல் வராதே என்று கூறினார்.

    இதனால் கொக்கி கிருஷ்ணன் அவருடன், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். உடனே உதவிக்கு சந்திரா, பக்கத்தில் வசித்து வரும் கள்ளக்காதலன் வடிவேலை அழைத்து வந்தார். வீட்டில் வைத்து தகராறு கடுமையாக ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சந்திரா, வடிவேல் இருவரும் சேர்ந்து கொக்கி கிருஷ்ணனை கட்டையால் தாக்கினர். தலையிலும் தாக்கி ,கீழே தள்ளினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த கொக்கி கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர், இறந்து விட்டதை அறிந்த இருவரும் என்ன செய்வதென தெரியாமல் பதறினர்.

    நடந்த இந்த சம்பவம் குறித்து திருமலைப்பட்டியில் வசித்து வரும் தனது மகள் புவனேஸ்வரிக்கு தெரிவித்து, உடனே வீட்டிற்கு வருமாறு கூறினார். மகள் புவனேஸ்வரியும், இரவோடு இரவாக புறப்பட்டு தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு பிணமாக கிடந்த கொக்கி கிருஷ்ணனை ஒரு சாக்குமூட்டையில் கட்டி ஒரு மொபட்டில் வைத்து, தாயும், மகளும் நேராக கொண்டு சென்றனர். பின்னால் வடிவேல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். மரூர்பட்டி செல்லும் வழியில் முட்புதரில் உடலை போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு, எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு சென்று விட்டனர்

    இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சந்திரா உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் அவரை போலீசார் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரது மகள் புவனேஸ்வரி மற்றும் வடிவேல் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×