search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "childrens murder"

    மதுரவாயலில் கடன் பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் கணபதி நகர் தாமஸ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வந்தவர் சிபிராஜ்.

    இவரது மனைவி சைலஜா. இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி (வயது 4) ஆதிதேஷ் (வயது 2) என்கிற இரண்டு குழந்தைகள்.

    இன்று காலை 8.30 மணிஅளவில் கேரளாவில் இருந்து சிபிராஜின் நண்பர் ஜீனத் ஆலப்பாக்கத்தில் உள்ள சிபிராஜின் வீட்டிற்கு வந்தார்.

    கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையறையில் சைலஜா மற்றும் 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு போராடிய சைலஜாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.

    சைலஜா கணவரான சிபிராஜ் கோயம்பேட்டில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். பிப்ரவரி மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிபிராஜ் இறந்து விட்டார். சைலஜா சிபிராஜின் இரண்டாவது மனைவி.

    கடன் பிரச்சனை காரணமாக குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சைலஜா மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக சிபிராஜின் நண்பரான ஜீனத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல் அருகே குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சிறுமலை பசலி கிராமத்தை சேர்ந்தவர் குப்பாண்டி என்கிற பாலு. விவசாயி. அவரது மனைவி செல்லம்மாள் (வயது 28). இவர்களுக்கு பொன்னர் (6), பெரியக்காள் (2) ஆகிய குழந்தைகள் இருந்தனர்.

    கடந்த சிலநாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தும் சண்டை ஓய்ந்தபாடில்லை.

    நேற்று இரவும் வழக்கம் போல் 2 பேருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இதனால் மனமுடைந்த செல்லம்மாள் தற்கொலை செய்வது என்று முடிவு செய்தார். பின்னர் தான் மட்டும் இறந்தால் குழந்தைகள் வாழ்க்கை பாதிக்ககூடும் என கருதி அவர்களையும் கொன்று விட தீர்மானித்தார்.

    இன்று காலை செல்லம்மாள் தனது மனதை கல்லாக்கி 2 குழந்தைகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு வந்தார். அங்கு 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசினார். இதனை அங்கு உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த செல்லம்மாள் கிணற்றில் குதித்தார்.

    ஆனால் சிறிது நேரத்தில் 2 குழந்தைகளும் பிணமாக மிதந்தனர். மலை கிராம மக்கள் செல்லம்மாளை மீட்டனர். அவர் உடனடியாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் பிரதாப், திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசாரும் விரைந்தனர். 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார். #Kundrathur #Abirami

    பூந்தமல்லி, செப். 3-

    சென்னை குன்றத்தூரை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி தனது 2 குழந்தைகளுக்கு பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது.

    அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக அவர் குழந்தைகளை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் அபிராமி, பெற்ற குழந்தைகளையே கொலை செய்யும் அளவுக்கு கொடூர கொலையாளியாக மாறுவதற்கு காரணம் என்ன? என்பது பற்றி பரபரப்பான புதிய தகவல் கள் கிடைத்துள்ளன.

    சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய போது தான் அபிராமி, விஜயை சந்தித்துள்ளார். முதல் பார்வையிலேயே காதல் ஏற்பட்டது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண் டனர். இவர்களின் இல்லற வாழ்க்கையில் அஜய், கார்னிகா என 2 குழந்தைகள் பிறந்தன.

    திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல் வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படை யில் வேலை செய்து வந்தார். ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது.

    இதன் பின்னர் கடந்த 2 மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்து டன் அபிராமி பழக தொடங் கினார். கணவர், வேலை வி‌ஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

    இதனால் 2 பேருக்கும் இடையே நெருக்கம் அதிக மானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.

    இதன்பிறகு இந்த சுந்தரத் துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது.

    இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபி ராமி, நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறியுள்ளார். இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்.

    அபிராமி, சுந்தரம் இருவர் மீதும் கொலை, கூட்டு சதி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர்.

    இந்த வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி தர போலீசார் முடிவு செய்துள் ளனர்.

    இந்த நிலையில் குழந்தை கள் கொலை செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் சுதா கூறும்போது, சிறுவன் அஜய் 3 மாத குழந்தையாக இருக்கும் போதில் இருந்தே எங்களுக்கு தெரியும். 2-வது பெண் குழந்தையும் இங்கேதான் பிறந்தது. குழந்தைகளை கொல்லாமல் விட்டிருந்தால் நாங்களே பாசத்தோடு வளர்த்திருப்போம் என்றார். * * * அபிராமி

    ×