search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "couple suicide"

    • மாரியப்பன் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
    • மாரியப்பன், சித்ரா தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இரணியல்:

    மதுரை பில்லாபுரம் துளசிராம் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55), தச்சுதொழிலாளி. இவரது மனைவி சித்ரா (50). இவரது மகன் மாதேஸ்வரன் (23). இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் பாக்கியராஜ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்பொழுது மாரியப்பன்-சித்ரா தம்பதியினர் குமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    மாரியப்பன் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் மாரியப்பனிடம் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுக்க தொடங்கினார்கள். ஆனால் மாரியப்பனால் பணத்தை திரும்பிக்கொடுக்க முடியவில்லை. இதனால் மாரியப்பன் மனமடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை மாரியப்பன் வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் வந்துள்ளார். அப்போது அவர் மாரியப்பனின் வீட்டின் கதவை தட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் கதவு திறக்கப்படவில்லை. அப்போது வீட்டின் கதவு வழியாக பார்த்தபோது மாரியப்பன் மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மாரியப்பன் மற்றும் அவரது மனைவி சித்ரா தற்கொலை செய்து கொண்டது குறித்து சென்னையில் உள்ள அவரது மகனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    சென்னையில் இருந்து மாதேஸ்வரன் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறார். மாரியப்பன், சித்ரா தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இரணியல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவன், மனைவி 2 பேரும் தனியார் வங்கி ஒன்றில் வீடு கட்ட லோன் வாங்கினர்.
    • வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து 2 பேரும் குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் அடுத்த கரியாஞ் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் நாராயணன்(வயது47). இவரது மனைவி ஈஸ்வரி(44).

    இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கோவில்பாளையத்தில் வசித்து வருகிறார்.

    நாராயணனும், அவரது மனைவி ஈஸ்வரியும் இந்த பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கணவன், மனைவி 2 பேரும் தனியார் வங்கி ஒன்றில் வீடு கட்ட லோன் வாங்கினர். அந்த பணத்தை வைத்து அந்த பகுதியில் சொந்தமாக வீடு ஒன்றையும் கட்டியுள்ளனர்.

    இதுதவிர மேலும் 2 தனியார் வங்கிகளிலும் இவர்கள் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது.

    முதலில் இவர்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டி பணத்தை முறையாக செலுத்தி வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல இவர்களால் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டி தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து வங்கியில் இருந்தும் இவர்களை தொடர்பு கொண்டு பணத்திற்கு வட்டி கட்டுமாறு கூறியதாக தெரிகிறது. பணத்தை கட்ட முடியாததால் கணவன், மனைவி 2 பேரும் கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் காணப்பட்டனர்.

    சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த கணவன், மனைவி 2 பேரும் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தனர். அதன்படி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து 2 பேரும் குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டனர்.

    இதற்கிடையே தாய், தந்தையை பார்ப்பதற்காக கீர்த்தனா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தாய், தந்தை 2 பேரும் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியானார். அவர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாததால், கணவன்-மனைவி 2 பேரும் தற்கொலைக்கு முயற்சி செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரியசாமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிக்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை.
    • நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த கண்ணதாசன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் தாட்கோ காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தா (46). இவர்களுக்கு புனிதா(29) என்ற மகளும், கண்ணதாசன்(26) என்ற மகனும் உள்ளனர். புனிதாவிற்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். கண்ணதாசன் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று கண்ணதாசன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்தபோது, உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

    நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த கண்ணதாசன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பெரியசாமி, சாந்தா ஆகியோர் வீட்டின் விட்டத்தில் ஒயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணதாசன் இதுகுறித்து எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எருமப்பட்டி போலீசார் பெரியசாமி, சாந்தாவின் உடல்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பெரியசாமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிக்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இவருடைய மனைவி சாந்தாவுக்கும் கர்ப்பப்பை கோளாறு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தா தவறி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக அடிக்கடி வலியால் சாந்தாவும், பெரியசாமியும் அவதிபட்டு வந்தனர்.

    இதனிடையே இவர்களது மகன் கண்ணதாசன் மது பழக்கத்திற்கு அடிமையாகி, அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோரின் மருத்துவ செலவிற்கும், குடும்ப செலவுக்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் குடித்துவிட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனால் மனவேதனையில் இருந்த தம்பதி, மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததாலும், நோய் தாக்கத்தாலும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
    • ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் சோகத்துடன் கதறி அழுதது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அப்பிபட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கும் ஐஸ்வர்யா (24) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரபாகரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினர். இதைப் பார்த்ததும் அவரது 2 குழந்தைகளும் கதறி அழுதனர்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஓடைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் சோகத்துடன் கதறி அழுதது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    • போலீசார் கனகராஜை தொடர்பு கொண்டு மனைவி தற்கொலை தொடர்பாக விசாரணைக்கு போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.
    • போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பனூரை அடுத்த ஆலங்குட்டை ஏ.டி. காலனியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 27). இவருக்கும், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சங்கீதா (26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பின் கடந்த 2 மாதங்களாக அவர்கள் சங்கீதாவின் ஊரிலேயே வசித்து வந்தனர். நேற்றுமுன்தினம் கனகராஜ், தனது சொந்த ஊருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். நேற்று மாலையில் சங்கீதாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவர் போனை எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் பக்கத்து வீட்டுக்கு போன் செய்து தனது மனைவி போனை எடுக்கவில்லை, எனவே வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினர். இதனையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சங்கீதாவின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் வீட்டிற்குள் தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து போலீசார் தற்கொலை செய்து கொண்ட சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் கனகராஜை தொடர்பு கொண்டு மனைவி தற்கொலை தொடர்பாக விசாரணைக்கு போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். இதனால் பயந்த அவர் குப்பனூர் ஆலங்குட்டை பகுதியில் உள்ள கரியன் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கீதா எதனால் தற்கொலை செய்து கொண்டார், கணவன்-மனைவி பிரச்சனை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை தேடினார்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் கனகராஜ் தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கிறார்கள்.

    • பொன்னுதாஸ் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்த நபர்களிடம் சுமார் ரூ.1 கோடி வரை கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது.
    • பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் யார்? யாரேனும் மிரட்டினார்களா? யார் யாரிடம் கடன் பெற்றனர்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ்(வயது48). திருமுடிவாக்கத்தில் ஏ.கே.ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி ஜான்சி ராணி(45). குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் கல்லூரியிலும் மற்றொருவர் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். வழக்கம் போல் பள்ளி-கல்லூரிக்கு சென்ற இருவரும் நேற்று மாலை வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டில் உள்ள அறையில் தந்தை பொன்னுதாஸ், தாய் ஜான்சிராணி ஆகியோர் தனித்தனியாக மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோரின் உடல்களை பார்த்து மகன்கள் இருவரும் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பொன்னுதாஸ், ஜான்சிராணி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    பொன்னுதாஸ் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்த நபர்களிடம் சுமார் ரூ.1 கோடி வரை கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை.

    இதனால் பணத்தை கடன் கொடுத்தவர்கள் பொன்னுதாசுக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி அவர் தனது மனைவியிடம் கூறி கவலை அடைந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளனர்.

    அவர்களுக்கு பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் யார்? யாரேனும் மிரட்டினார்களா? யார் யாரிடம் கடன் பெற்றனர்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    • சின்னசேலம் அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    • கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னசேலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் (வயது65) இவரது மனைவி செல்லம்மாள் (59) . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் இளைய மகன் கோவிந்தராஜ் சில வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தபோது நயினார் பாளையம் அருகே உள்ள ஈரியூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிய கோவிந்தராஜ், செல்வத்துடன் சேர்ந்து 2020 ஆம் ஆண்டு 17 லட்சத்திற்கு நெல் அறுவடை எந்திரம் வாங்கி தொழில் செய்து வந்துள்ளனர். அப்போது 17 லட்சம் ரூபாயை செல்வம் 8 1/2 லட்சம் ரூபாயும், கோவிந்தராஜ் 8 1/2 ரூபாயும் கடனாக பிரித்துக் கொண்டனர்.

    இந்நிலையில் செல்வத்திடம் இருந்த நெல் அறுவடை எந்திரத்தை கோவிந்தராஜ் மேலூரில் உள்ள தனது வீட்டில் நிறுத்திக் கொண்டார் என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் செல்வம் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் நெல் அறுவடை எந்திரத்தை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் நேற்று கோவிந்தராஜ் மற்றும் அவரது தந்தை ரங்கன், தாயார் செல்லம்மாள் ஆகியோரை அழைத்து விசாரித்துள்ளனர்.

    அதன்பின்பு செல்வம் மீது கோவிந்தராஜ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனு மீது இரு தரப்பினருக்கும் இன்று விசாரணை செய்யப்படுவதாக இருந்த நிலையில் நேற்று இரவு ரங்கன் அவரது மனைவி செல்லம்மாள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இருவரது உடலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவி இருவரும் மகன் வாங்கிய கடனுக்காக மன உளைச்சலால் இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னசேலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவன்-மனைவி இருவரும் சில மாதமாக கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தனர்.
    • ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிதறிக் கிடந்த உடல்களை மீட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ரமனப்பள்ளியைச் சேர்ந்தவர் சாய்குமார் ரெட்டி (வயது 29), குடிநீர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி ஹேமமாலினி (28). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    ஹேமமாலினி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இருவரும் கடப்பா நகர் விஜய துர்கா காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    ஹேமமாலினி மரியாபுரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றினார்.

    கணவன்-மனைவி இருவரும் சில மாதமாக கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து வாழ்வதைவிட சாவது மேல் என நினைத்து தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தனர்.

    இருவரும் நேற்று இரவு கடப்பா புறநகர் பகுதியான கனுமலோபள்ளி ரெயில் நிலையம் அருகே சென்றனர். அப்போது வந்த ரெயில் முன்பு கணவன் மனைவி இருவரும் கட்டிப்பிடித்தபடி பாய்ந்தனர்.

    இதில் உடல் சிதறி இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் கணவன்-மனைவி ரெயிலில் சிக்கி இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

    ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிதறிக் கிடந்த உடல்களை மீட்டனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த வெள்ளிக்கிழமை அசோக்கின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
    • நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் சந்தியா ஆலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவர்லா மண்டலம் தேவாரம் பள்ளியை சேர்ந்தவர் அசோக் (வயது 25).

    இவர் தனது சகோதரர் ராகவேந்தருடன் இணைந்து ஆட்டோவில் காய்கறியை கொண்டு சென்று ஊர் ஊராக விற்பனை செய்து வந்தார். ஆளூர் பகுதியை சேர்ந்த நாகம்மா மகள் சந்தியா (22). இவர் ஆலூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார்.

    கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அசோக், சந்தியா வேலை செய்யும் துணி கடைக்கு அடிக்கடி சென்று வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.

    பின்னர் இருவரும் கடந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். கணவன்-மனைவி இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அம்முலு என்று பெயரிட்டனர்.

    இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அசோக்கின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் சந்தியா ஆலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் காய்கறி வியாபாரத்திற்கு சென்ற அசோக் நேற்று அதிகாலை 4 மணிக்கு சந்தியாவின் தாய் வீட்டிற்கு வந்தார்.

    அதுவரை தனது தாயுடன் படுத்திருந்த சந்தியா குழந்தையை தூக்கிக் கொண்டு கணவருடன் வேறு ஒரு அறைக்கு சென்றார். பொழுது விடிந்து நீண்ட நேரம் ஆகியும் சந்தியா அறையில் இருந்து வெளியே வராததால் அவரது தாய் சந்தியாவின் செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டார்.

    ஆனால் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் கதவை உடைத்து பார்த்த போது அசோக், சந்தியா அவர்களது குழந்தை அமுலு ஆகியோர் அறையில் இருந்த இரும்பு கம்பியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பார்த்தபோது அவர்கள் இறந்து போனது தெரியவந்தது. 3 பேரின் உடல்களையும் பார்த்து சந்தியாவின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் கதறி துடித்தனர். கணவன் மனைவி 2 பேரும் சேர்ந்து முதலில் குழந்தையை தூக்கில் தொங்க விட்டு கொன்று பின்னர் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சின்னத்துரையின் மகள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் மகள் சென்றதும் தெரியவந்தது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கீழ வல்லநாடு, செட்டி மல்லன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது45). இவரது மனைவி சங்கரம்மாள் (40). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

    இந்நிலையில் சங்கரம்மாள் நேற்று இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்த சின்னதுரை அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் சாயர்புரம் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார். அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ரூரல் டி.எஸ்.பி. சத்யராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சின்னத்துரையின் மகள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் மகள் சென்றதும் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கம்மர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாசி(வயது60). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவரது மனைவி பூங்கொடி(55). இவர்களுக்கு பாரதி என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 10-ந்தேதியும் மாசி, பூங்கொடி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பூங்கொடி தற்கொலை செய்யப்போவதாக கூறி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் மாசி, நீ மட்டும் தான் விஷம் குடிப்பியா, நானும் குடிப்பேன் என்று கூறி மனைவியின் கையில் மீதம் இருந்த விஷத்தை அவரும் பிடுங்கி குடித்தார்.

    இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூங்கொடி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் மாசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மாசியும் உயிரிழந்தார்.

    குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வருமானம் இல்லாததாலும், உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும் தவித்து வந்த கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாப்பா (60). இந்த தம்பதிக்கு சுமதி (32) என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

    முருகேசன், பாப்பா தனியாக வசித்து வந்த நிலையில், முருகேசனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை நடந்ததாக தெரிகிறது. மேலும் கணவன், மனைவி இருவரும் வயதான நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்து வந்தனர். மேலும் உடல் நலமும் பாதிக்கப்பட்டதால் இருவரும் மன விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே நேற்று இரவு, முருகேசன் மற்றும் அவரது மனைவி பாப்பா ஆகியோர் வீட்டில் விஷம் கு டித்து மயங்கி கிடந்தனர். அப்போது முருகேசனின் தம்பி மகன், அவர்களது வீட்டுக்கு வந்துள்ளார். கணவன், மனைவி இருவரும் இறந்து கிடந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அவர்களை, உறவினர்கள் உதவியுடன் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகேசனும், பாப்பாவும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருமானம் இல்லாததாலும், உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும் தவித்து வந்த கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×