என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாமகிரிப்பேட்டை அருகே கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை
- வருமானம் இல்லாததாலும், உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும் தவித்து வந்த கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாப்பா (60). இந்த தம்பதிக்கு சுமதி (32) என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.
முருகேசன், பாப்பா தனியாக வசித்து வந்த நிலையில், முருகேசனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை நடந்ததாக தெரிகிறது. மேலும் கணவன், மனைவி இருவரும் வயதான நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்து வந்தனர். மேலும் உடல் நலமும் பாதிக்கப்பட்டதால் இருவரும் மன விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று இரவு, முருகேசன் மற்றும் அவரது மனைவி பாப்பா ஆகியோர் வீட்டில் விஷம் கு டித்து மயங்கி கிடந்தனர். அப்போது முருகேசனின் தம்பி மகன், அவர்களது வீட்டுக்கு வந்துள்ளார். கணவன், மனைவி இருவரும் இறந்து கிடந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர்களை, உறவினர்கள் உதவியுடன் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகேசனும், பாப்பாவும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருமானம் இல்லாததாலும், உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும் தவித்து வந்த கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்