search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    3 மாத குழந்தையை தூக்கிலிட்டு கொன்று கணவன்-மனைவி தற்கொலை
    X

    3 மாத குழந்தையை தூக்கிலிட்டு கொன்று கணவன்-மனைவி தற்கொலை

    • கடந்த வெள்ளிக்கிழமை அசோக்கின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
    • நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் சந்தியா ஆலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவர்லா மண்டலம் தேவாரம் பள்ளியை சேர்ந்தவர் அசோக் (வயது 25).

    இவர் தனது சகோதரர் ராகவேந்தருடன் இணைந்து ஆட்டோவில் காய்கறியை கொண்டு சென்று ஊர் ஊராக விற்பனை செய்து வந்தார். ஆளூர் பகுதியை சேர்ந்த நாகம்மா மகள் சந்தியா (22). இவர் ஆலூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார்.

    கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அசோக், சந்தியா வேலை செய்யும் துணி கடைக்கு அடிக்கடி சென்று வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.

    பின்னர் இருவரும் கடந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். கணவன்-மனைவி இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அம்முலு என்று பெயரிட்டனர்.

    இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அசோக்கின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் சந்தியா ஆலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் காய்கறி வியாபாரத்திற்கு சென்ற அசோக் நேற்று அதிகாலை 4 மணிக்கு சந்தியாவின் தாய் வீட்டிற்கு வந்தார்.

    அதுவரை தனது தாயுடன் படுத்திருந்த சந்தியா குழந்தையை தூக்கிக் கொண்டு கணவருடன் வேறு ஒரு அறைக்கு சென்றார். பொழுது விடிந்து நீண்ட நேரம் ஆகியும் சந்தியா அறையில் இருந்து வெளியே வராததால் அவரது தாய் சந்தியாவின் செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டார்.

    ஆனால் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் கதவை உடைத்து பார்த்த போது அசோக், சந்தியா அவர்களது குழந்தை அமுலு ஆகியோர் அறையில் இருந்த இரும்பு கம்பியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பார்த்தபோது அவர்கள் இறந்து போனது தெரியவந்தது. 3 பேரின் உடல்களையும் பார்த்து சந்தியாவின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் கதறி துடித்தனர். கணவன் மனைவி 2 பேரும் சேர்ந்து முதலில் குழந்தையை தூக்கில் தொங்க விட்டு கொன்று பின்னர் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×