search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முறப்பநாடு அருகே கணவன்-மனைவி தற்கொலை
    X

    முறப்பநாடு அருகே கணவன்-மனைவி தற்கொலை

    • கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சின்னத்துரையின் மகள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் மகள் சென்றதும் தெரியவந்தது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கீழ வல்லநாடு, செட்டி மல்லன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது45). இவரது மனைவி சங்கரம்மாள் (40). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

    இந்நிலையில் சங்கரம்மாள் நேற்று இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்த சின்னதுரை அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் சாயர்புரம் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார். அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ரூரல் டி.எஸ்.பி. சத்யராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சின்னத்துரையின் மகள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் மகள் சென்றதும் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×